Thursday, July 16, 2009

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சந்திரிகா வேட்பாளரா?

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக தயாராகும் எதிர் கட்சிகள் ஒன்றிணைந்து பொதுவான கூட்டு முன்னணியின் ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது. இக்கூட்டணி சார்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக மேற்படி முன்னணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்விடயம் தொடர்பாக பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் முன்னணி வட்டாரங்கள், கடந்த பாராளுமன்ற தேர்தலில் சந்திரிகா குமாரணதுங்க போட்டியிடாமைக்கு காரணம் அரசியல் யாப்பு விதிகள் என கூறினர்.

யாப்பின் பிரகாரம் வேட்பாளர் ஒருவர் தொடர்ச்சியா 3 முறை ஜனாதிபதி தேர்தலில் பங்கு கொள்ளமுடியாது எனவும் சந்திரிகா இருமுறை தேர்தலில் தொடர்ச்சியாக பங்குபற்றி வெற்றியடைந்துள்ளதாகவும், அதன் நிமிர்த்தம் அவர் எதிர்வரும் தேர்தலில் பங்கு கொள்வார் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கூட்டுமுன்னணி விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கான யானைச் சின்னத்தை தவிர்த்து வேறு ஓர் சின்னத்தில் போட்டியிடுவது என சந்திரிகா குமாரணதுங்க சிபார்சு செய்ததாக தெரியவந்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com