Sunday, April 26, 2009

23 புலிகள் படையினரிடம் சரண்.



வலைஞர்மடம் பிரதேசத்தைக் கைப்பற்றிய படையினர் அப்பிரதேசத்தில் யுத்தத்தில் ஈடுபட்ட ஒரு தொகுதி புலிகளை சுற்றிவளைத்து அவர்களை சரணடையுமாறு அறிவித்திருந்தனர். படையிரின் வேண்டுதலைத் தொடர்ந்து ஆயுதங்களைக் கீழே போட்டு 23 புலிகள் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.

சரணடைந்தவர்களில் 17 ஆண்களும் 6 பெண்களும் அடங்குவதாகவும், அப்பகுதியில் சிக்கியிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்களும் அடங்குவதாகவும் தெரியவருகின்றது.

சரணடைந்த புலிகளை புனருத்தாபன நிலையங்களுக்கு அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com