Wednesday, June 3, 2009

நோர்வே நாட்டிற்கான புதிய இலங்கை தூதுவர் நியமனம்.


நோர்வே நாட்டிற்கான புதிய இலங்கைத் தூதுவராக ஈ. ரோட்னி எம் பெரேரா நியமனம் பெற்றுள்ளார். நோர்வே மன்னர் கரால்ட் வீ அவர்களைச் சந்தித்த திரு. ஈ.ரொட்னி எம் பெரேரா தன்னை அறிமுகப்படுத்தும் பத்திரங்களை சமர்பித்து, இலங்கை நிலமைகள் தொடர்பாக விரிவாக எடுத்துரைத்தார்.

இடம்பெற்று முடிந்திருக்கின்ற யுத்தத்தில் இலங்கைக்கு சர்வதேச சமூகம் ஆற்றிய உதவிகளுக்கு இலங்கை மக்கள் சார்பாக நன்றி தெரிவித்த அவர் இலங்கை விடயங்களில் நோர்வே அரசு காட்டிய அக்கறைகளுக்கு தனது நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.

அங்கு இடம்பெற்ற அறிமுக விழாவில் மன்னர் கரால்ட் வீ, அரசி சோன்ஜா மற்றும் இலங்கைத் தூதரின் துணைவியார் ஆகியோர் கலந்துகொண்டனர். அங்கு இடம்பெற்ற கருத்து பரிமாறல்களின்போது நோர்வே மன்னர் இலங்கை மக்களின் நலனை கவனிக்கும் பொருட்டு இருநாடுகளும் கொண்டுள்ள 59 வருடகால நட்பை நினைவு கூர்ந்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com