Monday, July 27, 2009

கனடாவில் வீரமக்கள்தினம்! பல்வேறு கட்சிகள் பங்கேற்பு!

கனடாவில் முதல் தடவையாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வீரமக்கள் தினமும், கறுப்பு யூலையும் 25.07.2009 சனிக்கிழமை நினைவுகூரப்பட்டது. அமரர்கள் அமிர்தலிங்கம் மற்றும் உமாமகேஸ்வரன் அவர்கள் இறந்த தினமான யூலை13-16 வரையிலான காலப்பகுதி வீரமக்கள் தினமாக தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தினரால் பிரகடனப்படுத்தப்பட்டு நினைவு கூரப்பட்டு வருகின்றது.

இந்த 20வது வீரமக்கள்தின நிகழ்வு கனடாவில் நினைவு கூரப்பட்டு, இறந்த அனைத்து தலைவர்கள் மற்றும் போராளிகள் பொதுமக்களுக்கும் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஒழுங்கு செய்திருந்த இவ் நிகழ்ச்சிக்கு இதர தமிழ்கட்சிகளில் இருந்து பலர் கலந்து கொண்டனர்.

புளொட் தலைவர் த.சித்தார்த்தன், கூட்டணித்தலைவர் வீ.ஆனந்தசங்கரி ஆகியோரின் இலங்கையில் இருந்து வந்த செய்திகளும் அங்கு தெரிவிக்கப்பட்டது. கட்சிகளின் சார்பில் நினைவுரைகளும் நிகழ்த்தப்பட்டது.

திரு.செல்வம் தலைமையில் இடம்பெற்ற இவ் நிகழ்ச்சியில், மறைந்த தலைவர்களது ஒளிப்படத்தொகுப்பும் காண்பிக்கப்பட்டது. புளொட் சார்பில் சாரங்கனும், ஈ.பி.ஆர்.எல்.எவ்(நாபா) சார்பில் ஜேம்ஸ் அவர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஜெயசங்கரி ஆனந்தசங்கரி அவர்களும் உரையாற்றினர்.

ஊடகங்களின் கடந்த தவறுகள் பற்றி அருள்பேர்ட் தனதுரையில் சுட்டிக்காட்டினார். மற்றும் சங்கர், இலங்கை சட்டத்தரணியும் அமரர் அமிர்தலிங்கத்தின் நெருங்கிய சகாவுமான தமிழர் விடுதலை கூட்டணி உறுப்பினர் கனகமனோகரனும், திருவாளர் அமிர்தலிங்கம், உமாமகேஸ்வரன், குட்டிமணி, தங்கத்துரை போன்ற தலைவர்கள் மற்றும் ஏனைய போராளிகள் பற்றியும் தமது அனுபவங்களை எடுத்துக் கூறினர்.

திரு அருள்ராஜ் அவர்கள் புளொட் சார்பில் கலந்து கொண்ட நீண்டகால புளொட் உறுப்பினர்களுக்கும் இதரகட்சி உறுப்பினர்களுக்கும், பொதுமக்களுக்கும் கட்சி சார்பில் நண்றியை தெரிவித்துக் கொண்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com