Wednesday, October 28, 2009

நிசாந்த முத்துஹெட்டிகம தலைமையில் புதிய அரசியல் கட்சி உதயமாகின்றது.

சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் 20 வருடகால உறுப்பினரும், கடந்த தென்மாகாணசபைத் தேர்தலில் காலி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்தி முன்னணியில் போட்டியிட்டு மிகவும் சர்சைக்குரிய நபராகவும் விளங்கிய நிசாந்த முத்துஹெட்டிகம Senior Citizens General United Front எனும் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

கடந்த தேர்தலில் பல வகையான சர்ச்சைகள் கிளப்பப்பட்டிருந்த நிலையிலும் தான் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து விலகிச் செல்லப்போவதில்லை என நிசாந்த தெரிவித்திருந்தார். ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியாகியிருந்தபோது தனது கட்சியின் உயர் பீடத்தின் உத்தரவின் அடிப்படையில் தனக்குரிய விருப்பு வாக்குகளில் மோசடிகள் இடம்பெற்றதாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்ததை அடுத்து அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க போவதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்திருந்தது. இத்தீர்மானத்தை தொடர்ந்து தனது உயிருக்கு அரசினால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் கனடா, சுவிற்சர்லாந்து, இந்தியா போன்ற ஏதாவது ஒரு நாட்டில் அரசியல் தஞ்சம் கோரப்போவதாவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நாடு புதிய அரசியல் பாதையை நோக்கி நகரவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அதன்பொருட்டு தான் புதிய கட்சியொன்றை நிறுவப்போவதாக தெரிவித்துள்ள நிசாந்த, கட்சியை நிறுவுவதற்கு நாட்டில் உள்ள மிகவும் உயர் தகமைகொண்டுள்ள சட்டத்தரணிகள், வைத்தியர்கள், ஆசிரியர்கள் என பலதரப்பட்டோரும் உழைத்துவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனது கட்சி காலி மாவட்டத்தில் உள்ள சகல தேர்தல் தொகுதிகளிலும் எதிர்வரும் பொது தேர்தலில் பங்கெடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com