Thursday, June 11, 2009

நீதிச் சேவை ஆணையகத்தின் உறுப்பினராக கலாநிதி சிறியாணி பண்டாரநாயக்க

இலங்கை உச்ச நீதிமன்றின் சிரேஸ்ட நீதிபதியாகிய சிறியாணி பண்டாரநாயக நீதிச்சேவை ஆணையகத்தின் உறுப்பினராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வினால் நியமனம் பெற்றுள்ளார். பிரதம நீதியரசர் பதவிக்கு ஏற்பற்ட்ட வெற்றிடம் திரு. ஆசோக டி சில்வா அவர்களால் நிரப்பப்பட்டமையினால் இவ்வெற்றிடம் உருவாகியிருந்தது.

கலாநிதி சிறியாணி பாண்டாரநாயக்க 1996 ம் ஆண்டில் இருந்து உச்ச நீதிமன்ற நீதியரசராக பல சர்ச்சைக்குரிய வழக்குகளை விசாரித்து தீர்ப்பளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com