Friday, September 18, 2009

5 வள்ளங்களில் 21 இந்திய மீனவர்கள் கைது. கடற்படை பேச்சாளர்.

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த 21 இந்திய மீனவர்களை 5 வள்ளங்களுடன் கடற்படையினர் கைது செய்து மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படைப்பேச்சாளர் டி.பி.கே தசநாயக்க தெரிவித்துள்ளார். பொலிஸார் அவர்களை வழமையான நடைமுறைகளின் ஊடாக நீதிமன்றில் ஆஜர் செய்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேநேரம் இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு அவர்களை தாக்கியதாக சர்வதேச உடகங்கள் தெரிவிக்கின்றன: இக்கருக்தை கடற்படைப் பேச்சாளர் முற்றாக மறுத்துள்ளார்.

அத்துடன் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனக்கோரி இந்தியாவில் பகிஸ்கரிப்புக்கள் ஆரம்பமாகியுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com