Wednesday, June 10, 2009

ராணுவ அதிகாரிகள் சென்ற விமானப் படை விமானம் மாயம்?

அசாம் மாநிலம் திப்ரூகர் மாவட்டத்திலிருந்து, சென்ற இந்திய விமானப் படை விமானம் விபத்தில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.இந்த விமானத்தில் விமானப் படை அதிகாரிகள் 4 பேர், ராணுவ வீரர்கள் 4 பேர் உள்பட மொத்தம் 12 பேர் பயணம் மேற்கொண்டனர்.

திப்ரூகரில் உள்ள மோகன்பாரி விமான தளத்திலிருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் விமானப் படையின் சரக்கு விமானம் புறப்பட்டது. அருணாசலப் பிரதேசம் -சீன எல்லையில் உள்ள ராணுவ முகாமுக்கு உணவு சப்ளை செய்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

மோசமான வானிலை காரணமாக தேடுதல் வேட்டை நடைபெறவில்லை. புதன்கிழமை காலை விமானத்தை தேடும் பணி நடைபெறும் என்று ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com