Tuesday, July 28, 2009

இலங்கையில் இந்தியா இரு வர்த்தக வலயங்களை நிறுவுகின்றது.

இந்தியா இலங்கையில் வர்த்த வலயங்கைளை அமைக்கும் பொருட்டு அதற்கான காணிகளை இனம் கண்டுவருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. திருமலை மற்றும் கிளிநொச்சிப் பிரதேசங்களில் இவ்வலயங்களை அமைப்பதற்கு இலங்கை அரசு இந்தியாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளதுடன் திருமலையில் காணி இனம் கண்டு கொள்ளப்பட்டுள்ளதாகவும், கிளிநொச்சியில் அந்நிலப்பகுதியை சேர்ந்தெடுக்கும் பணியில் இந்திய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளாகவும் கூறப்படுகின்றது.

இந்தியாவிற்கான இலங்கைப் பிரதி தூதர் திரு.ஹம்சா அவர்கள், இந்தியா இவ்வலயத்தினூடாக விவசாயம், மீன்பிடி, உல்லாசத் துறை என்பவற்றில் ஈடுபடும் என தெரியவித்துள்ளார். அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் பிரகாரம், 4200 பொருட்கள் சுங்கவரி இல்லாமல் இருநாடுகளுக்கிடையில் ஏற்றுமதி இறக்குமதி செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் இருநாடுகளுக்குமிடையில் ஏற்பாடாகியுள்ள கப்பல் சேவை இருநாடுகளுக்கும் இடையில் பொருளாதார தளர்ச்சியை ஏற்படுத்தும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com