Wednesday, September 30, 2009

கினியாவில் 157 பேரை சுட்டுக் கொன்ற ராணுவ வீரர்கள்: பெண்களையும் கற்பழித்தனர்

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் சர்வாதிகாரியாக ராணுவ தளபதி மவுநசா டேடில் இருந்து வருகிறார். அவருக்கு எதிராகவும், ராணுவ ஆட்சிக்கு முடிவு கட்ட வலியுறுத்தியும் அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று கினியாவின் தலைநகரான கோனாக்ரியில் போராட்டம் நடத்தப்பட்டது.

இது கலவரமாக மாறியது. இதை தொடர்ந்து போராட்டக்காரர்களை ஒடுக்க ராணுவ வீரர்கள் சரமாரியாக கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

அதில், 157 பேர் பரிதாபமாக இறந்தனர். 1200 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் அங்குள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை ராணுவ வீரர்கள் கற்பழித்தனர். இந்த தகவலை அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் முதார் டயல்லோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த மனித உரிமைகள் கண்காணிப்பு குழுவினரும் இதை உறுதிப்படுத்தியுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கத்தியாலும், துப்பாக்கியில் பொருத்தப்பட்டுள்ள கத்தியாலும் ராணுவ வீரர்கள் குத்தி துன்புறுத்தினர் என்றும் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com