Saturday, August 8, 2009

வவுனியா உள்ளுராட்சி சபையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது.

இடம்பெற்று முடிந்த வவுனியா உள்ளுராட்சி மன்றத்திற்கான தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் 4279 வாக்குகளைப் பெற்று 11 ஆசனங்களில் 5 ஆசனங்களைப் பெற்றுள்ளனர். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினரான புளொட் அமைப்பினர் 4136 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (ஈபிடிபி, ஈரோஸ், சிறிரெலோ, மேலும் சில கட்சிகள்) 3045 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களையும், முஸ்லிம் காங்கிரஸ் 587 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் பெற்றுள்ளதுடன் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி 228 வாக்குகளை மாத்திரம் பெற்றுக்கொண்டுள்ளது என தேர்தல் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com