Wednesday, September 2, 2009

வாஸின் மனைவிக்கு விசேட சலுகைகள் இல்லை. சிறைச்சாலைப் பேச்சாளர்.

தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த மாணவன் நிபுண ராமநாயக தாக்கப்பட்ட விடயம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வாஸ் குணவர்த்தனவின் மனைவிக்கு சிறச்சாலை வாட்டாரத்தினரால் விசேட சலுகைகள் வழங்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றது.

குறிப்பாக நேற்று கடுவல நீதிமன்றில் குற்றவாளிகள் 14 பேரும் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 15 ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்களை சிறைச்சாலைக்கு அழைத்துச்சென்ற சிறைக்காவலர்கள் வாஸின் மனைவிக்கு விலங்கிடாமல் அழைத்துச்செல்வதை படம் பிடித்துள்ளனர்.

இதைபிரதான குற்றச்சாட்டாக கொண்டு இணையத்தளம் ஒன்று சிறைச்சாலைப் பேச்சாளர் கென்னத் பெர்ணான்டோ அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, சந்தேக நபர் ஒருவருக்கு கைவிலங்கு இடுவது தொடர்பாக முடிவு செய்வதற்கான பூரண அதிகாரம் அவரை அழைத்துச் செல்கின்ற அல்லது பாதுகாப்பு வழங்குகின்ற அதிகாரிக்கு உண்டு எனவும் இது சந்தேச நபர் தப்பியோடுவதற்கு முயற்சிப்பார் என உருவாகும் சந்தேகத்தில் தங்கியிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com