Thursday, July 23, 2009

காலி பிரதேச சபையின் எதிர்கட்சி தலைவர் தனது குழந்தைகள் முன் சுட்டுக்கொலை.

காலி பிரதேச சபையின் எதிர்கட்சித் தலைவரும், எதிர்வரும் தென்மாகாண சபைக்கான தேர்தலில் ஐ.தே.கட்சியின் பிரதான வேட்பாளராக நிற்க இருந்தவருமான திரு. துஸ்யந்த செனவிரட்ண இந்தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்டவர் தனது இரண்டு குழந்தைகளை பாடசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் பெலிஹாக எனுமிடத்தில் உள்ள பேக்கரி ஒன்றில் தனது பிள்ளைகளுக்கு காலை உணவு வாங்குவதற்காக வாகனத்தில் இருந்து இறங்கிச் சென்றபோது அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆயுததாரிகள் அவர் மீது சரமாரியாக துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர்.

ஏழு குண்டுகள் பாய்ந்த நிலையில் அவ்விடத்திலேயே இறந்த திரு. சேனவிரத்தின கடந்த 1997 ம் ஆண்டு முதல் காலி உள்ளுராட்சி மன்றத்திற்கு மக்களால் தொடர்ச்சியாக தெரிவு செய்யப்பட்டு வந்துள்ளார். இவர் அவ்பிரதேசத்தில் உள்ள ஓர் வர்த்தகர் ஆகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com