Friday, September 18, 2009

ஐ.ம.சு முன்னணி காலி மாவட்ட வேட்பாளருக்கு பிடிவிறாந்து.

நான் யாருக்கும் பயப்படமாட்டேன் என்கின்றார் அனர்க்கலி.
தென் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக காலி மாவட்டத்தில் போட்டியிடும் முன்னால் தென்மாகாண சபை முதல் அமைச்சர் நிசாந்த முத்துகெட்டிகம விற்கு காலி நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பித்துள்ளது.

தென்மாகாண சபைக்காக அதே மாவட்டத்தில் போட்டியிடும் சக வேட்பாளரான அனர்க்கலி அவர்களுக்கு, மரண அச்சுறுத்தல் விடுத்ததாக அனர்க்கலி பொலிஸில் முறைப்பாடு செய்ததை அடுத்து நீதிவான் தாமர தென்னக்கோண் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நிசாந்த முத்துகெட்டிகம நீதிமன்றில் ஆஜராகி இருக்கவில்லை என்பதுடன் அங்கு அனர்கலி பிரசன்னமாகியிருந்தார்.

அங்கு ஊடகவியலாளர்களுடன் பேசிய அனர்கலி, தன்னை எவரும் அச்சுறுத்த முடியாது எனவும் எவரது அச்சுறுத்தல்களுக்கும் தான் அடிபணியப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அனர்கலி சில முக்கியஸ்தர்களின் உதவியுடன் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முனைவதாக தெரிவித்துள்ள நிசாந்த முத்துகெட்டிகம, அரசில் அனுபவமும் திறமையும் இல்லாதவர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் வேட்பாளர் தெரிவுக்குழுவினரும் தெரிவு செய்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com