Showing posts with label Kalanithi. Show all posts
Showing posts with label Kalanithi. Show all posts

Friday, May 15, 2020

முள்ளிவாய்கால் முடிவுக்கதை ! தொடக்கக்கதை கேளீர்! கலாநிதி

அல்பிரட் துரைப்பா அவர்கள் தனிப்பெரும் தலைவர் என்ற அடைமொழியோடு அறியப்பட்ட ஜி ஜி பொன்னம்பலத்தையும் தமிழர்களின் ஒட்டு மொத்த பிரதிநிதிகள் என்று அறியப்பட்ட தமிழரசு கட்சியையும் சுயேச்சை வேட்பாளராக களம் இறங்கி வெற்றி பெற்றவராகும்.

அதற்கு முக்கிய காரணாமாக கருதப்படுவது அவரின் மக்கள் நலம் சார்ந்த அணுகுமுறைதான்.

தமிழரசு கட்சி, தமிழ் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் எல்லோருமே ஏறைக்குறைய கொழும்பு வாழ் தமிழ் மேட்டு குடிகள்தான்.

தமிழ் தலைவர்கள் என்றால் அவர்கள் ஏதோ வானத்தில் இருந்து வந்த தேவனின் புத்திரர்கள் என்ற ரீதியில்தான் நடந்து கொண்டார்கள்.
பண்டிதர் கா பொ.இரத்தினம்

தேர்தல் சமயத்தில் மட்டும் வந்து தமிழ் சிங்களம் போன்ற இரு சொற்களை மட்டுமே வைத்து அரசியலில் தொடர்ந்து வெற்றி பெற்று கொண்டே இருந்தார்கள்.

மறு புறத்தில் வேலை இல்லாத் திண்டாட்டம் கணக்கு வழக்கு இல்லாமல் எகிறி கொண்டிருந்தது.

இன்றும் கூட தமிழ் சிங்களம் என்ற இரண்டு சொற்களை மட்டுமே மூலதனமாக கொண்டு அரசியல் செய்யும் தமிழ் அரசியல்வாதிகள் அதே பார்முலாவில்தான் பயணிக்கிறார்கள். ஆனால் தற்போது மக்கள் கொஞ்சம் விழித்து கொண்டு விட்டார்கள்.

அன்றய வடக்கு தமிழ் அரசியல்வாதிகளில் அல்பிரட் துரையப்பாவுக்கு இருந்த தனிப்பட்ட செல்வாக்கு எந்த தமிழ் தலைவருக்கும் இருந்ததில்லை.

பெரிய தமிழ் தலைவர்களுக்கு எல்லாம் பெரிய கூட்டங்கள் இருந்தன . ஆனால் அவை வெறும் கும்பல்கள் என்ற ரீதியில் மட்டுமே இருந்தன.

ஏனெனில் அவர்கள் எல்லோருமே தமிழ் சிங்களம் என்ற இரு சொற்களை வைத்து அரசியல் செய்பவர்களாகும்.

இனவாதத்தை வளர்த்து அதில் மட்டுமே குளிர்காய்ந்து அரசியல் நடத்தியவர்கள் ஆரம்பத்தில் துரையப்பாவை அரசியல் ரீதியாக வீழ்த்தி விட முடியும் என்று கருதி கொண்டுதான் இருந்தார்கள்
அவர்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி வைத்தியம் நடந்தது 1970. ஆம் ஆண்டு தேர்தலில்.

இருபெரும் கட்சிகளான தமிழரசு கட்சியும் தமிழ் காங்கிரஸ் கட்சியும் ஆறு தொகுதிகளில் அதிர்ச்சிகரமான தோல்விகளை சந்தித்தன.

இரு கட்சிகளையும் சேர்ந்த மிக முக்கிய தலைவர்கள் தோல்வி அடைந்தனர் .

இரு கட்சிகளும் ஒன்றோடு மோதிக்கொண்டு தோற்று போனவர்கள் பட்டியல் இதோ

:1 - ஜி ஜி பொன்னம்பலம் ( இவரின் பேரன்தான் இன்ற புலி ஆதரவு அரசியல்வாதி கஜேந்திரகுமார் போன்னம்லம்)
திரு அமிர்தலிங்கம்
திரு எம் சிவசிதம்பரம்
திரு தா.சிவசிதம்பரம்
திரு .ஆலாலசுந்தரம்
திரு .இ எம் வி .நாகநாதன் ( தந்தை செல்வநாயகத்தின் சம்பந்தி. சந்திரகாசனின் மருமகன்)

இந்த தோல்விதான் தமிழரசு கட்சியின் புதிய அரசியல் பயணத்திற்கு காரணமானது.

இந்த சூழ்நிலையில் உலக தமிழராச்சி மன்றத்தில் பெரும் வலுவான குழுவாக இருந்தவர்கள் இலங்கை தமிழரசு கட்சியின் ஆதரவாளர்களும் அரசியல்வாதிகளும் ஒரு முக்கிய செய்தியாகும்
குறிப்பாக உலக தமிழராய்ச்சி நிறுவனம் முதலில் மலேசியாவில்தான் உருவானது .

அங்கு பணியில் இருந்த தனிநாயகம் அடிகளும் பண்டிதர் கா பொ இரத்தினமும் இது முக்கிய பங்காற்றி இருந்தார்கள்.

மலேயயா பல்கலைக்கழகத்தில் தனிநாயகம் அடிகளாரோடு இணைந்து பணியாற்றினார் பண்டிதர் கா பொ இரத்தினம் அவர்கள். .

திரு பண்டிதர் கா பொ இரத்தினம் பின்பு தமிழரசு கட்சியின் எம்பியாக கிளிநொச்சி ஊர்காவல் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றார் .

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழர்ராய்சி மாநாட்டு நிகழ்வுகள் அனைத்தையும் தற்போது மீண்டும் ஒரு தடவை எண்ணிப்பார்க்கவும்.

மிக தெளிவாக புரியக்கூடிய அரசியல் கணக்குகள் இந்த யாழ்ப்பாண மாநாட்டில் தங்கி இருந்தது என்பது ஒரு பெரிய ரகசியமே அல்ல.

அன்றைய காலக்கட்டத்தில் சரி எது பிழை எது என்று மக்கள் சிந்திக்க கூடியி நிலையல் இல்லை என்பது கவனிக்க வேண்டிய விடயமாகும்.
இலங்கையில் சிங்கள இனவாதம் தலை தூக்கி ஆடிகொண்டு இருந்த காலக்கட்டம் அது.

மிக கவனமாக அரசியலை கையாள வேண்டிய முக்கிய சந்தர்ப்பத்தில் வெறும் தேர்தல்களில் வெற்றி பெறுவது ஒன்றே குறி என்று இலங்கை தமிழரசு கட்சி செயலாற்றியது.

1970 தேர்தலில் இரு கட்சிகளுக்கும் பல தொகுதிகளில் மிகவும் குறைந்த வாக்கு வித்தியாசத்திலே வெற்றியும் தோல்வியும் தீர்மானிக்கப்பட்டது.

அந்த தேர்தலில் யாழ்ப்பாண தொகுதியில் வெறும் 56 வாக்குகளால் திரு அல்பிரட் துரையப்பா வெற்றி வாய்ப்பை இழந்தார் .

அதில் வெற்றி பெற்றவர் பல தேர்தல்களின் தமிழரசு கட்சி சார்பாக போட்டி இட்டு தோற்றுகொண்டு இருந்த சி எக்ஸ் மார்டின் ஆகும்.

இவர் வெற்றி பெற்ற சில நாட்களிலே ஸ்ரீ மாவோ அம்மையாரோடு சேர்ந்து கொண்டார். திரு ஜி ஜிபோன்னம்பலமோ மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
யாழ்ப்பாண தமிழராய்ச்சி மாநாட்டின் போது ஏற்பட்ட மக்கள் எழுச்சிதான் தமிழரசு தமிழ் காங்கிரஸ் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழர் விடுதலை கூட்டணியாக உருவெடுக்க முக்கிய காரணமாகும்.

இந்த இருபெரும் கட்சி தொண்டர்களின் தமிழ் தேசியம் உணர்வுகள் மிகவும் உணர்சிகரமாக இருந்தது. எதையும் சீர்தூக்கி பார்க்க கூடிய நிலையில் அன்று மக்கள் இருக்கவில்லை.மக்களை அப்படி ஒரு நிலைக்கு தள்ளியதில் அமிர்தலிங்கத்தின் பங்கு அளப்பெரியது.

அவரின் மனைவி திருமதி மங்கையர்கரசி அமிர்தலிங்கம் பேச தொடங்கினால் மக்களை கண்ணீர் விடும் அளவுக்கு பேசுவார் . மிக சிறந்த பேச்சாளர் . நல்ல இசைப்புலமையும் உள்ளவர் . சில மேடைகளில் உணர்ச்சி ஊட்டும் பாடல்களையும் பாடுவார்.

திரு அமிர்தலிங்கத்தின் பிபலமாக ஒரு இளைஞர் கூட்டத்தை அவர் கட்டி மேய்த்தார் . அதில் ஒருவர்தான் இன்றைய எம்பி மாவை சேனாதிராசாவும். குறிப்பாக பிரபகரனுகும் அமிர்தலிங்கத்துக்கும் இடையில் நல்ல தொடர்பு இருந்தது.

அல்பிரட் துரையப்பாவின் கொலையில் அமிர்தலிங்கத்தின் மகனின் பங்கும் இருப்பதாக பலர் நம்புகிறார்கள். இப்படிப்பட்ட ஒரு உன்மத்த நிலைக்கு அன்றைய தமிழ் சமுகத்தை உருவாக்கி இருந்தார்கள் தமிழரசு கட்சியினர். முழுக்க முழுக்க தேர்தல் வெற்றிகளை மனதில் கொண்டே அதை அவர்கள் கட்டமைத்தர்கள்.

அவர்கள் தொகுதிகள் தோறும் பல இளைஞர்களை மூளை சலவை செய்வதில் வெற்றி பெற்றார்கள் . துரையப்பாவை கொன்றபின் நடந்த தேர்தலில் இணைந்த தமிழரசு தமிழ் காங்கிரஸ் கட்சிகள் வரலாறு காணாத வெற்றிகளை அள்ளி குவித்தார்கள். அதன் காரணமாகவே அமிர்தலிங்கம் எதிர்கட்சி தலைவராக வர முடிந்தது.

துரைப்பா கொலையின் காரணமாக யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சியின் இளம் நட்சத்திரம் என்று அறியப்பட்ட திரு யோகேஸ்வரன் பெருவெற்றி பெற்றார் ( இவரும் புலிகளின் குண்டுகளுக்கு இரையானர்); -கலாநிதி...............................

Read more...

Monday, May 11, 2020

செல்வி கைது ..சித்திரவதை .. கொலை . அவர் செய்த குற்றம் .. மனித நேயம்! புலிகளின் மற்றொரு கொடுரம்! கலாநிதி

1991ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அருகில் தான் தங்கியிருந்த வீட்டிலிருந்து செல்வி புலிகளால் கைது செய்யப்பட்டார். செல்வி உருவாக்கிய படைப்புக்களும் கருத்துக்களும் விடுதலைப் புலிகளை நோகடித்து விட்டதாகவும் அதற்கான தண்டனையாகவே செல்வி கைது செய்யப்பட்டதாகவும் புலிகளுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

உதாரணத்திற்கு தமிழ் மக்களின் விடுதலையை உத்தரவாதப் படுத்தப்போகும் ஒரு இயக்கத்தினுள் சுதந்திரம் இருக்கிறதா என்று செல்வி கேள்வி எழுப்பினார். புலிகள் செல்வியை ஒழித்துக்கட்டுவதற்கு முடிவெடுத்து இருந்ததாகவே செய்திகள் தெரிவித்திருந்தன. ஆனால் மற்றுமொரு மனித உரிமைவாதியான ரஐனி திராணகமவைப் போன்ற அதே தன்மையான ஒரு சூழ்நிலைக்கு செல்வியின் நிலமையும் இட்டுச் செல்லாதவாறு இருக்கும்படியாக புலிகள் வேறு முடிவை எடுத்தனர். அதுவே கைது செய்தலாக முடிவுற்றது.

செல்வியின் இருப்பிடத்திலிருந்து செல்வியின் கையெழுத்துப் பிரதிகள் குறிப்புக்கள் கடிதங்கள் புத்தகங்கள் அனைத்துமே அவர்களால் எடுத்துச் செல்லப்பட்டது.

செல்வி வவுனியாவில் உள்ள சேமமடு என்னும் கிராமத்தில் பிறந்தவர். யாழ் பல்கலைக்கழகத்தில் நாடகம் அரங்கியலும் என்ற பட்டப்படிப்பின் இறுதியாண்டு மாணவி. அத்தோடு இவர் நாடக நெறியாளரும் நடிகையுமாவார். ‘தோழி’ இதழின் ஆசிரியரும் கூட.

செல்வி தன் நாடகங்களினாலும் கவிதைகளினாலும் குறுகிய காலத்திலேயே மதிப்பிடக்கூடிய படைப்பாளியாக விளங்கினார். புலிகளுக்கு ஆதரவாக இருப்பதை விடுத்து சுயேற்சையாக சுதந்திரமாக இயங்குவதற்கு பல்கலைக்கழக சக மாணவர்களை செல்வி ஊக்குவித்தார் . அவர் கவிஞராகவும், நாடகாசிரியராகவும் பணியாற்றியவர். பாலஸ்தீன கைதிகள் பற்றிய நாடகமொன்றையும் அவர் இக்காலத்தில் செய்திருந்தார்.

விடுதலைப் புலிகள் உள்ளிட்ட சில இயக்கங்களின் மனித உரிமை மீறலை விமர்சிக்கின்ற நாடக மொன்றை அரங்கேற்றத் தயராகிக் கொண்டிருக்கையிலேயே அவர் கடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.

தமது படைப்புகளுக்கூடாக பெண் விடுதலை கருத்துக்களை பரப்பியவர். சிறந்த பெண்ணியவாதியான செல்வி யாழ் பெண்கள் ஆய்வு வட்டம், யாழ் பல்கலைக்கழக மாணவ அவை மற்றும் இலக்கியவட்டத்தின் உறுப்பினராகவும் இருந்தார். பல்கலைக்-கழத்தில் பெண்கள் இயக்கத்தில் தீவரமாக செயற்பட்டிருந்தார்.

வடக்கில் நடந்த யுத்தத்தின் போது பாதிப்புக்கும், குண்டுத் தாக்குதலுக்கும் உள்ளானவர்களுக்கு நிவராண உதவிகளை செய்வதில் ஈடுபட்டிருந்தார்.. யாழ்ப்பாணத்தில் அல்லல்படும் தாய்மார்களுடன் முன்னின்று செயல்பட்டதினால் அவர் சமூகத்திற்கு நன்கு அறியப்பட்டவராக இருந்தார். பூரணி பெண்கள் இல்லத்தின் செயல்பாட்டாளர்களில் ஒருவராகவும் முக்கிய பங்கை வகித்தார்.

ஈழத்து பெண் கவிஞர்களின் கவிக்குரலாக வெளியிடப்பட்ட 'சொல்லாத சேதிகள் ' என்ற தொகுப்பில் செல்வியின் கவிதைகள் வெளிவந்துள்ளன. அத்தோடு செல்வியின் கவிதைகளும் சிவரமணியின் கவிதைகளும் சேர்ந்த தொகுப்பொன்றை தாமரைச் செல்வி பதிப்பகம் தமிழகத்தில் வெளியிட்டிமிருந்தது. செல்வியின் கவிதைகள் தமிழகத்திலுள்ள சிறு பத்திரிகைகளான மனஓசை, மண் அரங்கேற்றம் இவை தவிர ஓசை, நான்காவது பரிமாணம், சரிநிகர், திசை போன்ற இதழ்களிலும் வெளிவந்துள்ளது. சில கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு தொகுப்புக்களிலும் இடம்பெற்றுள்ளன.

செல்வியின் விடுதலையைக்கோரி சர்வதேச மனித உரிமை அமைப்பான Amnesty International பலவாறு முயன்றது. தனது இதழான Focus செல்வியைப் பற்றி 1994ம் ஆண்டு மார்ச் இதழில் விடுதலையைக் கோரி எழுதியது. புலிகள் எதற்கும் செவி சாய்க்கவில்லை.

இந்த இக்கட்டான காலகட்டத்தில்தான் உலகப் புகழ்பெற்ற ‘Poetry International Award’ கவிதைக்கான சர்வதேச விருது செல்விக்கு வழங்கப்பட்டது. International PEN என்று அழைக்கப்படும் சர்வதேச கவிஞர்கள் எழுத்தாளர்கள் நாவலாசிரியர்கள் கூட்டமைப்பான (Poets Essayists and Novelists) PEN அமைப்பு கார்ல்ஸ் வொர்த்தியால் தொடங்கப்பட்டதாகும்.

இவ் விருதானது தங்களுடைய நம்பிக்கைகளுக்காகவும், இலட்சியத்திற்காகவும், எழுத்துத்தளத்திலும், கலைத் தளத்திலும், படைப்புக்களை உருவாக்கியவர்களுக்கு வழங்கப்படுவதாகும். செல்வி ஈழத்தின் நெருக்கடியான போராட்ட சூழ்நிலையில் இத்துறைகளில் சேவை புரிந்தமைக்காக இவ் விருது வழங்கப்பட்டது.

செல்வி உயிருடன் இருப்பதாக நம்பி வந்த அவருடன் நெருங்கிய அனைவருமே மனந் தளர்ந்து போயிருந்தனர் . அவரது தாயார் உட்பட எந்த உறவினரும் அவரை சென்று பார்க்க அனுமதிக்கப்படவில்லை. அவர் தேகாரோக்கியம் குன்றிய நிலையில் இருப்பதாக அஞ்சுகிறோம் என்று றொட்டர்டாம் போயற்றி இன்டர்நெஷனல் 1994இல் அறிக்கை வெளியிட்டது.

1992இல் எழுதுவதற்கான சுதந்திரம் எனும் விருது 'PEN' எனும் சர்வதேச அமைப்பின் விருது செல்விக்கு கிடைத்தது. இவ்விருதினை அதற்கு முன்னரே வழங்கத் தீர்மானித்திருந்தபோதும் இவ்விருதின் மூலம் சிறைவைக்கப்பட்டிருக்கும் அவருக்கு ஏதும் ஊறு நேரக்கூடும் என்றும் விருதினை அறிவிக்க வேணடாம் என்று செல்வியின் நண்பர்கள் பலர் அறிவித்திருந்ததாக ' PEN' அமைப்பின் தலைவர் எட்மண்ட் கீலி அறிக்கையொன்றில் தெரிவித்திருந்தார்.

ஆனாலும், அவரது நிலை அல்லது அவரது இருப்பிடம் பற்றிய எதுவித தகவலையும் காணவில்லையென்பதால் விருதினை பகிரங்கப்படுத்த வேண்டிய தருணம் வந்துவிட்டதாக 1992இல் 'PEN 'அமைப்பின் தலைவர் அறிவித்திருந்தார்.

சர்வதேச கவிதை அமைப்பு 1994க்கான International betry Sbciety award எனும் விருது வழங்கப்பட்டது. இது மானுட சுதந்திரத்திற்காகவும், அடிப்படை உரிமைக¬ளுக்காகவும் குரல் கொடுத்த ”சுதந்திரம் மறுக்கப்பட்ட” கவிஞர்களுக்காக வழங்கப்படுகின்ற விருதாகும்.

இவ்விருது வழங்கப்பட்டபின் விடுதலை செய்யப்பட்ட சர்வதேச கவிஞர்களைப் போலவே செல்வியும் விடுதலை செய்யப்படவேண்டுமென இவ்வமைப்பு கேட்டுக்கொண்டது.

இவ்விருது பற்றிய அறிவித்தலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றது:

“மரணத்தையோ அல்லது சிறைவாசத்தையோ கவிஞர்கள் எதிர்கொண்ட போதும், அவர்கள் மனிதனது மொழியை பேசுகிறார்கள். கருத்துச் சுதந்திரத்திற்கான போராட்டத்திற்கு உருக்கொடுக்கிறார்கள். மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் அதற்கு போராடுவதற்கும் உலகம் தழுவிய முயற்சிகள் இருந்த போதிலும், மனிதனுடைய கௌரவத்தை நேர்மையாக பகிரங்கப்படுத்தும் குரல்களுக்கான அவமதிப்பும், கவிதைக்கான அவமதிப்பும் என்பது மனித வாழ்வுக்கேயான அவமதிப்பாக அநேகமாக வெளிப்படுகின்றது “.

இந்த பிரசுரத்தின் இறுதிவரிகள் இவ்வாறு நிறைவுபெறுகின்றன. "மனித உயிருக்கும் உடலுக்கும் மரியாதை குன்றிப்போதல் மேலோங்கிவரும் இவ் உலகில், பலியாகிப்போன இன்னல்களுக்குள்ளான சகல கவிஞர்களையும் இன்னும் நூற்றுக்கணக்கான அறியப்படாத தனிநபர்களையும் அங்கீகரிக்கும் அதே நேரத்தில், இந்த வருடத்திற்கான விருதினை தமிழ் கவிஞையான செல்விக்கு வழங்குவதற்கு இவ் அமைப்பின் தலைமைப்பீடம் தீர்மானித்துள்ளது."

இலங்கையைச் சேர்ந்த ஒருவருக்கு முதன்முறையாக வழங்கப்பட்ட விருதான இதனை பெற்றுக் கொள்ள செல்வி அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் விடுதலைப் புலிகளினால் சிறைவைக்கப் பட்டபடியே அப்போதும் இருந்தார்.

1993 டிசம்பர் வெளியான 'சரிநிகர்' பத்திரிகையில், விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் பேட்டியில் (இப்பேட்டியில் மூலமானது Counterpoint எனும் ஆங்கில சஞ்சிகையாகும்) செல்வி தமது தடுப்புக் கைதியாகவே இருப்பதாக ஒப்புக் கொண்டிருந்தார்.

செல்வியின் விடுதலைக்காக பல சர்வதேச நாடுகள் குரல் கொடுத்து வந்தன.

மேலும் சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட பல மனித உரிமை நிறுவனங்களும் அவரது விடுதலையைக் கோரியிருந்தன. தேசத்தை நேசித்தது தான் செல்வி செய்த குற்றம். மனிதத்தைக் கோரிய அவரது அர்ப்பணிப்பு தான் அவர் செய்த குற்றம்.
அவரது கவிதைகள் யுத்தத்தினால் நலிவுற்ற பெண்கள் பற்றியதும் யுத்தம் பற்றியதுமான சித்திரங்களையே வெளிப்படுத்தியது. இன்று அவர் எம்முடன் இல்லை. விடுதலையின் பேரால், கருத்துச் சுதந்திரத்தின் குரல் நசுக்கப்படுகின்ற அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாங்கள் மீள எழுவோம். நாங்கள் மீளவும் உயிர்ப்போம். மானுட விடுதலைக்காக

விக்கிப்பீடியா : செல்வநிதி தியாகராசா ஈழத்துக் கவிஞரும், பெண்ணிலைவாதியும் ஆவார். இவர் செல்வி எனும் பெயரினால் பெரிதும் அறியப்பட்டவர். இவருக்கு சர்வதேச கவிஞர்கள் எழுத்தாளர்கள் நாவலாசிரியர்கள் கூட்டமைப்பின் (PEN) 1992 ஆம் ஆண்டுக்கான எழுத்துச் சுதந்திரத்துக்கான பன்னாட்டு விருது கிடைத்தது[1]. இவர் 1991 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்டார்.

இவர் நாடக நெறியாளரும் நடிகையுமாவார். தோழி எனும் பெண் இலக்கிய இதழின் ஆசிரியராக செயற்பட்டார்.

ஈழத்து பெண் கவிஞர்களின் கவிக்குரலாக வெளியிடப்பட்ட சொல்லாத சேதிகள் என்ற தொகுப்பில் செல்வியின் கவிதைகள் வெளிவந்தன. செல்வியின் கவிதைகள் மனஓசை, மண், அரங்கேற்றம், ஓசை, நான்காவது பரிமாணம், சரிநிகர், திசை போன்ற இதழ்களிலும் வெளிவந்தன. சில கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு தொகுப்புக்களிலும் இடம்பெற்றன. யாழ் பெண்கள் ஆய்வு வட்டம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவ அவை மற்றும் இலக்கியவட்டத்தின் உறுப்பினராகவும் இருந்தவர். இரண்டு நாடகங்களையும் எழுதியிருக்கிறார். "பூரணி இல்லம்" என்ற பெண்கள் மையத்தின் உறுப்பினராக இருந்தார். வடக்கில் நடந்த யுத்தத்தின் போது பாதிப்புக்கும், குண்டுத் தாக்குதலுக்கும் உள்ளானவர்களுக்கு நிவாரண உதவிகளை இந்த மையம் செய்து வந்தது.

உலகப் புகழ்பெற்ற ‘Poetry International Award’ கவிதைக்கான சர்வதேச விருது செல்விக்கு சர்வதேச கவிஞர்கள், எழுத்தாளர்கள், நாவலாசிரியர்கள் கூட்டமைப்பான Poets Essayists and Novelists (PEN) அமைப்பால் வழங்கப்பட்டது.[1].

கடத்தப்பட்டமை

1991 ஆகத்து 30 ஆம் நாள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அருகில் உள்ள அவரது வீட்டில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரால் கடத்தப்பட்டார்.[2] செல்வியின் விடுதலைக்காக பல சர்வதேச நாடுகள் குரல் கொடுத்தன. சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட பல மனித உரிமை நிறுவனங்களும் அவரது விடுதலையைக் கோரியிருந்தன. இவர் பின்னர் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது..


Read more...

Saturday, May 9, 2020

ஸ்ரீ சபாரத்தினம் கொலை .. பத்மநாபா கொலை ... புலிகளின் அடுத்த குறி .... யாராக இருந்தது? கலாநிதி

ஸ்ரீ சபாரத்தினம் அவர்கள் கொஞ்சம் வசதியான நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவராகும்.. அவரது ஆரம்ப அரசியல் ஈடுபாடு அன்றைய தமிழர் விடுதலை கூட்டணியின் இளைஞர் ஆதரவு தளத்தில் இருந்ததான் ஆரம்பமாகிற்று .

அரசியல் கட்சிகளின் ஜனநாயக பாதை இனி ஏற்புடையது அல்ல என்ற பொதுக்கருத்து எல்லோர் மனதிலும் அப்போது உருவாகி இருந்தது. ஈழ விடுதலையை நோக்கமாக கொண்டு பல சிறு சிறு அமைப்புக்கள் இயக்கங்கள் ஆங்கும் இங்குமாக தோன்றிகொண்டு இருதது.

அவற்றில் பலம் வாய்ந்த இயக்கங்களாக டெலோவும் ஈரோசும் பிளாட்டும் புலிகளும் உருவானார்கள். பின்பு ஈரோசில் இருந்து கருத்து வேறுபாடுகளால் பிரிந்த பத்மநாப ஈ பி ஆர் எல் எப் இயக்கத்தை தொடங்கினார்.

கொள்கை அளவில் இந்த இயக்கங்கள் இடையே கொஞ்சம் தனித்துவமான வேறுபாடுகள் இருந்தன. அவற்றின் கொள்கைகள் பற்றிய ஆய்வுகளை கூறப்புகின் அதுவே ஒரு பெரிய நூல் ஆகிவிடும்.

டெலோ இந்திய நலனை சார்ந்துதான் ஈழம் அமைய முடியும் என்ற அடிப்படை கொள்கையை கொண்டிருந்தது. இந்தியாவை விரோதித்து கொண்டு ஈழத்தை அமைத்து விட முடியாது என்ற கருத்தை மிகத் தெளிவாக வெளிப்படையாக அறிவித்த ஒரே விடுதிலை இயக்கம் டெலோ மட்டும்தான்.

ஈ பி ஆர் எல் எப் இயக்கமும் டெலோவை போலவே இந்திய நலனை மீறி போராட்டத்தை தொடர முடியாது என்ற கொள்கையை ஓரளவு கொண்டிருந்தது. புளட் , புலி .. ஈரோஸ் போன்றவை வெளிப்படையாகவே இந்தியாவை நம்ப முடியாது என்று போராட்டம் தொடங்க முன்பே தெரிவித்து கொண்டவையாகும்.

தமிழக அரசியல் கட்சிகளும் பல தலைவர்களும் தங்களின் இந்திய மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை இந்த இயக்கங்கள் மீது இறக்கி வைத்தன.

இதில் சிக்காமல் இந்திய மத்திய அரசின் துணையும் வேண்டும் தமிழக மக்களின் ஆதரவும் வேண்டும் என்ற நிலையில் டெலோ இருந்தது.

எம்ஜியார் ஆதரவு ஒரு புறமும் நெடுமாறன் வைகோ மற்றும் பெரியார் இயக்கங்களின் ஆதரவும் தனக்கு போதும் என்று புலிகள் கருதினார்கள..

ஈழத்தில் விடுதலை போராட்டங்கள் பெரிதாக எழுச்சி அடையும் முன்பே ஈழதமிழர்களுக்காக தொடர் போராட்டங்களையும் தொடர்ந்து நடத்தி ஈழத்துக்கான மிக பெரும் ஆதரவு தளத்தை கலைஞர் உருவாக்கி இருந்தார்.

இன்னும் சரியாக சொல்ல போனால் திராவிட முன்னேற்ற கழகம் உருவாக்கிய ஈழ ஆதரவு தளமனானது வெறும் தமிழக நிலப்பரப்பிற்குள் மட்டும் சுருங்கி இருக்கவில்லை. அகில இந்திய அளவில் ஈழத்துக்கு ஆதரவான மிகபெரும் எழுச்சியை உண்டாக்கி இருந்தது. உலக ஊடங்களிலும் தம்ழகத்தின் எழுச்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆங்கில பிரெஞ்சு ஜெர்மன் போன்ற ஐரோப்பிய மொழி ஊடகங்களிலும் ஒரு அன்றாட செய்தியாகி இருந்தது.

ஈழ விடுதலை போராட்டத்திற்கு உலக அரங்கில் கிடைத்த அதீத வெளிச்சம், ஈழ விடுதைலையை ஒரு கவர்சிகரமான விடயமாக மாற்றி விட்டிருந்தது. அந்த கவர்சிகரமான தேரில் ஏறி இடம் பிடிக்க உலகெங்கும் பலர் போட்டி போட்டுக்கொண்டு ஏறி இடம் பிடித்தனர் .

ஈழ விடுதலை போராட்ட ஆதரவு தளத்தை உருவாக்கி வைத்திருந்தது திராவிட முன்னேற்ற கழகம். நெடுமாறன் போன்றோர் உடனே முண்டி அடித்து கொண்டு ஈழ விடுதலை போராட்ட கப்பலில் ஏறி குதித்தார்.
அவர் தான் சவாரி செய்ய தேர்ந்தெடுத்த குதிரைதான் புலிகள் இயக்கம்.

புலிகள் இயக்கத்திற்கு தமிழகம் ஒரு புத்தம் புது தளமாக இருக்கவில்லை. ஏற்கனவே அவர்களின் பிரதேச ரீதியான தொடர்பு தமிழகத்தில் ஓரளவு இருந்தது. ஏனைய இயக்கங்களுக்கு தமிழகம் முற்று முழுதாக ஒரு புதிய தளமாக இருந்தது. எனவே தமிழக தொடர்புகள் மூலமான வசதி வாய்ப்புக்கள் கொஞ்சம் அதிகமாகவே பிரபாகரனுக்கு கிடைத்திருந்தது. ஒரு புறம் நெடுமாறன் வைகோ போன்றவர்களின் நெருக்கமும் மறுபுறம் எம்ஜியாரோடு ஏற்பட்ட ஒரு கூட்டும் புலிகளின் மனதில் ஒரு தனிக்காட்டு ராசா மனநிலையயை உண்டாக்கி இருந்தது. .

எம்ஜியாரோடு புலிகளுக்கு ஏற்பட்ட தொடர்பு அவர்களுக்கு பெரிய உதவியாக அமைந்தது. புலிகளுக்கு எல்லா வசதிகளையும் அவர் செய்து தந்தார். எல்லை மீறியும் தந்தார். அந்த காலக்கட்டத்தில் விஜயவாடா துறைமுகத்தில் வந்து சேர்ந்த ஒரு கப்பலில் இருந்த காண்டேயினர் ஒன்றில் முழுவதும் பெரிய ஆயுத குவியலாக இருந்தது. அதில் புளட் இயக்கத்திற்கு வந்த 1400 ஏகே 47 துப்பாக்கிகளையும் 375 இயந்திர துப்பாக்கிளும் இருந்தன. அவற்றை கைப்பற்றிய எம்ஜியார் அபப்டியே அவற்றை புலிகளிடம் கொடுத்தார் .

ஈழ விடுதலை போராட்டத்தில் நடந்த முதல் மிக பெரிய ஆயுத கொள்ளை அதுவாகும். அதை நடத்தியவர் எம்ஜியார் . அது புலிகள் அமைப்பை பல மடங்கு பலம் மிக்க ஆயுத குழுவாக மாற்றி விட்டது. அந்த ஆயுத குவியலை தந்த எம்ஜியாருக்கு நன்றி கடன் செலுத்த வேண்டும் அல்லவா? கலைஞரோடு கைகோர்த்து கொண்ட ஸ்ரீ சபாரத்தினத்தையும் அவர் தலைமை விகித்த டெலோ இயக்க போராளிகளையும் கொன்று எம்ஜியாருக்கு அந்த நன்றியை செலுத்தினர் பிரபாகரன்.

அந்த கொடூர நாட்களில் ஸ்ரீ சபாரத்தினத்தினத்தின் கொலையை தடுக்க கலைஞர் தன்னாலான எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டார். புலிகள் கலைஞரின் கோரிக்கையை செவி மடுக்கவில்லை. டெலோ அழிப்புக்கு பின்பு பிரபாகரனுக்கு விருந்து வைத்தார் எம்ஜியார். இதை வாசிப்போர்களுக்கு நம்புவது சிரமமாக இருக்கும் .. ஆனால் இதுதான் உண்மை.

கலைஞர் மீது எம்ஜியார் கொண்டிருந்த காழ்ப்புணர்ச்சியும் . இயல்பிலேயே கொடூர சர்வாதிகார மனோ நிலையும் கொண்ட பிரபாகரனும் சேர்ந்து செய்த மிக பெரிய முதல் போர்குற்றம் அது .

அன்றே சர்வதேச மன்னிப்பு சபை போன்ற உலக அமைப்புக்களில் இந்த விடயம் எடுத்து சென்றிருந்தால் அன்றே பிரபாகரன் மட்டுமல்ல எம்ஜியாரும் கூட ஒரு கடுமையான போர் குற்றவாளியாகி இருப்பார்.
ஈழப்போராட்டத்தில் கலைஞரின் செல்வாக்கு இருக்க கூடாது என்பது எம்ஜீயாரின் நோக்கம். ஈழ போராட்டத்தில் எவரது ஈடுபாடும் இருக்க கூடாது என்பது பிரபாகரனின் பேராசை. இரண்டு சுயநல உணர்வுகளும் நன்றாக ஒத்து போனது!.

டெலோ ஈ பி ஆர் எல் எப் போன்ற அனைத்து இயக்கங்களினதும் அழிவுகளுக்கு பின்பாக இலங்கை ராணுவம் வேகமாக முன்னேறியது. இயக்கங்கள் எப்படி அழிந்ததுவோ அதை விட வேகமாக ராணுவ கட்டுப்பட்டு பரப்பளவு பெருகி கொண்டே வந்தது.

இறுதியில் புலிகள் அச்சுவேலி என்ற ஒரு சிறிய நிலப்பரப்புக்குள் முடக்கப் பட்டார்கள்.( அது முள்ளி வாய்க்காலை விட மிக மிக சிறிய நிலப்பரப்பு)

இன்னும் ஒரு சில வாரங்களுக்குள் ஈழ போராட்டம் முடிந்துவிடும் என்று இலங்கை அரசு அறிவித்தது. அப்போது அசுர பலத்தோடு பதவியில் இருந்த ஜே ஆர் ஜெயவர்த்தன அரசு இந்தியாவை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. சாதாரண ராஜதந்திர பேச்சு வார்த்தைகள் ஒன்றுமே ஜே ஆரிடம் எடுபட வில்லை. அன்று இலங்கை ராணுவம் முழு வடக்கு கிழக்கையும் தனது கட்டுப்பாடுக்குள் கொண்டு வந்தால் தமிழர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற கேள்வி பல மட்டங்களிலும் ஒரு விவாத பொருளாக மாறி இருந்தது.

இந்த நிலையில் ராஜீவ் காந்தி இலங்கை விடயத்தில் தலையிட்டார். பிரபாகரனை காப்பாற்றினர்.

தனக்கு ஆபத்து என்றதும் குய்யோ முறையோ என்று முறையிடுவதும் பின்பு ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்து கொல்வதும் தான் பிரபாகரனின் வரலாறு.

அவருக்கு நல்ல புத்தி சொல்ல வேண்டிய எம்ஜியார் நெடுமாறன் போன்றோர் அன்று அவருக்கு நெருக்கமாக இருந்தனர் . அவர்கள் மேலும் மேலும் பிரபாகரனின் சர்வாதிகார ஆசைக்கு தூபம் போட்டு அவரை மேலும் மேலும் முட்டாள் ஆக்கி கொண்டிருந்தனர் . தங்களின் அரசியல் இருப்பை உயர்த்தி கொள்ளவே அவரை பயன்படுத்தி கொண்டனர்.

இந்திய ராணுவம் நாடு திரும்பியதும் இந்திய ராணுவத்தையே புறமுதுகு கண்ட பெருவீரன் என்று நெடுமா வைகோ போன்றோர்ர் மட்டுமல்லாது பல பெரியார் இயக்கத்தினரும் போற்றி புகழ் பாடினார்கள்.

இந்த நிலையில் பிரபாகரன் தனது அடுத்த கட்ட சதிக்கு ஆயத்தமானார். சென்னையில் வைத்து பட்டப்பகலில் பத்மநாபா உட்பட பதினான்கு ஈ பி ஆர் எல் எப் தலைவர்கள் ( எம்பி யோகசங்கரி உட்பட) தொண்டர்களை புலிகள சுட்டு தள்ளினார்கள்..

எம்ஜியார் இல்லாத அதிமுக புலிகளுக்கு ஒரு எதிர்நிலையில் இருந்தது. ஜெயலலிதா ஒரு போதும் புலிகளை ஆதரித்ததில்லை. அவருக்கு புலிகளின் தன்மை நன்றாகவே புரிந்திருந்தது. எம்ஜியாரின் வாரிசல்லவா ?
பாம்பின் கால் பாம்பு அறியும்தானே? புலிகளை ஒரு போதும் திருப்தி படுத்தவே முடியாது என்பதையும் அவர் அறிந்தே இருந்தார்.!

இனி அதிமுக மூலம் எதுவும் தங்களுக்கு கிடைக்காது என்பதை புரிந்துகொண்டனர் புலிகள். ஆனாலும் வழமை போல தாங்களுக்கு வேண்டிய விடயங்களை அதிமுகவினருக்கு பணம் கொடுததே சாதித்து கொண்டு வந்தனர். அதிமுக ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் புலிகளின் சகல சட்ட விரோத நடவடிக்கைகளும் பணப்பரிமாற்றம் மூலம் தங்கு தடையின்று நடந்த வண்ணமே இருந்தது. அதிமுகவை ஒவ்வொரு புலி ஆதரவாளரும் விரும்பும் காரணம் அதுதான்.

என்னதான் ஜெயலலிதா புலிகளுக்கு எதிராக பேசி அகதி முகாம்களில் இருந்த மக்களின் கல்வியில் மண்ணை அள்ளி போட்டாலும் புலிகள் எப்போது அதிமுகவையே ஆதரித்தனர் . காசு கொடுத்தால் காரியம் நடக்கும் அல்லவா?

புலிகளுக்கு தமிழகத்தில் தங்களின் மாபியா தளத்தை வலுவான முறையில் அமைக்கும் திட்டம் இருந்தது. அவர்களின் நீண்ட காலத்து கனவு திட்டங்களுக்கு அது தேவையாக இருந்தது. பத்மநாபா கொலையும் கூட அதன் ஒரு பகுதியாக இருக்க வாய்ப்புள்ளது.

கலைஞரை கொல்வதற்கு புலிகள் ரகசிய திட்டம் வைத்துள்ளார்கள் என்று மத்திய உளவுத்துறை கலைஞருக்கு அனுப்பிய செய்தியில் உண்மை இருக்க எல்லாவிதமான காரணமும் உள்ளது..

நான் முன்பொரு முறை குறிப்பிட்டது போல புலி சார்பு நிலையில் உள்ளவர்கள் ஒரு உளவியல் வலைப்பின்னலுக்குள் இருப்பவர்ககளாகும். புலித்தலைமையின் திட்டங்கள் கருத்துக்கள் போன்ற தெளிவான விபரங்கள் அவர்களுக்கு தெரிந்திருப்பதில்லை. ஆனால் தலைவருக்கு எவரை பிடிக்கும் எவரை பிடிக்காது என்பதை மட்டும் உள்வாங்கி இருப்பார்கள் .

பிடிக்காது என்றால் அதன் அர்த்தம் ஏதாவது ஒரு காலக்கட்டத்தில் அவர்கள் புலிகளால் கொல்லப்படுவார்கள் என்பதாகும். அவர்களின் வேலை திட்டத்தின் முதல் அத்தியாயமே தங்களுக்காக உடல் பொருள் ஆவி எல்லாவற்றியும் புன்னகையோடு அர்பணிக்க தயக்கம் காட்டுவோர்கள் எல்லோரும் துரோகிகள் அல்லது எதிரிகள் என்று கருதப்படுவார்கள். அப்படி எதிரிகள் அல்லது துரோகிகள் என்று கருதப்படுவோர்களுக்கு என்ன நடக்கும் என்பதை புலி ஆதரவாளர்கள் அவர்கள் மீது காட்டும் வெறுப்பே காட்டி கொடுத்துவிடும் .

அப்படிப்பட்ட ஒரு வெறுப்பை கலைஞர் மீது அத்தனை புலி ஆதரவளர்களும் இன்று வரை தொடர்கிறார்கள். தங்கள் தலைமையின் குறி தவறி விட்டதே என்ற கவலை அவர்களுக்கு.

இந்த நிலையில் கலைஞரின் நிலைமை மிகவும் இக்கட்டான ஒன்றாகும். ஜனநாயக வழியில் இயங்கும் ஒரு மாநில கட்சியின் எல்லைகள் மிகவும் வரம்புக்கு உட்பட்டவை. புலிகளின் குறி தங்கள் மீது இருப்பது தெரிந்தும் அதை வெளிபடையாக கூறமுடியாத ஒரு நிலை அன்றிருந்தது. ஒரு புறம் அது இலங்கை அரசுக்கு மிகவும் சாதகமான பிரசார விடயமாகிவிடும்.

அதே சமயம் அந்த ஆபத்து தன்னை நோக்கி வருவது தெரிந்தும் தெரியாதது மாதிரி இருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. அதற்கு பல காரணிகள் உண்டு. கலைஞர் மிகவும் ராஜதந்திரத்தோடு நடந்து கொண்டார் .. புலிகளை இந்த விடயத்தில் கலைஞர் புறமுதுகு கண்டார் .

தன்னையும் கொல்ல வந்தார்களே என்ற கோபம் கொஞ்சம் கூட இல்லாமல் மீண்டும் அவர்களை ஆதரித்தார். இறுதியில் அவரை காப்பாற்றவும் முயன்றார் .

அது வழக்கம் போல புலிகளின் தவறான கணிப்புக்களாலும் , தமிழகத்தில் இருந்த நெடுமாறன வைகோ , பெரியார் தோழர்கள் மற்றும் கம்யுனிஸ்டு தோழர்கள் போன்றோரின் கபடம் நிறைந்த ஆலோசனைகளை செவி மடுத்ததாலும் இறுதியாக வந்த சந்தர்ப்பத்தையும் உதறி தள்ளினார்கள்.

அந்த இறுதி வாய்ப்பு கலைஞர் மெரீனாவில் மேற்கொண்ட உண்ணா விரதத்தினால் கிடைத்ததூ. கலைஞரின் வயது உடல் நிலை போன்ற விடயங்களை நன்கு அறிந்த அன்னை சோனியா காந்தியவர்கள் அவசரம் அவசரமாக திரு ப .சிதம்பரம் மூலம் ஒரு முயற்சியை மேற்கொண்டார். தற்காலிக போர் நிறுத்தத்தையும் பிரபாகரன் உட்பட்ட தலைவர்களையும் ஐ நா மேற்பார்வையில் சரணடையும் ஏற்பாடு உறுதியானது.

இறுதி நேரத்தில் அது தமிழகத்தில் இருந்த கம்யுனிஸ்டு மகேந்திரனிடம் புலிகளின் நடேசன் சொன்னார் . அதை அவர் வைகோ நெடுமா போன்றவர்களிடம் லீக் செய்தார். சிதம்பரம் மிகவும் ரகசியமாக வைத்திருக்குமாறு கூறிய இந்த விபரங்களை புலிகள் விபரம் தெரியாமல் இவர்களிடம் கூறியதுதான் அவர்களுக்கு நேர்ந்த விபத்து என்று கூறவேண்டி இருக்கிறது.

இவர்கள் அவர்களுக்கு என்ன கூறினார்களோ தெரியாது . பிரபாகரன் அதை ஏற்று கொள்ளவில்லை என்று அறிவித்தனர். அத்தோடு அது முடிவை நோக்கி போனது வேகமாக. அமெரிக்கா வரவில்லை.. ஐ நா வரவில்லை நோர்வே வரவில்லை எந்த நாடும் வரவில்லை .

இறுதியில் சரண் அடையும் நிலை வந்தது . நடேசன் சரண் அடைய போவதாக இறுதியாக கம்யுனிஸ்ட் தலைவர் தோழர் பாண்டியனிடம் கூறினார். அதற்கு பாண்டியன் சரண்டர் என்ற வார்த்தையை உலக நாடுகளிடம் கூறாதீர்கள் . ஆயுதங்களை மௌனிக்கிரோம் என்று கூறுங்கள் என்றார்.

அதற்கு நடேசன் அப்படியாயின் அதை நீங்களே எழுதி அனுப்புங்கள் அதை நாங்கள் உலக நாடுகளுக்கும் ஊடகங்களுக்கும் அப்படியே அனுப்பி விட்டு வெள்ளை கொடியோடு செல்கிறோம் என்றார். இதுதான் அந்த இறுதி நிமிடங்கள்.

சரண் அடைந்தோரை கொன்றால் இலங்கை அரசு உலக நாடுகளின் பொருளாதார தடை போர்குற்றம் போன்ற பெரிய சிக்கல்களில் மாட்டு பட்டிருக்கும். எனவே ஒருபோதும் அந்த தவறை செய்திருக்க மாட்டார்கள்.
ஆனால் புலிகள்தான் எந்த காலத்திலும் சரண் அடையவில்லையே? இன்று காலை ஆயுதங்களை மௌனித்தால் நாளையே அவற்றை மீண்டும் இசைக்க தொடங்கி விடலாமே? மௌனித்தல் எனபது வேறு . சரண் அடைதல் என்பது வேறு. இது தெரியாத புலிகள் இது தெரியாத கம்யுனிஸ்டுகள்.

சிதம்பரம் மூலம் கிடைத்த இறுதி வாய்ப்பை குழப்பியதோடு நெடுமா வைகோ போன்றோர் ஒதுங்கி விட்டார்கள். அவர்கள் அப்போது ஈழத்தாயின் தேர்தல் வெற்றிக்காக உழைத்து கொண்டிருந்தார்கள்
ஈழ மக்கள் முள்ளி வாய்க்காலுக்கு போனார்கள் !

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com