Tuesday, July 28, 2009

அனுதராதபுரம் விமானப்படைத் தாக்குதலின் கட்டளைத் தளபதி நீதிமன்றில் ஆஜர்.

எல்லாளன் நடவடிக்கை எனப் பெயரிட்டு அனுராதபுரம் விமானப்படைத் தளம் மீது புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் கட்டளைத் தளபதி இன்று(28 காலை) அனுராதபுரம் மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மன்றிற்கு தெரிவிக்கையில், சந்கே நபர் மேற்படி தாக்குதலுக்கான கட்டளைத் தளபதியாக செயற்பட்டுள்ளதுடன், தாக்குல் இடம்பெறும் போது தளத்திற்கு வெளியே நின்று தாக்குதலை ஆரம்பம் முதல் முடிவு வரை வீடியோ செய்து கொண்டு வன்னி சென்று அவற்றை புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் முக்கிய தளபதிகளுக்கு காண்பித்துள்ளார்.

இவ்வழக்கின் பிரதான சந்தேக நபரான றுபனின் தகவலின் பிரகாரம், 24 புலிகள் அதிநவீன ஆயுதங்கள், 8000 தோட்டாக்கள் சகிதம் வில்பத்து காட்டை ஊடடுத்து வந்து விமானப்படைத்தளத்தை அடைந்துள்ளனர். எங்களில் 21 பேர் தாக்குதலில் மரணமாக மூவர் தப்பிச் சென்றோம் என சந்தேக நபர் தெரிவித்துள்ளார். .

தப்பிச் சென்றவர்களில் பிரதான சந்கே நபரும் அடக்குகின்றார். இத்தாக்குதல் பிரதான சந்தேக நபரினாலேயே திட்டமிடப்பட்டுள்ளது.

தாக்குதலை திட்டமிட்டு வெற்றிகரமாக நாடாத்தி முடித்தமைக்காக பிரதான சந்தேச நபருக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் லெப்.கேணல் பதவி வழங்கி பரிசில் பொருட்களையும் வழங்கியுள்ளார் என குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மன்றிற்கு தெரிவித்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com