Saturday, July 25, 2009

புலிகளின் மூத்த ஊறுப்பினர் ஒருவர் காடுகளில் மறைந்திருந்து சரண்.

கடந்த மே மாதம் 16ம் திகதிவரை வெள்ளாமுள்ளி வாய்காலில் இருந்து சண்டையிட்டு ஓருவாறு தப்பி காடுகளினுள் நுழைந்து கொண்ட புலிகளின் மூத்த உறுப்பினர் ஒருவர் கடந்த புதன் கிழமை இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத இராணுவ அதிகாரி ஒருவர் இலங்கைநெற் இற்கு தெரிவித்தார்.

அ0024 எனும் தகட்டு இலக்கம் கொண்ட மேற்படி உறுப்பினர் கங்கா எனும் பெயர் கொண்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவராகும். 1983ம் ஆண்டில் இருந்து 26 வருடங்கள் புலிகளியக்கத்தில் இருந்துள்ள அவர் அவ்வியக்தத்தில் பல பிரதான பொறுப்புக்களில் இருந்துள்ளார்.

கடந்த 2007ம் ஆண்டு கிழக்கிலங்கையில் இருந்து புலிகள் படையினரால் விரட்டியக்கப்படும்போது கீர்த்தி குழுவினருடன் வன்னி செல்லும்வரை, அவர் மட்டக்களப்பு வழங்கல் பிரிவிற்கு பொறுப்பாக இருந்ததாக படையினரின் விசாரணைகளின்போது தெரிவித்துள்ளார்.

வன்னியில் ஜெயந்தன் படையணியின் தளபதிகளில் ஒருவராக செயற்பட்டுள்ள இவர் தனது குழு ஒன்றுடன் மட்டக்களப்பு செல்ல முற்றப்பட்டபோது, இடைவெளியில் எதிர்கொண்ட படையினருடன் ஏற்பட்ட மோதலில் அக்குழுவில் இருந்த அனைவரும் இறந்துவிட்டதாகவும், தான் காடுகளில் ஒழிந்து கொண்டாதாகவும் தெரிவித்துள்ளார்.

விசுவமடு பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாம் ஒன்றிற்கு வெள்ளை நிறம்போன்று துணித்துண்டொன்றை உயத்தியவாறு சென்று சரணடைந்துள்ள மேற்படி நபர், கடந்த சுமார் 50 நாட்களாக சமைத்த உணவேதும் கண்ணால் கூட கண்டிராத நிலையில் ஆங்காங்கே கிடைத்த வாழைக்காய், வத்தாளைக்கிழங்கு மற்றும் கிடைக்கப்பெற்ற காய்வகைகளை உண்டு காலத்தை கழித்துள்ளதாக தெரியவருகின்றது.

புலிகளியக்கத்தில் எஞ்சியுள்ள மூத்த உறுப்பினராக இவர் கருதப்படுகின்றார். அதேநேரம் இவ்வாறு காடுகளில் எஞ்சியுள்ள ஒருசிலரும் இவ்வாறு சரணடைந்துவருகின்றனர் என அவ் அதிகாரி மேலும் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com