Thursday, September 17, 2009

இலங்கையின் செயற்பாடுகளில் ஐ.நா மிகவும் அதிருப்தி அடைந்துள்ளதாம்.

இலங்கையில் யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள் குடியேற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் செயற்பாடுகளில் காணப்படும் மந்தநிலை தொடர்பாக ஐ.நா மிகவும் அதிருப்தி அடைந்துள்ளதாக ஐ.நா வின் மனித உரிமைகள் செயலகத்தின் பொதுச் செயலாளர் ஜோன் கோல்மஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கு உள்ள குறைபாடுகள் மற்றும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயங்கள் தொடர்பாகவும் ஐ.நா அக்கறை கொண்டுள்ளதுடன் எவ்வித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது ஊழியர் தொடர்பாவும ஐ.நா கவலை கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வீடியோவைப் பார்வையிட

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com