Showing posts with label nc2. Show all posts
Showing posts with label nc2. Show all posts

Tuesday, July 12, 2016

இலங்கையின் உத்தியோகபூர்வமொழி சிங்களம் மட்டுந்தானா?

சர்வதேச சுற்றுலா அமைப்பினால் (UNWTO) இம்முறை பாசிக்குடாவில் கருத்தரங்கொன்று நடாத்தப்படுகின்றது. இம்முறை நடாத்தப்படுகின்ற கருத்தரங்கில் வெளிநாட்டைச் சேர்ந்த பெரும்பான்மையினர் கலந்துகொள்ளவுள்ளனர். இன்று (12) மற்றும் நாளை (13) இருநாட்களும் இக்கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. ஆயினும், கருத்தரங்கம் நடைபெறும் நடைபெறும் நாடாகிய இலங்கைக்கான அழைப்பினைப் பார்க்கும்போது, “சிங்களவர்களுக்கு மட்டும்” எனும் மனோநிலை மீண்டும் எழுந்துள்ளதைக் காணக்கூடியதாய் உள்ளது, அதாவது, இலங்கையின் உத்தியோகபூர்வ மொழி சிங்களம் எனவும், ஆங்கிலமும் பயன்பாட்டில் உள்ளது எனவும் குறிப்பிட்ட அதிகாரிகளினால் குறிப்பிடப்பட்டுள்ளது என மனித உரிமைச் செயற்பாட்டாளர்களில் ஒருவராகிய ருக்கி பெர்னாண்டோ தெளிவுறுத்துகிறார். ஒருமைப்பாட்டை அடிப்படையாக வைத்து நடாத்தப்படுகின்ற கருத்தரங்கம் என்ற தோரணையில் நடாத்தப்படுகின்ற இந்நிகழ்வு சிந்திக்க வேண்டிய விசயமே.

மேலும், சர்வதேச ரீதியாக நடைபெறும் சுற்றுலாக் கருத்தரங்கம் இலங்கையில் நடைபெறும்போது, கற்பிட்டி, குச்சவெலி, பானம், பாசிக்குடா, இருதெனியாய, காங்கேசந்துறை போன்ற பகுதிகளில் காணிகள் இல்லாமல் போன மக்கள் நேற்று (11) கொழும்பில் ஒன்றுகூடி, முதலில் எங்கள் இடங்களை எங்களுக்குப் பெற்றுத் தாருங்கள். எங்கள் உரிமைகளை எங்களுக்குப் பெற்றுத் தாருங்கள், பிறகு சுற்றுலாத்துறையைப் பாருங்கள்” எனக் குறிப்பிட்டனர். அங்கு பானமப் பகுதிகளில் காணிகள் அற்றுப் போனோருக்காக கருத்துத் தெரிவித்த சோமசிரி புஞ்சிரால என்பவர், “குறைந்தளவு எங்கள் காணிகள் (இடங்கள்) தொடர்பில் அமைச்சரவையின் தீர்மானித்திற்கு ஒப்ப செயற்படாமல், இவ்வாறான சுற்றுலாத்துறைக் கருத்தரங்கு நடாத்துவது தொடர்பில் அரசாங்கம் வெட்கப்பட வேண்டும். மேலும், எங்கள் காணிகளை எங்களுக்குப் பெற்றுத் தந்துவிட்டு சுற்றுலாத்துறையைக் கவனிக்க வேண்டும்” எனவும் கருத்துரைத்தார்.

“தற்போது நடைபெறுகின்ற பாசிக்குடாவிற்கோ அன்றி, ஏனைய பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கோ சரியான பிரதிநிதித்துவம் அங்கு இல்லை” எனவும் ருக்கி பெர்னாண்டோ மேலும் தெரிவிக்கிறார்.

நன்றி - விகல்ப இணையத்தளம் on July 11, 2016

தமிழில் - கலைமகன் பைரூஸ்

Read more...

Monday, August 3, 2015

கிண்ணஸ் சாதனை… உலகில் வெகுவேகமாக அபிவிருத்தியை நோக்கிச் செல்லும் குடும்பம் மகிந்தவின் குடும்பமே….?

உலகில் மிகவும் வேகமாக அபிவிருத்தியை நோக்கிச் செல்லும் குடும்பமாக இருப்பது மகிந்த ராஜபக்ஷவின் குடும்பமே என பிரதியமைச்சர் ஹர்ஷ த சில்வா குறிப்பிடுகிறார்.

அது தொடர்பில் கிண்ணஸ் சாதனைப் புத்தகம் குறிப்பிடுவதாக கொழும்பில் இடம்பெற்ற கூட்டமொன்றில் அவர் விஷேடமாகத் தெளிவுறுத்தினார்.

எதுஎவ்வாறாயினும் கிண்ணஸ் சாதனைகள் அடங்கிய இணையத்தளத்தில் முழுமையாகத் இவ்வாறான ஒரு குடும்பத்தை தான் உள்ளிட்ட பத்துப் பேர் பலவாறாகத் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை என அவர் அக்கூட்டத்தில் குறிப்பிட்டார்.

வாசகர்களாகிய உங்களினாலேனும் கண்டுபிடிக்க முடியுமா? எனத் தேடுங்கள்….

இணையத்தள முகவரி
http://www.guinnessworldrecords.com/

(கேஎப்)

Read more...

Sunday, February 22, 2015

ஸலாமா தேசிய தின நிகழ்வு

“சகவாழ்வு” எனும் தொனிப் பொருளில் நாட்டில் இன நல்லுறவைக் கட்டியெழுப்பும் நோக்கில் இன்று (22) மாத்தறை காலிதாச வீதியில் அமைந்துள்ள பேர்ள் பிலேஸ் ஹோட்டலில் தேசிய ஸலாமா தேசிய தின நிகழ்வு இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்நிகழ்வை கல்வி கலாசார அபிவிருத்தி அமைப்பு ஒழுங்கு செய்துள்ளது.

இந்நிகழ்வில் மாத்தறை மாவட்டச் செயலக செயலாளர், பிரபல ஊடகவியலாளர் நிளார் என். காசிம் உட்பட பிரபல்யம்மிக்க பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

“சகவாழ்வு” பற்றி கருத்துரைத்த சிலரின் படங்கள் கீழே.


(கலைமகன் பைரூஸ்)

Read more...

முடிந்தால் என்னைத் தேர்தலில் தோற்கடிக்கவும்!

மகிந்தவுக்கு ரணிலின் சவால்!!

முடியுமாயின் எதிர்வரும் தேர்தலில் தன்னை தோற்கடித்து வெற்றியீட்டுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு சவால் விடுத்துள்ளார்.

நேற்று புத்தளம் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கான கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இச்சவாலை பிரதமர் விடுத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் அவரது வாக்குகளை தன்னால் 50 இலட்சத்தை விடவும் குறைக்கவியலும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(கேஎப்)

Read more...

Saturday, January 10, 2015

புதிய பாதுகாப்புச் செயலாளராக பீ.எம். யூ.டீ. பஸ்நாயக்கா!

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் புதிய பாதுகாப்புச் செயலாளராக பீ.யூ.டீ. பஸ்நாயக்கா ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின்போது சூழல் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பி.எம்.யு.டீ. பஸ்நாயக்க செயற்பட்டிருந்தார். அப்போது, பாதுகாப்புச் செயலாளராக மகிந்த ராஜபக்ஷவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்ஷ செயற்பட்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று நிகழ்ந்த ஆட்சி மாற்றத்தின் பின் புதிய பாதுகாப்புச் செயலாளராக பி.எம்.யு.டீ. பஸ்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

Read more...

மைத்திரிபாலவை ஜனாதிபதியாகத் தெரிவுசெய்தவர்கள் தமிழ் மக்களே! - அநுரகுமார திசாநாயக்க

பொது எதிரணியின் வெற்றியில் மறை முகமான பங்கு எமக்கு உள்ளது எனினும் பொது எதிரணியில் உறவு வைத்துக்கொள்ளவோ வெற்றியில் பங்கு கேட்கவோ விரும்பவில்லை நாம் சுயாதீனமாக செயற்பட ஆசைப்படுகின்றோம் என தெரிவிக்கும் ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க, ஜனாதிபதி மைத்திரிபாலவின் வெற்றியில் முக்கிய பங்கு தமிழ் பேசும் மக்களுக்கே உள்ளது. வெற்றியை தீர்மானித்த சக்தி அவர்களெனவும் குறிப்பிட்டார்.

மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பின் பின்னர் கட்சியின் தலைவரிடம் தேர்தல் வெற்றி தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;

மைத்திரிபால சிறிசேனவின் பொது எதிரணியின் நேரடி பங்குதாரராக நாம் இருக்கவில்லை. எனினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியினை கவிழ்க்க எமது முழுமையான பங்கினையும் வழங்கினோம். இதை பொது எதிரணி பல மேடைகளில் சொல்லியுள்ளது.

இப்போது நாம் பொது எதிரணியின் வெற்றியில் பங்குதாரராக உரிமை கொண்டாடுவதை விடவும் நல்லாட்சிக்கான அழுத்தம் கொடுக்கவே தயாராகியுள்ளோம். தேசிய அரசில் பங்கு கொள்வது தொடர்பில் நாம் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை.

அதே போல் தற்போது நாட்டில் ஜனநாயகத்திற்கான பாதை திறந்துள்ளது. மக்கள் மாற்றத்தினை விரும்பி ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர். இது இலங்கையின் மாற்றத்திற்கான வரலாற்றின் மைல்கல்.

மேலும் இம்முறை தேர்தலில் பொது எதிரணியின் வெற்றியினை தீர்மானித்ததில் தமிழ் பேசும் மக்களின் பங்கு அதிகமானது. வடக்கு கிழக்கின் வாக்குகளே பொது எதிரணியின் வெற்றியில் முக்கிய பங்கினை எடுத்துள்ளது.

அதே போல் சிங்கள மக்கள் இரு சாராருக்கும் சம பங்கு வாக்குகளை வழங்கியிருக்கின்றனர். அதேபோல் 2005 ஆம் ஆண்டில் சிறுபான்மை மக்களின் வாக்குகள் தடுக்கப்பட்டமையும் 2010 ஆம் ஆண்டில் 18 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜனாதிபதி வெற்றி பெற்றமையும் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியினை தற்பெருமை கொண்ட ஆட்சியாக மாற்றி விட்டது.

இம்முறை வெற்றி இரு சாராருக்கும் நல்ல படிப்பினையாக அமைந்துள்ளது. இனிவரும் காலங்களில் மக்கள்தான் தீர்மானிக்கும் பிரதான சக்தியாக விளங்குவார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Read more...

நாடெங்கிலும் பாற்சோறு வழங்கி சந்தோசக் களிப்பில் மக்கள்!

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக, புதிய ஜனநாயக முன்னணியிலிருந்து போட்டியிட்டு, இலங்கையின் 7 ஆவது ஜனாதிபதித் தேர்தலில் 6 ஆவது ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள மைத்திரிபால சிரிசேனவின் வெற்றியையிட்டு, நாடெங்கிலும் தங்களது வெற்றியாக மக்கள் பட்டாசு கொளுத்தி, பாற்சோறு பகிர்ந்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்து வருகின்றனர்.

இதுவரை நடைபெற்ற தேர்தல்களிலும் பார்க்க இம்முறை (2015) தேர்தல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதியப்பட வேண்டிய தேர்தலாகும் என புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதியின் பதவியேற்பின் பின்னர் நிகழ்த்திய முதலாவது கன்னிப் பேச்சில் அவரது முதலாவது செயற்றிட்டம் மக்களின் வறுமையை ஒழிப்பதே என்பதில் நாட்டு மக்கள் பூரண நம்பிக்கை வைத்துள்ளமையைக் கண்கூடாகக் காணக்கூடியதாகவுள்ளது. தமிழ், முஸ்லிம் மக்களின் அதிகப்படியான வாக்குகளினாலேயே ஜனாதிபதியாக மைத்திரிபால சிரிசேன தெரிவுசெய்யப்பட்டார் என்பதை அரசியல் வட்டாரங்கள் ஒருபோதும் மறக்க மாட்டாது என்பதும் வரலாற்றில் ஒருபோதும் கிடைக்காத ஆதரவு மைத்திரிபால சிரிசேனவுக்குக் கிடைத்துள்ளது.

மிக விரைவில் அமைச்சரவை இன்று அல்லது நாளை கூடவுள்ளதுடன் அதில் முக்கிய அமைச்சுப் பொறுப்புக்கள் பல சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது.

35 பேரைக் கொண்ட புதிய அமைச்சரவையில் 25 அமைச்சர்களும் 10 பிரதியமைச்சர்களும் தெரிவுசெய்யப்படவுள்ளனர். இவ்வமைச்சரவை 03 மாதங்களுக்குத் தற்காலிக அமைச்சரவையா இருக்கும். அதன் பின்னர் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலைத் தொடர்ந்து நிரந்தர அமைச்சரவை தாபிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கீழுள்ள படங்கள் வெலிகம பிரதேச சபை உறுப்பினர் அஜ்மல் ஸத்தாரினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் வெற்றிக் களிப்பில் பாற்சோறு வழங்கும் போது எடுக்கப்பட்ட படங்கள்







தர்கா நகர்

புத்தளம்

நுவரெலியா
(கலைமகன் பைரூஸ்)

Read more...

Friday, January 9, 2015

இலங்கை ஜனாதிபதியாக மைத்திரிபால சிரிசேன தெரிவு!

புதிய ஜனநாயக முன்னணியிலிருந்து ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்ட மைத்திரிபால சிரிசேன 51.28% வாக்குகளைப் பெற்று முன்னணியில் இருப்பதால், இலங்கை ஜனநாயக சோசலிஸக் குடியரசின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிரிசேன இன்று 09.01.2015 இல் தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய சற்று முன் ஊடகவியலாளர் மாநாட்டில் உத்தியோகபூர்வமான முறையில் குறிப்பிட்டார்.

தேர்தலை சுமுகமான முறையில், வன்முறைகள் ஏதும் இடம்பெறாத வகையில் நடாத்துவதற்காக ஒத்துழைத்த தனது திணைக்கள ஊழியர்களுக்கு பலவாறு நன்றி தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர், தேர்தல் சிறப்பாக நடைபெற ஆவன செய்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் நன்றி தெரிவித்தார்.

தேர்தல் ஆணையாளர் உரையாற்றும்போது,

“பொதுமக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு தேர்தல் ஆணையாளராக மட்டுமன்றி பொதுமக்கள் அனைவர் சார்பாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கின்றேன். என்றதுடன், தெரிவுசெய்யப்பட்டுள்ள ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிரிசேனவுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யபட்டுள்ள மைத்திரிபால சிரிசேன உரையாற்றும்போது,

“இத்தேர்தல் நடைபெறுவதற்கு சகல விதத்திலும் ஒத்துழைப்பு நல்கிய முப்படைத் தளபதிகள் உள்ளிட்ட படையினருக்கும், பொதுமக்களுக்கும் எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தேர்தலில் வெற்றிபெற்றாலும் யாருக்கும் அநீதியிழைக்காது, அகிம்சாவழியில் நடந்துகொள்ளுமாறும், ஏனையோரைப் பாதிக்காத வகையில் வெற்றியைக் கொண்டாடலாம்.

தேர்தலில் தான் போட்டியிடுவதற்கு பிரச்சினைகள் ஏதுமற்ற முறையில் சுமுகமானதொரு சூழலை ஏற்படுத்தித் தந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

அனைவரும் நிதானமாகவும், மைத்திரியுடனும் வாழக் கடமைப்பட்டுள்ளார்கள்“ எனவும் குறிப்பிட்டார்.

(கலைமகன் பைரூஸ்)

Read more...

Tuesday, January 6, 2015

பேதலிக்கும் பேரினவாதம் - ஓர் அரசியல் கண்ணோட்டம்

மனிதாபிமானம் மரத்துப்போன மனிதர்களின்” தலைமைத்துவத்தின்கீழ் இங்கு நாம் வாழ்கின்றோம். காமமும், ஆடம்பரமும், மோசடியும் மிக்க அரசியல்வாதிகள் இவர்கள்.கற்பொழுக்கமுடைய மனிதர்கள் அரசியலில் சங்கமிக்கும் காலம் மலையேறிவிட்டது. ஒரு இனத்தை அழித்து இன்னொரு இனத்தை பாதுகாப்பதுதான் இவர்களது அரசியல் ராஜதந்திரமாகும். இதற்கு பேரினவாதத்தை துணைக்கு அழைப்பதும், அதற்கு சிறுபான்மை அரசியல் தலைமைத்துவங்கள் சோரம்போவதும்தான் இன்றைய எமது அரசியல் தீமையாக எனக்குப்படுகிறது.

முள்ளிவாய்க்காலில் கொன்றதை, கொண்டாடிக்கொண்டிருக்கும் தலைவரை, அடிவருடிக்கொண்டிருக்கும் எமது அரசியல்வாதிகள் முற்றாக நிராகரிக்கப்படவேண்டியவர்கள்.அடுத்து அளுத்கமை அனர்த்தங்களுக்குக் காரணமாக இருந்து அப்பாவி முஸ்லிம்களின் இன்னுயிர்களை காவுகொள்ள வைத்த “கறுப்பு ஜூன் நிகழ்வை” மறந்து செயல்படும் மெத்தனப்போக்கு அடுத்து இனங்காணப்படவேண்டிய விடயம். உலகின் “பௌத பயங்கரவாத முகம்” என இனங்காணப்பட்ட “விராஜ் தேரருக்கு” விசா வழங்கி கௌரவித்து பேரினவாத நச்சுக்கருத்துகளை கக்கவைத்து, எதிர்காலத்தில் இன்னொரு இனச்சுத்திகரிப்பிற்கு தூபமிடக்காரணமாக இருக்கும் தலைவரை தொடர்ந்தும் அடிவருடும் எமது அரசியல்வாதிகள் முற்றாக நிராகரிக்கப்படவேண்டியவர்கள்தான். இந்த மூன்று காரணங்களுமே எதிர்க்கால அரசியலை தீர்மானிக்க எமக்குப்போதுமானதாகும்.

துப்பாக்கிரவைகள் ஓய்வுபெற்றதும், இனவாத அரசியல் அரங்கேறின.இது ஒரு சாதாரண பாமரனுக்கும் தெரியக்கூடியதாக இருந்தது. அதேவேளை எமது அரசியல்வாதிகள் பேரினவாதத்திற்குச் சோரம்போய்,சிறுபான்மையினருக்கு எதிராக நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு ஆதரவாக கை உயர்த்தி, பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை பலத்துடன் அது நிறைவேற ஒத்துழைத்தனர். 18ம் சீர்திருத்தச்சட்டம் இவர்களின் ஆதரவுடன்தான் நிறைவேறியது.இன்று ஜாதிக ஹெல உறுமய ஆளுங்கட்சியிலிருந்து வெளியேறி எதிரணியில் உள்ளதால், எதிரணிக்கு எம்மால் ஆதரவளிக்க முடியாதென்றுகூறும் ரவூப்ஹகீம் அவர்கள், எந்த மனச்சாட்சியிலிருந்து பேசுகிறார் என்பதுதான் எமது முதற்கேள்வி. இவர்கூறும் இனவாதக் கட்சிகள் இதற்கு முன்பு எங்கிருந்தன என்பது எமது அடுத்த கேள்வி. ஞானதேரன் போன்ற ஆன்மீகக்குண்டர்கள் இன்றும் எங்கிருக்கின்றார்கள்.? யாருக்கு ஆதரவளிக்கின்றார்கள்? இவர்களது எதிர்காலத்திட்டங்கள் என்ன? விராஜ் தேரனுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் யாவை? போன்ற விடையங்களை மறைத்து, எம்மை ஏமாற்றி, மீண்டும் பாராளுமன்றம் நுழைய மேற்கொள்ளும் இந்த உத்திகள் ரவூப் ஹக்கீமுக்கு பிரத்தியேகமானதுதான். தீவிரமாகச் செயல்படும் பேரினவாதிகளுக்கு மௌனராகம் பாடும் ரவூப் ஹகீம் முதல், ஆளும் கட்சியில் அமர்ந்திருக்கும் முஸ்லிம் பிரதிநிதிகள் அனைவரும் முற்றாக நிராகரிக்கப்படல் வேண்டும் என்பதுதான் எமது மக்களுக்கு நாம் முன்வைக்கும் செய்தியாகும்.

சமுதாய ஒழுங்கு என்பது புனிதமான உரிமையாகும்.இதுவே மற்றெல்லா உரிமைகளுக்கும் அடிப்படையாகும்.இந்த ஒழுங்கு எமது ஜனாதிபதி ஆட்சியில் நிலவியதா? என்பதுதான் எமது முதற் கேள்வி, இதற்குச் சோரம்போய் அவர்களை அடிவருடிய எமது அரசியல்வாதிகள், நியாயமானவர்களா என்பதுதான் எமது அடுத்த கேள்வி? ”மத உரிமை என்பது மனித உரிமை சார்ந்ததே” என்ற அடிப்படை அறிவுகூட இல்லாதவர்கள் எமது அரசியல்வாதிகள். அவர்கள் நிராகரிக்கப்படவேண்டியவர்களே. இனங்களின் கலாசாரக் கூறுகளை மோதவிட்டு அதில் குளிர்காய்ந்த பேரினவாதிகள் இன்று மௌனராகம் இசைக்கின்றனர். .ஏன்? தேர்தல்காலமல்லவா இது? ஆனால் மூர்க்கத்தனமாகத தாக்கப்பட்ட அளுத்கம மக்களின் ஆத்திர உணர்ச்சி அவர்களது ஆத்மாவில் கல்வெட்டுப்போல் பதிந்து விட்டது. இந்த மானசீகத்துயரம் என்னை எழுதத் தூண்டுகிறது.

ஹலால் விவகாரம், மசூதி உடைப்பு, மசூதியினுள் பன்றி மாமிசத்தை எறிதல், கடை எரிப்பு, பர்தா உடை பற்றிய நச்சுக்கருத்துக்கள், ஆன்மீகக்குண்டர்கள் குர்ஆனை கையிலேந்தி வியாக்கியானம் செய்யும் விதம், இவற்றுக்கெல்லாம் மேலாக அளுத்கமை “கறுப்புஜூன்” சம்பவம் போன்ற சமூகத்துரோகங்கலெல்லாம் எங்கிருந்து வந்தன.? விராஜ் தேரனுடன், முஸ்லிம் விரோத உடன்படிக்கை ஓன்றும்கூட கைச்சாத்தானதே. இதற்குள் அடங்கியிருக்கும் தீமையின் ஆழம்பற்றிய உண்மை ஒரு பாமரனுக்குக்கூட தெரிந்திருக்கும் பொழுது ஏன் எமது அரசியல் வாதிகள் இதனைக் “ கண்டுகொள்வதில்லை என்பதே எமது ஆதங்கம். மனிதனுக்கு மனிதப்பண்பாட்டைக் கற்றுக்கொடுத்து அவனை மனிதனாக்க முயல்வதுதான் மதங்களின் பணியாக இருக்கவேண்டும்.பேரினவாத நச்சுவிதைகளை விதைத்து, அப்பாவிகளின் உயிர்களைக் காவுகொள்ளவைக்கும் கறுப்புநிகழ்வுகளை உருவாக்குவதாக இருக்கக்கூடாது.மதவெறியர்கள் அணிந்திருக்கும் “மதம்” என்ற முகமூடியானது தனதுகோதர மனிதர்களைக்கூடப் புரிந்துகொள்ள முடியாதவாறு தடுத்துவிடுகிறது முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளைப்பார்த்து இன்றும் தமிழர்கள் ஏங்குகிறார்கள்.சமுதாயப்பிளவுகளால் எமது அரசியலை நிர்ணயம் செய்யமுடியும் என்ற அற்பநிலை இன்று மாறிவிட்டது. உலகலாவிய பிரச்சினையும்கூட இதுதான். மத்தியகிழக்கிலும்லும் மதவெறித்தனம் தாண்டவமாடுகிறது. அங்கு மதத்தின் பெயரால் புரியப்படும் படுகொலைகள், மதவெறித்தனங்கள், எல்லைகடந்தவை. கடந்தவாரம் தாலிபான்கள் பாகிஸ்தானில் செய்த மாணவர்களின் படுகொலைச் சம்பவங்கள்,ஈராக்கில் isis அட்டூழியங்கள், நைஜீரியாவில் போகோஹராம் படுகொலைகள்,அண்மைய அவுஸ்திரேலிய isis சம்பவங்கள் அனைத்தும் இஸ்லாத்தின் பெயரால் அரங்கேறி முடிவடைவனவையே.. இதற்குப்பின்னால் சியோனிசம் ஒlழிந்திருந்து தனது கைங்கரியங்களைச செய்வதை மேற்கு நாடுகள் கண்டுகொள்ளப்போவதில்லை.ஏனெனில் மேற்கின் பெட்ரோல் வளங்களின் நலன்கள் அதில் தங்கியுள்ளன.

அநியாயத்திற்கும்,துன்பத்திற்கும்,துவேசத்திற்கும் வழிவகுக்கும் ஞானதேரனின் “அபாயக்குரல்”இன்று சற்று ஓய்ந்துள்ளது.காரணம் தேர்தல்காலமானதால் அடக்கிவாசிக்கும்படி அரசியல் உயர்பீடம் உத்தரவிட்டுள்ளதாம். இதுதான் உண்மை. அத்துடன் அரசியல் துர்நாற்றம் (சில கோடரிக் காம்புகள்) எம்மைவிட்டு சற்று விலகி நிற்பதுபோல் தெரிகிறது.மனச்சாட்சியுடன் போராடி அதில் தோற்றுப்போய் இரு தலைக்கொள்ளி எறும்புபோல் ஒரு தீர்வுக்கு வரமுடியாது திண்டாடுகின்றனராம். பணம், பதவி ஒருபக்கம். மக்களோ இவர்களுக்கு மறுபக்கம். இதுதான் யதார்த்தம்.இதுவே எமக்குப்போதுமானது.இதனையும் எமது அரசியல் வெற்றியாகவே கொள்ளவேண்டும்.இவர்கள் எமக்கு உதவத் தேவையுமில்லை.ஆனால் உபத்திரங்கள் பண்ணாமலாவது இருக்கட்டும் என்றே சொல்லி வருகின்றோம். உலகமே வியக்கும் அளவுக்கு இனவாதம் பேசப்பட்ட ஒரு சூழலை இனங்காணமுடியாத இவர்களின் அரசியல் எமக்குத்தேவையில்லை.

எனவே எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் சிறுபான்மைச் சமூகத்தினர் அம்மையாரின் தலைமையில் ஒன்றிணைந்திருக்கும் “மைத்திரிப்பால சிறிசேன” அவர்களை தேர்வுசெய்யும் தார்மீகப்பொறுப்பில் இருக்கின்றார்கள் என்பதே எமது கருத்து.

“மண்ணூர் மைந்தன்”

Read more...

தேர்தல் யுத்தம் மகிந்தருக்கும் மைத்திரியருக்குமிடையில் இல்லை - ஞானசார தேரர்

இந்த தேர்தல் யுத்தம் இருப்பது மகிந்த - மைத்திரியிடையே அல்ல. நாட்டுக்குத் தீங்கு விளைவிக்கின்ற, பிறநாடுகளுடன் கைகுலுக்குகின்ற ஈனியா திருட்டுக் கும்பலுடன்தான் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் குறிப்பிடுகின்றார்.

மேற்கத்தேய சக்திகளுக்குத் தேவையாக இருப்பது இலங்கையை வலுவிழக்கச் செய்து, முதுகெலும்பு இல்லாத தலையாட்டு பொம்மையான தலைவர் ஒருவரை நாட்டில் தோன்றச் செய்து, இருக்கின்ற கொஞ்சத்தையும் முழுமையாக சுருட்டிக் கொள்வதற்கேயாகும். அந்த மேற்கத்தேயத்தின் விருப்பு வெறுப்புகளைத்தான் இன்று இந்த அசுத்தமான கூட்டத்தினர் செய்துகொண்டிருப்பதாக நேற்று முன்தினம் பொராலையில் இடம்பெற்ற தேசிய ஒருமைப்பாட்டு அமைப்பு ஒழுங்கு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.

ஞானசார மேலும் குறிப்பிடுகையில் -

'இந்த ஜனாதிபதித் தேர்தலானது மிக முக்கியமானதொரு தேர்தலாகும். சுதந்திரத்தின் பின்னர் சென்ற 30 வருட இருண்ட யுத்தத்தில் நாங்கள் எல்லோரும் சந்தித்த துன்பங்கள் பற்றி புதிதாகச் சொல்ல வேண்டிய தேவையில்லை. ஆயினும், கொழும்பிலிருந்து அரசியலுக்குள் பிரவேசித்த ஆட்சியாளர்கள் பயங்கரவாதத்தை பயங்கரவாதம் என்றுகூட சரியாகச் சொல்லத் தெரியாத கையாலாகாதவர்களாகவே இருந்தனர். யுத்த வெற்றியின் பின்னர் அன்று யுத்தத்தில் தலைமை வகித்த சேனாதிபதிக்கு எதிராக 2010 ஆம் ஆண்டின் பின்னர் பல்வேறு சூழ்ச்சிகள் நடாத்தப்பட்டன. தற்போது அதன் எண்ணிக்கை பன்மடங்காகியுள்ளது.

நாங்கள் மரியாதை செலுத்திய சிரிசேன இவ்வாறான அசுத்தமான கூட்டத்தாருடன் இணைந்து கொள்வார் என்று நாங்கள் நினைக்கவில்லை. தற்போது சிறிசேன நான் வெளியிலிருந்து கொண்டு சூழ்ச்சி செய்வதாகவும் உள்ளே இருந்து கொண்டு சூழ்ச்சி செய்வதாகவும் சொல்கிறார். சரியாயின் அவரைக் கைது செய்ய வேண்டும். ஏன் தெரியுமா? தற்போது நாடு அபாயத்தில் இருந்துகொண்டிருக்கின்றது.

பிரபாகரனை நந்திக் கடலில் உள்ள களப்பில் கொன்றொழித்தது போன்று, சந்திரிக்கா - ரணில் போன்ற இந்தக் கொள்கையுடைய அரசியல்வாதிகளையும் நீக்க வேண்டும். இன்று உயிர்நீத்த 27,000 படையினரையும் அவமானப்படுத்துகின்றார்.

நாட்டுக்கு கொடுவினை செய்கின்ற இறைச்சி ராத்தலே கேட்கின்ற இனவாத முன்னணியை இல்லாதொழிக்க வேண்டும். இது மகிந்தவுக்கும் மைத்திரிக்கும் இடையிலான யுத்தம் அல்ல. இது பொதுமக்கள் சிந்திக்க வேண்டிய காலகட்டமாகும். ஏனென்றால் இந்த பெடரல் நடைக்குழுவினர் நாட்டுக்குள் சக்தி பெற்றால் அதனைத் தோற்கடிப்பது இலகுவான காரியம் அல்ல. இந்நாட்டுக்கு கொடுவினை செய்கின்றவர்கள் நாட்டினுள்ளே சக்தி பெற்றுவிட்டால் தலைவர் இல்லாத ஆட்சி மட்டுமே மீதமாகும்.

மகிந்த ராஜபக்ஷ அவர்கள் சொல்லும் அளவுக்கு என்னதான் பிழை - குற்றம் செய்திருக்கின்றார் என நாங்கள் கேட்கின்றோம். இது சிங்களவர்கள் பிரிந்துவிடும் நேரமல்ல. இந்நேரம் மகிந்த ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்பிவிட்டு இந்த நடைக் குழுவினர் நாட்டுக்கு என்னதான் பெரிதாக செய்துவிடப் போகிறார்கள்? என்பதை புத்துசாதுரியத்துடன் சிந்தித்துப் பாருங்கள்.

ஒருபுறம் நடப்பது என்னவென்றால் இந்த சூழ்ச்சிகள் காரணமாக சிங்கள மக்களின் கருத்துக்களை இரண்டாகப் பிரிப்பது. சம்பிக்க 10 வருடங்கள் மகிந்த அரசாங்கத்தில் இருந்து எத்தனையோ விடயங்களை சாதிக்க முடியாது போனதாகக் கூறுகின்றார். ஒருவரால் செய்ய முடியாததை பலர் ஒன்றிணைந்துள்ள விஷக் குழுவினரால் எவ்வாறு சாதித்துவிடுவார்?

கள்ளங்கபடமற்ற நாடு, பயம் சந்தேகமின்றிய நாளை எனக் குறிப்பிடும் சிரிசேனவின் குண்டர்கள் கதுறுவலையில் துண்டுப் பிரசுரங்களைப் பகிர்ந்தளித்த பௌத்த மதகுருமார்களிடம் நடந்து கொண்ட முறை பற்றி நாங்கள் கண்டோம். அந்த “சூகலா” கடவுளின் மமிக்கு என்ன நடந்தது என்று பதில் கூறுமாறு நான் சவால் விடுகின்றேன். இந்தக் கள்வர் கும்பலை ஒன்றிணைந்து நாங்கள் தோற்கடிக்க வேண்டும்." என்றார்.

ராவண பலய அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் குறிப்பிடும் போது,

“2005 இல் மகிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பதற்காக முயற்சி செய்த சந்திரிக்காதான் இன்று “மிஸ்டர் பிரபாகரன்“ எனச் சொல்லிச் சொல்லி மோகினி போல வெளியே வந்துள்ளார். ரணிலோ பிரதமராவதற்கு எவ்வளவோ கனவு காண்கிறார். சிரிசேன ஒரு தலையாட் டு பொம்மை. எந்தவொரு சக்தியும் அவரிடம் இல்லை. சந்திரிக்காவுக்குத் தேவையானது என்னவென்றால், அடுத்தவர்களுடன் ஒன்றிணைந்து கொண்டு நாட்டை காட்டிக் கொடுப்பற்கு. 11 வருடங்கள் நாட்டை ஆட்சி செய்தார். நாட்டுக்காகச் செய்தது ஏதுமில்லை. புலிகளுடன் காதல் நாடகம் மாத்திரம்தான் ஆடினார்.

நாங்கள் மிகவும் உத்தமமாக வந்தனை செய்துவந்த சோபித்த தேரரும் இந்தக் கும்பலுக்குள் சிக்கிக் கொண்டார். என்றாலும், அவர் இப்போது கூடுதலாக வைத்தியசாலையிலேயே இருக்கின்றார். ஆரோக்கியமாக இருக்க முடியும் என்று நினைக்கிறார் போலும். ர(த்)தன ஹாமுதுறு பற்றிப் பேசிப் புண்ணியமில்லை. இன்று ஹெல உறுமய மிகவும் சுயநலவாத தன்மையுடனேயே செயற்படுகின்றது. எந்தவொரு சூழ்சியிலும் அவரும் பங்கு கொள்கிறார். நாட்டின் மீது அன்பு செலுத்துபவர்கள் நிச்சயம் இவர்களுக்கு எதிராகச் செயற்படுவார்கள்.

சந்திரிக்கா அம்மையார் மீண்டும் 09 ஆம் திகதி மீண்டுமு் போக வேண்டிவரும். இன்று தாய்மார் தங்கள் பிள்ளைகளுக்கு உணவு ஊட்ட எவ்வளவு சிரமப்படுகிறார்கள் தெரியுமா? பல்லிகளைக் காட்டுகிறார்கள், வண்ணாத்திகளைக் காட்டுகிறார்கள். எதிர்வரும் 9 ஆம் திகதியின் பின்னர் சந்திரிக்கா அம்மையாரின் படத்தை கண்ணாடி உறையிட்டு சுவரில் தொங்கவிட்டால் பிள்ளைகளுக்கு உணவூட்டத் தேவையில்லை. அதைப் பார்த்துக் கொண்டு கடும் கோபத்தினால் சாப்பிட்டுக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டே போகும்.” எனக் குறிப்பிட்டார்.

சிங்களத்தில் - அநுராதா ஹேரத்
தமிழில் - கலைமகன் பைரூஸ்

Read more...

Thursday, January 1, 2015

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரைக் கொன்றது யார்? – தெளிவுறுத்துகிறார் முஸம்மில்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தலைவர் அஷ்ரப் அவர்களின் மரணம் தொடர்பில் முஸ்லிம்களிடையே சந்தேகம் எழுந்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் கொழும்பு நகர சபை உறுப்பினர் மொஹமட் முஸம்மில் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு ஊடகங்களுக்கு அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மறைந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப், அன்று எந்த வகையிலும் வடக்கு – கிழக்கை ஒன்றிணைக்க இணக்கம் தெரிவிக்கவில்லை. அவர் புலிப் பயங்கரவாதிகளுடனோ, அவர்களின் அரசியல் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்புடனோ ஒன்றிணைவதற்கு ஒருபோதும் இணங்கவில்லை. அவ்வாறு புலிகளுக்கு முழுமையாக எதிர்ப்புத் தெரிவித்த நிலையிலேயே அஷ்ரபின் மரணம் நிகழ்ந்தது. கிழக்கு முஸ்லிம்கள் மத்தியில் அஷ்ரப் கொலை செய்யப்பட்டார் என்ற சந்தேகமே பெரும்பாலும் உள்ளது.

அதன்பின்னர்தான், மேற்கத்தேய தலையாட்டு பொம்மையாக ரவூப் ஹக்கீம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரானார். வரலாற்றில் அவரது நிலைதான் என்ன? 2001 இல் யானை – புலி முன்னணி அரசாங்கத்தை உருவாக்கும் ஒப்பந்தத்திற்கு ஆதரவு வழங்கினார். ரணில் – பிரபாரகன் ஒப்பந்தத்திற்கு ஆதரவு நல்கினார். அதன் பின்னர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கும் முனைந்தார். 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கினார். பின்னர் அமைச்சர் பதவி மற்றும் வரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொள்வதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து கொண்டார். விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச் செல்வம் கொலை செய்யப்பட்டதன் பின்னர் தனது உள்ளார்ந்த கவலையை பாராளுமன்றில் தெரிவித்தவரும் ரவூப் ஹக்கீமே. ஆயினும் புலிப் பயங்கரவாதிகள் வடக்கிலிருந்து முஸ்லிம்களை விரட்டியடித்த வேளை, அதேபோன்று காத்தான்குடி உள்ளிட்ட வடக்குப் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் ஆயிரக் கணக்கில் கூட்டாகக் கொலை செய்யப்பட்டபோது ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அமைச்சர் பதவியைப் பெற்று வரப்பிரசாதங்களையும் அனுபவித்து வந்த அவர், 2010 ஆம் ஆண்டு சரத் பொன்சேக்காவின் வெற்றிக்காக எதிர்க்கட்சி மேடைகளில் ஏறினார். வட மாகாண சபைத் தேர்தலின் போதும் அவரது ஆதரவு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே இருந்தது. வட மாகாணத்தில் இருக்கின்ற முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் இன்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் மிகவும் நெருக்கமாகச் செயல்படுகின்றார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் குறிப்பிடும்போது, “கிழக்கு மாகாண சபையின் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் ரவூப் ஹக்கீம் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி வருகின்றோம்” எனத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். இதிலிருந்து வடக்கு – கிழக்கை ஒன்றிணைப்பதற்காக செயற்படுவது புரிவதில்லையா? பொதுமக்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, தங்களது கொள்கைகளை மூடி மறைத்துக் கொள்வதற்கு இந்த அசுத்தமான கூட்டத்தினர் முயற்சி செய்தாலும் இன்று வடக்கு – கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைப்பது பற்றி மக்களுக்குத் தெளிவேற்பட்டுள்ளமையும் தெரிந்ததே.

(கேஎப்)

Read more...

Tuesday, December 30, 2014

ரவூப் ஹக்கீம் முஸ்லிம் நாடு கேட்கவில்லை...! – சம்பிக்க

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், பொது வேட்பாளருக்கு ஆதரவு தர வந்திருப்பது முஸ்லிம் அலகு கேட்டல்ல என ஜாதிக்க ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க கூறுகின்றார்.

மைத்திரிபால சிரிசேன, அம்பாறை மாவட்டத்தில் தனியான முஸ்லிம் அலகினைத் தருவதற்கு முஸ்லிம் காங்கிரஸுடன் எந்தவொரு உடன்படிக்கையும் செய்துகொள்ளவில்லை. இவ்வாறான பொய்ப் பிரச்சாரம் ஒன்று முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. இது வெறும் பொய் என சம்பிக்க கொழும்பில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் குறிப்பிட்டார்.

“மைத்திரிபால சிரிசேனாவின் பொதுக் கொள்கை வெளியீட்டுடன் உடன்படுபவர்கள் மாத்திரமே கட்சியில் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர். இதுதான் எல்லோரினதும் கொள்கையாகும். அது பொதுக் கொள்கையே தவிர ரவூப் ஹக்கீமினதோ, சம்பிக்க ரணவக்கவினதோ, ரணில் விக்கிரசிங்கமவினதோ கொள்கையல்ல. பொதுக் கொள்கையின் அடிப்படையில் நாம் செயற்படுவதால் எந்தவொரு முறையிலும் முஸ்லிம் அலகு வழங்குவதற்கு வாக்குறுதி வழங்கப்படவில்லை” எனவும் ரணவக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

Read more...

Wednesday, December 24, 2014

சிறுகதைப் போட்டியில் மஸீதா புன்னியாமீன் முதலிடம்!

கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சு அரச ஊழியர்களுக்கிடையில் ​இற்கான பரிசளிப்பு நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் செத்சிறிபாய நகர அபிவிருத்தி அதிகார சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சர் ரி.பி.ஏக்கநாயக்க தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வசந்த ஏக்கநாயக்க, மேலதிக செயலாளர் எச்.டி..எஸ்.மல்காந்தி, அமைச்சின் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பிரபல சிங்கள எழுத்தாளர் மடுலுகினிய விஜேரத்ன, தமிழ், சிங்கள நாடகக் கலைஞர்கள், எழுத்தாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, தமிழ், சிங்கள மொழிகளில் சிறுகதை, பாடல், கவிதை, சிறுவர் கதை, சித்திரம், குறுநாடகப் பிரதியாக்கம் ஆகிய போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கு விருதுகள், சான்றிதழ்கள், புத்தகப் பரிசுகள் மற்றும் பணப் பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழ் மொழி மூல தமிழ் போட்டியில் உடத்தலவின்னையைச் சேர்ந்த மஸீதா புன்னியாமீன் சிறுகதைப் போட்டியில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளார்.

அரச ஊழியர்களுக்கிடையிலான ஆக்கத்திறன் போட்டியில் வெற்றி பெற்ற தமிழ் ஆக்கங்களின் தொகுப்பாக 'பிரகாசம்' என்ற நூலும் இங்கு வெளியிட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read more...

Friday, December 12, 2014

“மெய்யொலி“க்காக ஆக்கங்கள் கோரப்படுகின்றன!

இலங்கை தென்னகத்திலிருந்து 2015 தை மாதம் முதல் வெளிவரவுள்ள அரசியல் சமூக கலை இலக்கிய மற்றும் மீள்மொழிவுச் சஞ்சிகைக்கு ஆக்கங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.

நவீன ஈழத்து இலக்கியம் சார்ந்த கட்டுரைகள், சிங்கள இலக்கியம் சார்ந்த கட்டுரைகள், அரசியல் நிலவரம் குறித்த கட்டுரைகள், விமர்சனங்கள், சிறுகதைகள், கவிதைகள் அனுப்ப விரும்புவோர் தங்களைப் பற்றிய சிறு குறிப்புடன் முத்திரை அளவு புகைப்படத்தையும் சேர்த்து அனுப்ப வேண்டும்.

விளம்பரதாரர்களின் விளம்பரங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆக்கங்கள் அனுப்ப வேண்டிய முகவரி –

THE EDITOR
MEYYOLI MONTHLY
252/C/2, MADURAPURA,
DENIPITIYA. (81730)
E-MAIL: meyyolimonthly@gmail.com

விளம்பரங்களுக்காக மட்டும் – 094 0770787976

Read more...

Wednesday, November 26, 2014

இம்முறை ஹம்பாந்தோட்டையில் மகிந்தவுக்கு படுதோல்வியே!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ தோல்வியைத் தழுவுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிக்கிறார்.

மொரட்டுவை இதிபெத்த பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

“மகிந்த ராஜபக்ஷ இந்நாட்டில் நடாத்திய ஜனாதிபதித் தேர்தல்கள்இரண்டிலும் எனது தலைமையின் கீழ் அவரின் சொந்த ஊரான ஹம்பாந்தோட்டையில் தோல்வியடையச் செய்தேன். இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலிலும் நான் அவரைத் தோற்கடிப்பேன். ஏனென்றால் ஹம்பாந்தோட்டை மக்களுக்கு எங்களைப் பற்றி நன்கு தெரியும்..நாங்கள் ஏது செய்திருக்கின்றோம் என்பது பற்றித் தெரியும். அதனால் அம்மக்கள் என்றும் எங்களுடன் இருப்பார்கள்.

ஜனாதிபதி ஆட்சியில் இருந்துகொண்டு ஹம்பாந்தோட்டைக்கு சிற்சில விடயங்களைச் செய்கிறார். நானோ எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுக்கின்றேன். எனது தந்தையாகிய முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாச மக்களுக்காக பல்வேறு நற்காரியங்களைச் செய்தவர் என்பதை மக்கள் மறக்க மாட்டார்கள். நாங்கள் பொதுமக்களின் வாக்குகள் மூலமே பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்படுகிறோம்.. அவர்களது பிரதிநிதிகளாகவே நாங்கள் இருக்கின்றோம். அதனை அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும்,அமைச்சர்களும் கருத்திற் கொள்ள வேண்டும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

(அபூஹம்னா)

Read more...

Thursday, October 16, 2014

றிப்தி அலியின் “அமெரிக்காவில் 30 நாட்கள்” நூல் வெளியீடு!

இளம் ஊடகவியாளர் றிப்தி அலி எழுதிய அமெரிக்காவில் முப்பது நாட்கள் (அனுபவப் பகிர்வு) நூல் வெளியீடும் விடியல் இணையத்தளத்தின் பரிசளிப்பு விழாவும் எதிர்வரும் சனிக்கிழமை (18) பி.ப 3.30 மணிக்கு இல. 149, மாளிகாகந்த வீதி, கொழும்பு 10 இல் அமைந்துள்ள ஜம்இய்யதுஷ் ஸபாப் கேட்போர்கூடத்தில் இடம்பெறவுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமயில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் இலங்கை அபவிருத்தி ஊடக மன்றத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி எம்.சீ.ரஸ்மின் 'முஸ்லிம் சமூகமும் சமூக ஊடகங்களும்'' எனும் தலைப்பில் சிறப்புரையாற்றவுள்ளார்.

புனித ரமழானை முன்னிட்டு விடியல் இணையத்தளத்தினால் நடத்தப்பட்ட கேள்வி – பதில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இதன்போது பரிசுகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

Wednesday, October 8, 2014

“சிங்கள கூட்டமைப்பு” எனும் பெயரில் அரசியல் கட்சியை உருவாக்குகின்றது பொதுபலசேனா!

பொதுபல சேனா அமைப்பின் தலைமைத்துவத்துடன் “சிங்கள கூட்டமைப்பு” எனும் பெயரில் புதியதொரு அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ளதாக அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தெரிவித்துள்ளார்.

தமிழ் கூட்டமைப்பு, முஸ்லிம் கூட்டமைப்பு எனும் பெயர்களில் பல்வேறு அரசியல் கட்சிகள் இலங்கையில் உள்ளன. அக்கூட்டமைப்புக்களிலிருந்து ஒருபோதும் தலைவர்கள் வருவதற்கு இடமளியோம் என கொழும்பில் இடம்பெற்ற கூட்டமொன்றில் ஞானசார குறிப்பிட்டுள்ளார்.

தலைவர்கள் உருப்படுவதற்கும் உருவாவதற்கும் இந்தக் காலப்பகுதியை வழங்குவதாகவும், அவர்கள் உருப்படாதவிடத்து, உருவாகாதவிடத்து தான் செயற்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள தேரர், நாட்டின் தலைவர்களை உருவாக்குது பொதுபல சேனாவே எனவும் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

Read more...

Monday, October 6, 2014

இலங்கையின் சிறந்த அதிபர்களில் ஒருவர் என்ற விருது மதுராப்புர அஸ்ஸபா அதிபருக்கு!

இலங்கையின் சிறந்த அதிபர்களுள் ஒருவர் என்ற விருதினை வெலிகம - மதுராப்புர அஸ்ஸபா கனிஷ்ட வித்தியாலய அதிபர் எம்.எஸ்.எம். ஹி்ப்ளர் (பீ.ஏ) பெற்றுக் கொண்டுள்ளார்.

இன்று கண்டியில் இடம்பெற்ற இலங்கையிலுள்ள சிறந்த அதிபர்களுக்கான விருதுவழங்கும் வைபவத்தின்போது பிரதமர் தி.மு ஜயரத்ன அவர்களினால் அஸ்ஸபா அதிபர் தனக்குரிய விருதினைப் பெற்றுக் கொண்டார்.

அதிபர் எம்.எஸ்.எம். ஹி்ப்ளர் பல வருடங்கள் வெலிகம - கப்புவத்தை அந்நூர் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றிவிட்டு அண்மையில் (இம்மாதம்) அஸ்ஸபாவின் அதிபராக பணியேற்றுள்ளார். ஏற்கனவே இவர் பல அரச, மாகாண மட்ட விருதுகளையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

(கேஎப்)

Read more...

Sunday, October 5, 2014

பள்ளிவாசல் கட்டிடத்தை அகற்றுமாறு மாத்தறை மாநகர சபை உத்தரவு!

மாத்தறை, இஸ்ஸதீன் நகர் பள்ளிவாசல் கட்டிடத்தை அகற்றுமாறு மாத்தறை மாநகர சபையினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு தொடர்பாக 02.10.2014ஆம் திகதியிடப்பட்ட கடிதமொன்று வக்பு சபையில் பள்ளிவாசல் பதிவுசெய்யப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

எனினும் இந்தக் கடிதத்தில் பள்ளிவாசலின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆனால் பள்ளிவாசல் பதிவுசெய்யப்பட்டுள்ள முகவரிக்கு பள்ளிவாசலின் தலைவரின் பெயர் குறிப்பிடப்பட்டு இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. குறித்த பள்ளிவாசல் அமைந்துள்ள முகவரியிலுள்ள கட்டிடத்தை 14 நாட்களுக்குள் அகற்றுமாறும் இந்தக் கடிதத்தில் தெரிவித்தக்கப்பட்டுள்ளது.

மாத்தறை, இஸ்ஸதீன் நகர் பள்ளிவாசலை மூடுவதற்கு கடும் போக்காளர்கள் கடந்த வருடம் முதல் முயற்சித்து வருகின்றனர். இந்த நிலையே மாத்தறை மாநகர சபையினால் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

தொடர்ந்து நான் அரசாங்கத்தில் இருக்க வேண்டுமா வேண்டாமா? - அரசிற்கு அச்சுறுத்தல் விடுக்கின்றார் மர்வின் சில்வா

தான் தொடர்ந்தும் அரசாங்கத்தில் இருக்க வேண்டுமாயின் தனது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் இணங்க வேண்டும் என அமைச்சர் மர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

பேலியகொடவில் இடம்பெற்ற கூட்டமொன்றின்போது அவர் உரையாற்றுகையில், தனக்கு தொடர்ந்து பணிபுரியத் தெரியாதுவிட்டால்அரசாங்கத்தில் இருப்பதன் அர்த்தம் தான் என்ன என வினவியுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் –

“பெரிய வாகனம் கிடைத்திருக்கின்றது…பாதுகாவலர்கள் கிடைத்திருக்கின்றார்கள்… என நான் பச்சோந்தியாக இருக்க வேண்டியதில்லை. அவ்வாறான பச்சோந்திகள் எங்கள் ஆளும் கட்சியினுள்ளும் இருக்கின்றார்கள். அவ்வாறான பாத்திரம் பொதுமக்களுக்குத் தேவையில்லை. மக்களுக்குத் தேவையானவற்றை என்னால் செய்ய முடியாது விட்டால், அதற்கு அரசாங்கம் உறுதுணையாக இருக்காது விட்டால் கொடுத்திருக்கின்ற வாகனங்களும்.. பாதுகாவலர்களும் எனக்குத் தேவையில்லை. எனக்குச் சொந்த வாகனம் இருக்கின்றது.. பாதுகாவலர்களாக பொதுமக்கள் இருக்கின்றார்கள். ஒருவருடமும் இரண்டு மாதங்கள் எனக்குப் பணிபுரிய இடந்தரவில்லை. அதுதான் என்னுள் இருக்கின்ற வேதனையும் கோபமும். எதிர்வரும் காலத்தில் அரசாங்கம் என் கருத்துக்களுக்கு மதிப்பளிக்காதவிடத்து நான் தொடர்ந்தும் அமைச்சுப் பதவியில் இருக்கப் போவதில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

(கலைமகன் பைரூஸ்)

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com