Thursday, September 24, 2009

நீதி அமைச்சரின் வாகனத்தில் கள்ளச்சாராயம் கடத்தல்.

கொழும்பு துறைமுகத்தில் உள்ள வரிவிலக்கு விற்பனை நிலையம் ( Duty Free shop) ஒன்றில் இருந்து சட்டவிரோதமாக சாராயப் போத்தல்களைக் கடத்திச் சென்ற நீதி அமைச்சுக்குச் சொந்தமான வாகனம் ஒன்று சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அமைச்சகத்திற்கு சொந்தமான 63-2558 எனும் இலக்கத்தை உடைய வாகனமும் அதன் சாரதி எச்.எம். பண்டார வும் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்த போதிலும், உயர் மட்டத்தில் இருந்து வந்த அழுத்தம் காரணமாக சாரதி விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வாகனம் சுங்க அதிகாரிகளால் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

வரி விலக்கு விற்பனை நிலையங்களில் வெளிநாட்டு பிரஜைகளே பொருட்களை வாங்கமுடியும். ஆனால் குறிப்பிட்ட நிலையங்களில் இருந்து மேற்படி வியாபாரம் பன்நெடுங்காலங்களாக இடம்பெற்று வருவதாக கைது செய்யபட்டிருந்த சாரதி தெரிவித்ததாக சுங்கத் திணைக்களத்தினர் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும் குறிப்பிட்ட சட்டவிரோத செயல்தொடர்பாக சுங்க அதிகாரிகள் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். சுங்கத் திணைக்களத்தின் சார்பாக சட்தத்தரணி லலித்த வீரசிங்க இவ் வழக்கை பதிவு செய்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com