Thursday, June 25, 2009

அரச உயர்மட்டத்தினரின் இந்திய விஜயத்தில் சோமவன்சவிற்கு சந்தேகமாம்.

பா.உ பசில் ராஜபக்ச, பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் உயர்மட்ட குழுவொன்று இந்தியாவிற்கு மேற்கொண்டுள்ள விஜயத்தில் ஜே.வி.பி தலைவர் மோமவன்சவிற்கு பலத்த சந்தேகங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார். "பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ளது - நாட்டைக்கட்டியெழுப்புவோம்" எனும் தலைப்பில் நேற்று அனுராதபுரத்தில் இடம்பெற்ற பேரணி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் இச் சந்தேகத்தை வெளியிட்டுள்ளார்.

அவர் அங்கு பேசுகையில், அரச உயர்மட்டக்குழுக்கள் பயணங்களை மேற்கொள்ளும் போது செய்திகளை வெளியிடுவது வழமை. ஆனால் இம்முறை மேற்கொள்ளப்பட்டுள்ள பயணம் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ் அரசாங்கம் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க முனைகின்றது. ஆனால் நாம் அதற்கு இடம் தரமாட்டோம். அவ்வாறு 13ம் திருத்தச்சட்டத்தை அரசு அமுல்படுத்தி அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதாயின் சர்வஜன வாக்கெடுப்பொன்றை நாடாத்தவேண்டும். அப்போது நாம் அதை மக்கள் பலம் கொண்டு தோற்கடிப்போம் என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com