Tuesday, June 9, 2009

கிசோர் பல்டி. அவசரகால நீடிப்பு வாக்கெடுப்பின்போது வெளிநடப்பு.

அவசரகால நீடிப்பு வாக்கெடுப்பு நேற்று பாரளுமன்றில் இடம்பெற்றது. இவ்வாக்கெடுப்பிற்கு ஆதரவாக 102 வாக்குகளும் எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏழு உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர். ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி இலங்கை தொழிலாளர் காங்ரஸ் ஆகிய கட்சிகள் ஆதரவாக வாக்களித்திருந்தது.

தமிழ் தேசயக் கூட்டமைப்பினர் எதிர்த்து வாக்களித்தபோதும் அக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். கிசோர் மஹிந்த அரசிற்கு தனது ஆதரவைத் தெரிவிக்குமுகமாக வாக்கெடுப்பின்போது வெளிநடப்பு செய்துள்ளார். ஐ.தே.கட்சியினரும் வெளிநடப்பு செய்திருந்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com