Showing posts with label kadurai. Show all posts
Showing posts with label kadurai. Show all posts

Friday, January 2, 2026

டக்ளஸ் கைதின் உள்ளும் புறமும்.. ஜெகன்

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் எனக்கூறப்பட்ட ஆயுதப்போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரும் கடந்த சுமார் 30 வருடங்கள் இலங்கை அரசியலில் வடக்கு மக்களின் பிரதிநிதியாக, இலங்கை பாராளுமன்றின் 225 ஆசனங்களில் ஒரு ஆசனத்திற்கு தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டிருந்த கதிரவேலு நித்தியானந்த தேவானந்தா, கடந்த 26.12.2025 அன்று பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, அரச சொத்துக்கள் மற்றும் ஆயுத கட்டளைச் சட்டத்தின் சரத்துக்களை மீறியுள்ளார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் கம்பஹா நீதவான் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், மஹர சிறைச்சாலையில் எதிர்வரும் 09.01.2026 வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் தேவானந்தா பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டபோது, எந்தச் சட்டத்திற்கு ஆதரவாக டக்ளஸ் தனது பாராளுமன்ற காலம் முழுவதும் கை உயர்த்தி வரவேற்று அச்சட்டத்தினை நாட்டில் அமுல்படுத்த உறுதுணையாக இருந்தாரோ, அதே சட்டத்தின் கீழ் கைது செய்;யப்பட்டுள்ளார் என்று எக்காளமிட்டவர்களுக்கு விழுந்த முதலாவது அடி அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் அரச சொத்துக்கள் மற்றும் ஆயுத கட்டளைச் சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ளமையாகும்.

டக்ளஸ் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பாரதூரமானவை. அவை நீதியான முறையில் விசாரணை செய்யப்படவேண்டும். டக்ளஸ் தனது தற்பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த ஆயுதத்தை அல்லது ஆயுதங்களை வன்செயல்கும்பல்களுக்கு வழங்கி இந்நாட்டு மக்களின் உயிருக்கோ உடமைகளுக்கோ சேதம் ஏற்படுத்தியிருந்தாலோ , அன்றில் அவ்வாயுதங்கள் நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர்கெடுப்பதற்கு பயன்படுத்தப்பட்டிருந்தாலோ அதற்கான தண்டனைகளை அவர் அனுபவிக்கவேண்டும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

ஆனால், இக்கைதினை தொடர்ந்து சமுக வலைத்தளங்களில் வலம்வருகின்ற பதிவுகளை – குறிப்பாக ஆதாரமற்ற சேறடிப்புக்களை கடந்து செல்வதென்பது – அநியாயம் ஒன்று இடம்பெறும்போது மௌனம் காத்து அடக்குமுறையாளர்களுக்கான பாதையை சீர் செய்து கொடுப்பதாக அமையுமென்பதால் டக்ளசின் கைதுக்கு பின்னர் பேசப்படுகின்ற விடயங்கள் தொடர்பாக பேச வேண்டியுள்ளது.

வுழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்னரே தீர்பெழுதியுள்ள விட்டோடிகளும் தமிழீழ வியாபாரிகளும் டக்ளஸை துரோகி என்கின்றனர். டக்ளஸை துரோகி என்கின்ற தியாகிகளிடம் நான் கேட்கின்ற முதலாவது கேள்வி யாதெனில், நீங்கள் ஒருவனை துரோகி என்பதற்கும் தியாகி என்பதற்கும் பயன்படுத்துகின்ற பொதுவான அளவுமானி யாது?

இலங்கை அரசிடம் பாதுகாப்பிற்காக ஆயுதங்களை பெற்றுக்கொண்டதற்காக டக்ளஸ் துரோகி என்றால், பிறேமதாஸ அரசிடம் ஆயுதங்களை பெற்றுக்கொண்ட பிரபாகரன் யார்? டக்ளஸை துரோகி என அளவீடு செய்த அளவுமானி பிரபாகரனின் ஆசனவாயினுள் நுழைய மறுப்பதேன்?

அரசிடம் ஆயுதங்களை பெற்றுக்கொண்டமைக்காக டக்ளஸ் துரோகி என்றால் அவரை நான் ஒழுக்கமான துரோகி என்பேன், என்னென்றால் அவர் இலங்கை சனநாயக சோசலிஸ குடியரசின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு இவ்வாயுதங்களுக்கான சகல பொறுப்புக்களையும் ஏற்றுக்கொள்கின்றேன் என நெஞ்சை நிமிர்த்தி துணிவுடன் கையொப்பமிட்டு பெற்றுக்கொண்டிருக்கின்றார். ஆனால் பிரபாகரன் இவ்விடயத்தில் ஒர் ஒழுக்கமற்ற துரோகி. அவன் இலங்கை அரசிடமிருந்து ஆயுதங்களை பின்கதவால் மோசடியாக பெற்றுக்கொண்டுள்ளதுடன் அதுதொடர்பான எவ்வித சாட்சிகளையும் விட்டுவைக்க வில்லை. காரணம் பிரபாகரன் ஒருபோதும் பொறுப்புக்கூறலுக்கு தயாராக இருக்கவில்லை.

டக்ளசிற்கு , ஏன் சகல ஏனைய ஆயுதகுழுக்களுக்கும் முன்னோடியாக வழிகாட்டியாக ஆயுதங்களையும் சலுகைகளையும் இலங்கை அரசிடமிருந்து பெற்றுக்கொண்டது பிரபாகரனும் அவனது புலிகள் அமைப்புமேயாகும். ஆனால் குறிந்த ஆயுதங்கள் பெற்றுகொள்ளப்பட்ட நோக்கங்களை ஆய்வு செய்கின்றபோது, தனதும் சக தோழர்களதும் உயிர்களை தற்காத்துக்கொள்ள டக்ளஸினால் ஆயுதங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டிருப்பது ஆவணங்கள் ஊடாக தெளிவாகின்ற அதே நேரத்தில், தமிழ் மக்களுக்கான தீர்வுக்கு முதற்படி என ஏற்படுத்தப்பட்ட இலங்கை இந்திய – ஒப்பந்தத்தையும் (ஜேவிபி யின் மொழியில் தமிழீழத் தனியரசு) அதனூடாக மேற்கொள்ளப்பட்ட அரசியல் யாப்பின் 13ம் திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்துவதற்கென அமைதி காக்கும் படை எனும் பெயரில் இலங்கையில் இறங்கியிருந்த இந்திய படையினரை வெளியேற்றுவேன் என்ற பிறேமதாஸவின் தேர்தல் உறுதி மொழியை நிறைவேற்றுவதற்கான கூலிப்படையாக பிரபாகரன் இலங்கை அரசிடமிருந்து ஆயுதங்களை களவாக பெற்றுக்கொண்டுள்ளார். அவை உலங்குவானூர்திகளிலும் பாரஊர்திகளிலும் முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் வந்திறங்கியமை யாவரும் அறிந்த இரகசியம்.

யார் துரோகி?

உயிர்வாழ்தல் ஒவ்வொரு ஜீவராசிகளினதும் பிறப்புரிமை. அரசியல் ஒவ்வொரு பிரஜைக்குமான யாப்புரிமை ( ஊழளெவவைரவழையெட சiபாவ) இந்த இரு உரிமைகளும் பிரபாகரனால் மறுக்கப்பட்டபோதுதான், டக்ளஸ் உட்பட பல்வேறு அரசியல் அமைப்புக்களும் தலைமைகளும் தனி நபர்களும் தங்களுக்குரித்தான பாதுகாப்பினை இலங்கை அரசிடம் பெற்றுக்கொண்டார்கள். தங்களது வாழ்வுரிமையை பாதுகாக்க ஆயுதங்களை பெற்றுக்கொண்டமை துரோகம் என்கின்ற மேதாவிகள், தமிழ் மக்களது அரசியல் மற்றும் அடிப்படை உரிமைகளை உறுதி செய்யவந்த இந்தியப்படையை விரட்டியடிக்க கூலிப்படையாக இலங்கை அரசிடம் பிரபாகரன் ஆயுதம் பெற்றுக்கொண்டதை தியாகம் என்கின்றனர்.

பிரபாகரனை பயங்கரவாதி, போதைப்பொருள் கடத்தல்காரன் என்று இலங்கை பாராளுமன்றிலே பேசியதற்காக டக்ளஸ் தேவானந்தா துரோகி என்கின்றனர். பாரத பிரதமர் ரஜீவ் காந்தியை புலிகள் கொலை செய்ததை தொடர்ந்து 1992ம் ஆண்டு புலிகள் அமைப்பு முதல்முறையாக தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம், அவுஸ்ரேலியா உட்பட உலகின் பலம்வாய்ந்த 32 க்கு மேற்பட்ட நாடுகள் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பு எனத் தடை செய்தது.

இந்நாடுகள் வெறுமனே ஆதாரங்கள் இன்றி புலிகளை பயங்கரவாதிகள் என தடை செய்யவில்லை. நாடுகள் அமைப்பொன்றை தடை செய்கின்றபோது, உலக அரங்கில் பயங்கரவாத செயற்பாடுகள் என வகைப்படுத்தப்பட்டுள்ள செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களை, அவர்கள் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள் என்பதனை சந்தேகங்களுக்கப்பால் உறுதிப்படுத்தியே தடை செய்யமுடியும். ஓவ்வொரு நாடும் அமைப்பொன்றை பயங்கரவாத அமைப்பென தடை செய்யும் போது பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகளை சட்டமாக்கி வைத்திருக்கின்றது.

அச்சட்ட ஒழுங்குகளின் பிரகாரம் கீழ்க்காணப்படும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற அமைப்புக்களை தடை செய்யும்:

மனித குலத்திற்கு எதிரான வன்செயல்கள் - (பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடல், சிவிலியன் மற்றும் நிராயுதபாணிகளை இலக்கு வைத்தல், மக்களை அச்சுறுத்துவதற்கு வன்செயலை பயன்படுத்தல்.) தமது இலக்கினை அடைவதற்காக பயங்கரவாக செயற்பாடுகளை மேற்கொண்டு அரசினை கட்டாயப்படுத்தல், பொதுமக்களை அச்சுறுத்தல், தமது அரசியல் கொள்கைகளை வலுக்கட்டாயமாக திணித்தல் கட்டளைக் கட்டமைப்பினை கொண்ட அமைப்பாக இருந்து செயற்பாடுகளை மேற்கொள்ளல், தொடர்சியான ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்வதுடன், செயற்பாட்டு திட்டங்களை கொண்டிருத்தல்

பயங்கரவாத-நிதிச் செயற்பாடுகள் - பங்கரவாத செயற்பாடுகளுக்காக நிதியினை சேகரித்து அவற்றை பராமரித்தலும் பயன்படுத்துதலும். பினாமி அமைப்புக்களை இயக்குதலும் அவற்றினூடாக குற்றச் செயல்களை புரிதலும். பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நிதியளிப்பதற்காக மிரட்டி பணம் பறித்தல், ஆட்களை கடத்தி பணம் பறித்தல், கள்ளக்கடத்தலில் ஈடுபடுதல், போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபடுதல்.

சர்வதேச ரீதியில் அவ்வியக்கம் செயற்படுகின்றதா என்பதையும் அதற்கு பல்வேறு நாடுகளில் செயற்பாடு உள்ளதா என்பதையும் புலிம்பெயர்ந்த மக்களின் வலையமைப்பை பயன்படுத்துகின்றதா என்பதையும் பிறநாட்டு பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புகளை பேணுகின்றதா என்பதையும் நாடுகள் நுணுக்கமாக அவதானிக்கும்.

தேசிய பாதுகாப்புக்கும் பொதுமக்கள் பாதுகாப்புக்கும் பாரிய அச்சுறுத்தலாக செயற்பட்டு, இறையாண்மையை சீர்கெடுக்க முயல்வது, பிராந்திய ஒருமைப்பாட்டை பாதிப்படைய செய்வது, ஆயுத கிளர்ச்சி அல்லது உள்நாட்டுப் போரை ஊக்குவிப்பது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடல்,

புலனாய்வு அமைப்புக்களின் தகவல்கள், நீதிமன்ற தீர்ப்புக்கள், நட்பு நாட்டு தகவல்கள் மற்றும் ஐநா வின் பாதுகாப்பு ஆய்வறிக்கை பயங்கரவாத செயற்பாடுகளில் குறித்த அமைப்பு ஈடுபடுகின்றது என்பதை உறுதி செய்தால் அரசுகள் அமைப்புக்களை தடை செய்வதற்காக சட்ட அங்கீகாரத்தை பெற்றுக்கொள்கின்றனர்.

அந்த அடிப்படையில் மேற்கூறப்பட்டுள்ள சகல செயற்பாடுகளையும் கொண்டுள்ள அமைப்பான புலிகள் அமைப்பு உலகின் 32 க்கு மேற்பட்ட நாடுகளால் தடை செய்யப்பட்டு பயங்கரவாத அமைப்பு என உலகப்புகழ் பெற்றிருக்கின்ற நிலையில், அவ்வமைப்பின் தலைவனை பயங்கரவாதி எனக் குறிப்பிடும் தனிநபர் ஒருவர் எவ்வாறு துரோகியாக முடியும்? அவ்வாறாயின் பிரபாகரனை துரோகி என்றதற்காக டக்ளஸை துரோகி என்போர், பிரபாகரனையும் அவனது அமைப்பையும் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தியுள்ள 32 க்கு மேற்பட்ட நாடுகளையும் அதன் தலைவர்களையும் மக்களையும் துரோகிகள் என்கின்றனரா? மாறாக அந்நாட்டு தலைவர்களின் பாதங்களை கழுவிக்குடித்து அவர்களுக்கு சேவகம் புரிகின்றனர்.

2019 ம் ஆண்டு டுபாயில் வைத்து கைது செய்யப்பட்ட முன்னணி பாதாள உலக கோஸ்டி தலைவனும் போதைப்பொருள் கடத்தல்காரனுமான மாக்காந்தர மதுஸ் என்பவனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து அவன் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் வெலிவேரிய பிரதேசத்தில் 2019.05.16 ம் திகதி கைப்பற்றப்பட்ட இரு கைத்துப்பாக்கிகளில் ஒன்று டக்ளஸ் தேவானந்தவிற்கு வழங்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி என்ற வகையில் டக்ளஸ் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் இலங்கையில் இயங்கும் இயங்கிய ஒரே ஒரு கொலைக்கும்பல், கொள்ளைக்கும்பல் மாக்காந்தர மதுஸ் அல்ல. இதற்கு முன்னரும் தற்போதும் நூற்றுக்கணக்கான கிறிமினல்கள் இயங்கினார்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றார்கள்.

இலங்கை குற்றவியல் தடுப்பு நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்பட்ட முதலாவது ஆயுதம் மாக்காந்தர மதுஸிடமிருந்து கைப்பற்றப்பட்டதுதான் என்பதும் இல்லை. ஆகையால் டக்ளஸ் மீது வழக்கு தொடரப்படக்கூடாது என்பதும் எனது வாதம் அல்ல மாறாக அவர் மீது கருணை காருணியம் இன்றி வழக்கு தொடர்ப்படவேண்டும் அவை நியாயமாக விசாரணை செய்யப்படவேண்டும் என்பதுதான் இங்கு மேலான விடயம்.

சட்டத்தின் முன் சகலரும் சமம் , சட்டத்தின் சம பாதுகாப்பிற்கு சகலரும் உரித்துடையவர்கள் என இலங்கை அரசியல் யாப்பின் 12 சரத்து கூறுகின்றது. இதன் பிரகாரம் நாட்டு மக்கள் சகலரையும் சமமாக நாடாத்துவோம் சட்டத்தின் பாதுகாப்பை சகலருக்கும் சமமாக வழங்குவோம் என்ற உறுதி மொழியை வழங்கி ஆட்சியை கைப்பற்றிய அரசு அதன் பிரகாரம் அவ்வாக்குறுதியை பிசகாமல் பேணுகின்றதா என்பது அடுத்த கேள்வி.

சொத்தி உபாலி, நாவல நிஹால், ஹோனவல சுனில், தொட்டலங்க கனகு, பத்தேகான சஞ்சீவ வில் ஆரம்பித்து இறுதியாக மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டிருக்கின்ற ஹெகெல்பத்தர பத்மே எனப்படுகின்ற ஹொரலாகமகே மன்டினு பத்மசிறி பெரேரா முதலான நூற்றுக்கணக்கான பாதாளஉலக புள்ளிகளிடமிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றது. அவ்வாயுதங்கள் எவ்வாறு குறித்த நபர்களிடம் சென்றது என்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட கைதுகள் தொடர்பாக இலங்கை அரசியல் யாப்பின் 12ம் சரத்தின் மீது அக்கறை கொண்டுள்ள மக்கள் அறிய ஆவலாக உள்ளனர்.

அத்துடன் இலங்கையில் யுத்தம் இடம்பெற்றபோது ஜிஹாடில் ஆ ரம்பித்து இறுதியாக புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து வந்த குழுவினர் வரைக்கும் இலங்கை இராணுவம் ஆயுதங்களை வழங்கியிருக்கின்றது. அந்த ஆயுதப்பரிமாறல்களில் இன்றைய அரசின் பிரதான கட்சியான ஜேவிபி யினரும் பங்கெடுத்திருக்கின்றனர் என்ற அரசல்புரசலான விடயங்களும் உண்டு. எனவே அவ்வாறு வழங்கப்பட்ட ஆயுதங்கள் யாவும் அரசின் ஆயுதக்களஞ்சியத்தை வந்தடைந்து விட்டதா? எத்தனை ஆயுதங்கள் ஜனநாயகத்துடன் சங்கமித்து மக்களுடன் உரையாடுகின்றது என்பதையும் பரிசுத்தமான அரசிடமிருந்து மக்கள் எதிர்பார்கின்றனர்.

இறுதியாக இலங்கை அரசிடம் நான் முன்வைக்கின்ற கோரிக்கை யாதெனில், டக்ளஸ் தேவானந்தவிடமிருந்து பாதாளக்குழுக்களிடம் சென்றடைந்துள்ளது எனக் குறிப்பிடப்படுகின்ற ஆயுதங்களைவிட பல நூறு மடங்கு ஆயுதங்கள் புலிகளிடமிருந்து பாதாளக்குழுக்களிடம் சென்றிருக்கின்றது. அவ்வாறு அக்குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்கிய முக்கிய புலிகள் பலர் இன்றும் உயிருடன் நாட்டிலும் புலம்பெயர்ந்தும் வாழ்வதுடன் அவர்கள் இந்நாட்டின் அமைதியை சீர்குலைக்கவும் தங்கள் எதிரிகளை இலக்குவைக்கவும் இப்பாதாள உலகக்கும்பல்களுடன் இணைந்து சதித்திட்டம் தீட்டி வருகின்றனர் என்பதுடன் அவ்வாறன சில நடவடிக்கைகள் முறியடிக்கப்பட்டும் உள்ளதை பாரதூமாக எடுத்து, புலிகளுக்கும் பாதாளக்குழுக்களுக்குமுள்ள தொடர்பினையும் விசாரணை செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.


Read more...

Monday, July 14, 2025

மிக மோசமான கொலை: டி.பி.எஸ். ஜெயராஜ்

35 வருடங்களுக்கு முன்னர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் படுகொலை

(புகழ்பெற்ற தமிழ் அரசியல் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், முன்னாள் யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் வி. யோகேஸ்வரனுடன் சேர்ந்து, ஜூலை 13, 1989 அன்று கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொடூரக் கொலை பற்றிய இந்தக் கட்டுரை 2019 இல் “டெய்லி மிரர்” இதழில் வெளியிடப்பட்டது. அமிர்தலிங்கம் படுகொலையின் 35 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் எந்த மாற்றங்களும் இல்லாமல் இங்கே மீண்டும் பதிவேற்றப்படுகிறது)

திருகோணமலை நகரில் பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பாதுகாப்புப் படையினரால் ஐந்து தமிழ் மாணவர்கள் கொடூரமாக கொல்லப்பட்டது கடந்த வாரம் இந்தப் பத்திகளில் மீண்டும் நினைவுகூரப்பட்டது. இந்த வாரப் பத்தி, சரியாக முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கொழும்பில் தமிழீழ விடுதலைப் புலிகளால் (LTTE) செய்யப்பட்ட மிகவும் கொடூரமான கொலையைப் பற்றிய நினைவுகளை மீட்டெடுக்க முயல்கிறது. ஜூலை 13, 1989 அன்று இலங்கையின் முன்னணி தமிழ் அரசியல் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் மற்றும் முன்னாள் யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிவேலு யோகேஸ்வரன் ஆகியோர் விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். முன்னாள் நல்லூர் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சிவசிதம்பரம் அதே சம்பவத்தில் சுடப்பட்டுக் காயமடைந்தார். அதைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சண்டையில் சம்பந்தப்பட்ட மூன்று புலிக் கொலையாளிகளும் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் படுகொலை பற்றி நான் முந்தைய சந்தர்ப்பங்களில் விரிவாக எழுதியுள்ளேன். இருப்பினும், இந்தக் கொலைகள் தொடர்பான சில விவரங்களை, எனது முந்தைய எழுத்துக்களை மையமாகக் கொண்டு, கொலைகளின் 30வது ஆண்டு நிறைவையொட்டி மீண்டும் தொடர்புபடுத்த விரும்புகிறேன்.

யாழ்ப்பாணத்தில் உள்ள பண்ணாகத்தைச் சேர்ந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் ஆகஸ்ட் 26, 1927 அன்று பிறந்தார். அவர் ஒரு கவர்ச்சிகரமான மற்றும் துடிப்பான அரசியல்வாதி ஆவார், அவர் ஈழத்தின் காந்தி என்று அழைக்கப்படும் மரியாதைக்குரிய தமிழ்த் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் தலைமைத் தளபதியாக பல ஆண்டுகள் பணியாற்றினார். அமிர்தலிங்கம் தொழில் ரீதியாக ஒரு வழக்கறிஞராக இருந்தார், மேலும் 1956 முதல் 1970 வரை வட்டுக்கோட்டைக்கான இலங்கை தமிழ் அரசு கட்சி (ITAK) எம்.பி.யாகவும், 1977 முதல் 1983 வரை காங்கேசன்துறைக்கான தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF) எம்.பி.யாகவும் இருந்தார். 1977 முதல் 1983 வரை எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்தார். 1989 இல், அவர் TULF தேசியப் பட்டியலில் எம்.பி.யாக நியமிக்கப்பட்டார்.

அமிர்தலிங்கத்தின் படுகொலை நடந்த சூழலைப் புரிந்துகொள்ள அந்த நேரத்தில் நிலவிய அரசியல் சூழ்நிலை குறித்த சில பின்னணி விவரங்கள் அவசியம். முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் இலங்கை அதிபர் ஜூனியஸ் ரிச்சர்ட் ஜெயவர்த்தன ஆகியோரால் ஜூலை 29, 1987 அன்று கையெழுத்தான இந்திய-இலங்கை ஒப்பந்தம், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் அமைதி காக்கும் படையினராக இந்திய இராணுவத்தை ஈடுபடுத்துவதற்கு வழிவகுத்தது. இந்திய அமைதி காக்கும் படை (IPKF) என நியமிக்கப்பட்ட இந்திய இராணுவத்திற்கும் LTTE க்கும் இடையே போர் வெடித்தது.

இராணுவ ஆய்வாளர்களின் கூற்றுப்படி, அந்த நேரத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட புலிகள் "ஆக்ஸிஜனுக்காக ஏங்கிக் கொண்டிருந்தனர்" என்று கூறப்படுகிறது. இலங்கையில் இந்திய இராணுவத்தின் இருப்பு சிங்கள தேசியவாதிகள் மத்தியில் மிகுந்த வெறுப்பை ஏற்படுத்தியது, அவர்கள் அதை இறையாண்மையை மீறுவதாகக் கருதினர். ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) பிரேமதாச 1988 இல் குறுகிய பெரும்பான்மையுடன் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்திய இராணுவத்தை அனுப்பி வைப்பதாக பிரேமதாச உறுதியளித்திருந்தார்.

நட்புறவின் கை

ஜனதா விமுக்தி பெரமுனா (ஜேவிபி) தலைமையில் வன்முறை பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. இந்த கட்டத்தில்தான், வழக்கத்திற்கு மாறான பிரேமதாச ,ஜேவிபி மற்றும் எல்டிடிஇ ஆகிய இரு தரப்பினருக்கும் தனது "நட்பின் கரத்தை" நீட்டினார். ஜேவிபி இந்த வாய்ப்பை நிராகரித்தாலும், போராடும் எல்டிடிஇ அதைப் புரிந்துகொண்டது. இந்திய இராணுவம் வடக்கு மற்றும் கிழக்கில் புலிகளுடன் தொடர்ந்து போராடும் அதே வேளையில் கொழும்பில் அரசாங்கத்திற்கும் எல்டிடி இ க்கும் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது. ஜனாதிபதி பிரேமதாசவும் எல்டிடிஇயும் ஒரு பொதுவான குறிக்கோளைக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் வெவ்வேறு காரணங்களுக்காக இந்திய இராணுவத்தை வெளியேற்ற விரும்பினர். எல்டிடிஇ உடனான அரசியல் உரையாடல் தொடங்கியதை மேற்கோள் காட்டி, இந்திய இராணுவம் இலங்கையை நிரந்தரமாக விட்டு வெளியேற ஒரு காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் என்று ஜனாதிபதி பிரேமதாச கோரத் தொடங்கினார்.

இரு தரப்பினருக்கும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தான் முக்கியப் பங்காற்றியவர் என்று கருதப்பட்டது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF) பொதுச் செயலாளர், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தையும், இலங்கையில் இந்திய இராணுவ இருப்பையும் உறுதியாக ஆதரித்தார். எல்.டி.டி.இ. தனது வன்முறை மற்றும் அழிவுத் திறன் மூலம் ஒரு குறிப்பிட்ட அந்தஸ்தைப் பெற்றிருந்தாலும், வன்முறையற்ற அரசியல் தலைவர் அமிர்தலிங்கத்தின் கருத்துதான் சர்வதேச அளவில் அவரது அரசியல் தகுதிகள் மற்றும் அந்தஸ்தின் காரணமாக அதிக செல்வாக்கைப் பெற்றது. அரசாங்கத்திற்கும் எல்.டி.டி.இ.க்கும் இருந்த அச்சங்கள், 1989 ஜூன் மாதம், இந்திய இராணுவம் இலங்கையிலிருந்து அந்த நேரத்தில் அனுப்பப்படக்கூடாது என்று அமிர்தலிங்கம் சரளமாக வாதிட்டபோது ஓரளவு உணரப்பட்டன.

1977 தேர்தலில் பிரிவினைவாத மேடையில் போட்டியிட்டு 18 இடங்களை வென்ற தமிழர் விடுதலை கூட்டணி, அதற்கு முன்பே ஆறு ஆண்டுகளாக நாடாளுமன்றத்திற்கு வெளியே இருந்தது. ஜூலை 1983 தமிழர் எதிர்ப்பு இனப்படுகொலை மற்றும் பிரிவினைவாதத்தை மறுக்கும் ஆறாவது அரசியலமைப்பு திருத்தம் ஆகியவற்றின் விளைவாக தமிழர் விடுதலை கூட்டணி நாடாளுமன்றத்தைப் புறக்கணித்து தங்கள் இடங்களை இழந்தது. அமிர்தலிங்கம், மற்ற தமிழர் விடுதலை கூட்டணித் தலைவர்களுடன் சேர்ந்து இந்தியாவில் சுயமாக நாடுகடத்தப்பட்டார். பல தமிழ் போராளிக் குழுக்கள் நடத்திய ஆயுதப் போராட்டம் வேகம் பெற்றது. இந்திய-இலங்கை ஒப்பந்தம் நீண்ட காலம் நீடிக்காத ஒரு போர் நிறுத்தத்தைக் கொண்டு வந்தது. தமிழர் விடுதலை கூட்டணியும் மற்ற அனைத்து போராளிக் குழுக்களும் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு "தமிழ் ஈழம்" என்ற இலக்கைக் கைவிட்டாலும், விடுதலைப் புலிகள் தொடர்ந்து போராடினர். விடுதலைப் புலிகளின் பிரதான இராணுவ எதிரி இப்போது இந்திய இராணுவம்தான், இலங்கையர் அல்ல.

இதற்கிடையில், தற்காலிகமாக இணைக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைக்கு 1988 ஆம் ஆண்டு மிகவும் திருப்தியற்ற சூழ்நிலையில் தேர்தல்கள் நடத்தப்பட்டன. தமிழர் விடுதலை கூட்டணி போட்டியிட மறுத்ததால், இந்தியா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (EPRLF) அண்ணாமலை வரதராஜப் பெருமாளை வட- கிழக்கு மாகாணத்தின் முதல் (மற்றும் ஒரே) முதலமைச்சராக நியமித்தது. 1989 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்றபோது, தமிழர் விடுதலை கூட்டணியும் போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்தியா மிதவாத தமிழர் விடுதலை கூட்டணியுடன் இணைந்து EPRLF, TELO மற்றும் ENDLF போன்ற போர்க்குணமிக்க அமைப்புகளை தமிழர் விடுதலை கூட்டணியின் ஆதரவிலும் அதன் 'சூரியன்' சின்னத்திலும் போட்டியிடக் கொண்டு வந்தது.

கொழும்புக்குத் திரும்புதல்

அமிர்தலிங்கமும் அவரது மனைவி மங்கையர்க்கரசியும் சென்னையில் இருந்து கொழும்புக்குத் திரும்பினர். இந்தியாவில் சுயமாக நாடுகடத்தப்பட்டதிலிருந்து திரும்பிய தமிழர் விடுதலை கூட்டணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களில் முதன்மையானவர் முன்னாள் யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிவேலு யோகேஸ்வரன் ஆவார். சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கத்தில் தனது மனைவி சரோஜினியுடன் வசித்து வந்த பிரபலமான எப்போதும் புன்னகையுடன் கூடிய யோகேஸ்வரன் (யாழ்ப்பாண மேயரான பிறகு அவரும் பின்னர் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார்) முதலில் யாழ்ப்பாணத்திற்குத் தனியாகத் திரும்பினார். அதன் பிறகு, அவர் கொழும்புக்குச் சென்று பம்பலப்பிட்டியில் உள்ள கொத்தலாவல டெரஸில் உள்ள ஒரு உறவினரின் வீட்டில் வசித்து வந்தார். பின்னர், அவரது மனைவி சரோஜினியும் அவருடன் சேர்ந்து கொண்டார்.

அமிர்தலிங்கம் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர் கொழும்புக்குத் திரும்பியதால், அவர்களுக்கும் மற்ற தமிழர் விடுதலை கூட்டணியின் பிரமுகர்களுக்கும் ஒரு பாதுகாப்பான வீடு அவசியமானது. விடுதலைப் புலிகளின் விரோதத்தால் அவர்களில் யாரும் யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பாக தங்க முடியவில்லை.

எனவே, ஒரு பாதுகாப்பான வீடு தேவைப்பட்டது. முன்னாள் மன்னார் நாடாளுமன்ற உறுப்பினர் பி. சூசைதாசன் மற்றும் முன்னாள் வட்டுக்கோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் நீலன் திருச்செல்வம் ஆகியோர் கொழும்பு 7 இல் உள்ள பவுத்தலோக மாவத்தை/புல்லர்ஸ் சாலை, 342/2 என்ற முகவரியில் அத்தகைய வீட்டை ஏற்பாடு செய்தனர்.

இது ஆடை உற்பத்தியில் ஈடுபட்டிருந்த மன்னாரைச் சேர்ந்த ஒரு முக்கிய முஸ்லிம் தொழிலதிபருக்குச் சொந்தமானது. முன்னாள் மகாவலி அபிவிருத்தி அமைச்சர் காமினி திசாநாயக்க இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கும் அதன் விளைவாக ஏற்பட்ட அமைதி முயற்சிகளுக்கும் வலுவான ஆதரவை வழங்கினார். ஜே.ஆர். ஜெயவர்தன அரசாங்கத்தின் கடைசிக் கட்டங்களில் சுயமாக நாடுகடத்தப்பட்ட தமிழர் விடுதலை கூட்டணித் தலைவர்கள் திரும்பி வந்து அரசியல் நீரோட்டத்தில் மீண்டும் உள்வாங்கப்படுவதை ஊக்குவிப்பதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். 1988 ஆம் ஆண்டில் காமினி திசாநாயக்க அமைச்சராக இருந்தபோது தமிழர் விடுதலை கூட்டணித் தலைவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முன்முயற்சி எடுத்தார்.

மகாவலி அமைச்சக பாதுகாப்பு மற்றும் காவல்துறையைச் சேர்ந்த ஆறு பேர் கொண்ட குழு அந்த வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. ஒரு காலத்தில் இளம் ஆதரவாளர்களால் "நாவலர்" (சொற்பொழிவாளர்) மற்றும் "தளபதி" (தளபதி/ஜெனரல்) என்று அழைக்கப்பட்ட அமிர்தலிங்கம், பின்னர் எல்.ரீ.ரீ.ஈ-யிடம் தோல்வியடைந்தார். ஐக்கிய இலங்கையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அவர் மேற்கொண்ட முயற்சிகளை "தமிழ் ஈழம்" கனவை விற்றுத்தள்ளுவதாக புலிகள் கருதினர்.

இதனால், கடந்த காலத்தில் அரசாங்கத்துடன் இணைந்த தமிழ் அரசியல்வாதிகளை "துரோகி" என்று பெயரிட்ட அமிர்தலிங்கம், எல்.ரீ.ரீ.ஈ மற்றும் அவர்களைப் போன்ற பிற தீவிரவாத இளைஞர்களால் அப்படிச் சொல்லப்பட்டார்.

அமிர்தலிங்கம் மீதான போராளி விரோதப் போக்கிற்கு மற்றொரு காரணமும் இருந்தது, இது தமிழ் ஈழக் கொள்கையை அவர் செய்த உண்மையான அல்லது கற்பனை செய்த துரோகத்துடன் எந்த தொடர்பும் இல்லை. தமிழ் போராளித் தலைவர்கள் தங்கள் ஆயுதங்கள் மூலம் விதிமுறைகளை ஆணையிட முடியும், ஆனால் அவர்களில் யாருக்கும் அமிர்தலிங்கத்தின் பரவலான அங்கீகாரம் அல்லது தலைமைத்துவ சான்றுகள் இல்லை. பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், தேசிய மற்றும் சர்வதேச அளவில் மிகவும் மதிக்கப்படும் இலங்கை தமிழ் அரசியல் தலைவராக அமிர்தலிங்கம் இருந்தார். அவர் உயிருடன் இருக்கும் வரை அரியணைக்கு வேடம் போடுபவர் யாரும் இருக்க முடியாது.

அமிர்தலிங்கத்தின் மரணத்திற்குப் பிறகுதான், எல்.ரீ.ரீ.ஈ கூட்டாளிகள் பிரபாகரனை "தேசியத் தலைவர்" என்று வர்ணிக்கத் தொடங்கினர். இலங்கையில் தனக்குக் காத்திருக்கும் ஆபத்தை அமிர்தலிங்கமே முழுமையாக அறிந்திருந்தார். இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நிரந்தரமாகப் புறப்படுவதற்கு முன்பு, அமிர்தலிங்கம் சென்னையில் முன்னாள் கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் வீரசிங்கம் ஆனந்தசங்கரியைச் சந்தித்தார். உரையாடலின் போது, அமிர்தலிங்கம் குறிப்பிட்டதாவது: "சங்கரி, இலங்கையில் நமக்காக என்ன காத்திருக்கிறது என்பது நம்மில் சிலருக்குத் தெரியும். ஆனால், நம் மக்களுக்கு உதவ வேண்டுமென்றால், நாம் அதை எதிர்கொள்ள வேண்டும்."
“Some of us know what lies in store for us in Sri Lanka, Sangaree. But we must face it if we were to help our people.”

படுகொலையின் உடற்கூறியல்
ANATOMY OF ASSASSINATION


இந்தப் பின்னணியில்தான் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் படுகொலை 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அது நடந்தபோது நான் கனடாவில் இருந்தேன். இருப்பினும், மறைந்த எம். சிவசிதம்பரம், டாக்டர். நீலன் திருச்செல்வம், திருமதி. சரோஜின் யோகேஸ்வரன் மற்றும் திருமதி. மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம், டாக்டர். பகீரதன் அமிர்தலிங்கம், வி. ஆனந்தசங்கரி, பி. சூசைதாசன் மற்றும் சோமசுந்தரம் (மாவை) சேனாதிராஜா போன்ற தமிழர் விடுதலை கூட்டணியுடன் தொடர்புடைய பல்வேறு நபர்களுடன் நான் வெவ்வேறு நேரங்களில் பேசியுள்ளேன். இதுபோன்ற உரையாடல்கள் மற்றும் தொடர்புடைய ஊடக அறிக்கைகளின் அடிப்படையில்தான் நான் படுகொலையின் உடற்கூறியல் எழுதுகிறேன்.

புது டெல்லியின் கோபத்திற்கு பயந்து இந்திய மண்ணில் இருந்தபோது அமிர்தலிங்கம் அல்லது வேறு எந்த முக்கிய தமிழர் விடுதலை கூட்டணித் தலைவருக்கும் தீங்கு விளைவிக்க எல்.டி.டி.இ முயற்சிக்கவில்லை. அதைத் தொடர்ந்து, எல்.டி.டி.இ இந்த எச்சரிக்கையைக் கைவிட்டு, சென்னையில் பத்மநாபா, கிருபாகரன் மற்றும் யோகசங்கரி போன்ற ஈ.பி.ஆர்.எல்.எஃப் தலைவர்களைக் கொன்றது. இதனால் துணிச்சலுடன், தமிழக மண்ணில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தியைக் கொல்ல புலிகள் துணிந்தனர், இதன் மூலம் அதற்கான விலையைத் தொடர்ந்து செலுத்தினர். அமிர்தலிங்கம் இலங்கைக்குத் திரும்பியதும், அவர் ஒரு இலக்காக மாறினார். தமிழ்த் தலைவர்களைத் தங்கள் பாதுகாப்பிலிருந்து விலக்கும் முயற்சியில், புலிகள் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கினர்.

அவர்கள் யோகேஸ்வரனை மிகவும் எளிதில் நம்பக்கூடியவராகத் தேர்ந்தெடுத்து அவரை அணுகினர். அன்பான யோகேஸ்வரன், சிலருடன் மோசமான அனுபவங்கள் இருந்தபோதிலும், சிறுவர்கள் மீது எப்போதும் மென்மையான அணுகுமுறையைக் கொண்டிருந்தார். அவர் பரந்த தமிழ் ஒற்றுமையின் தீவிர ஆதரவாளராகவும் இருந்தார், மேலும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் விடுதலைப் புலிகள் உட்பட அனைத்து தமிழ் குழுக்களுக்கும் இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த பாடுபட்டார்.

கொழும்பில் வேறு பெயரில் தங்கியிருந்த அறிவு என்ற ஒரு எல்.டி.டி.இ. உறுப்பினர் முதலில் யோகேஸ்வரனை அணுகினார். அவர் புலிகளுக்காக உளவு பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். வன்னியில் உள்ள எல்.டி.டி.இ. தலைமை தன்னைச் சந்தித்து தமிழ் ஒற்றுமையை அடைவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகளைப் பற்றி விவாதிக்க விரும்புவதாக அறிவு யோகேஸ்வரனிடம் கூறினார். "ஒற்றுமை" அல்லது ஒற்றுமையை ஏற்படுத்த எப்போதும் ஆர்வமாக இருந்த யோகேஸ்வரன், கொள்கையளவில் விருப்பத்துடன் இருந்தார். அதன் பிறகு, வவுனியாவில் உள்ள எல்.டி.டி.இ.யைச் சேர்ந்த விக்னா என்ற ஒருவர் யோகேஸ்வரனை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

முடிந்தால் அமிர்தலிங்கத்தையும் சிவசிதம்பரம் என்பவரையும் தன்னுடன் அழைத்து வருமாறு யோகேஸ்வரனிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. சிவசிதம்பரம் அப்போது ரி.யு.எல்.எஃப் தலைவராகவும், அமிர்தலிங்கம் பொதுச் செயலாளராகவும் இருந்தனர். தீவிரமான யோகேஸ்வரன், தமிழர் ஒற்றுமைக்காக தான் நினைத்த ஒரு பணியை மேற்கொள்ளும் அபாயத்தை எடுக்க முடிவு செய்தார். இந்த விஷயத்தில் எல்.டி.டி.இ.யின் நேர்மையான அணுகுமுறையை அவர் உறுதியாக நம்பும் வரை இந்த விஷயத்தை ரகசியமாக வைத்திருக்க முடிவு செய்தார். எனவே, 1989 பிப்ரவரியில், யோகேஸ்வரன் தனது சக ஊழியர்களிடம் மலையகத்திற்கு ஒரு குறுகிய பயணம் செல்வதாகக் கூறி, தனது மனைவி சரோஜினி மற்றும் ஒரு நம்பகமான ஓட்டுநருடன் கொழும்பில் இருந்து ஒரு ஜீப்பில் புறப்பட்டார். சரோஜினியைக் கண்டிக்கு அருகிலுள்ள ஒரு உறவினரின் வீட்டில் இறக்கிவிட்டு, பின்னர் வடக்கு நோக்கிச் சென்றார்.

வவுனியா நகரத்திற்கு வடக்கே சில மைல்கள் தொலைவில் உள்ள பாண்டிகுளத்தில் ஒரு ரகசிய இடத்தில் யோகேஸ்வரன் எல்.டி.டி.இ.யைச் சந்தித்தார். பாண்டிகுளத்தில்தான் யோகேஸ்வரன் தன்னை தொலைபேசியில் அழைத்த விக்னாவின் அடையாளத்தைக் கண்டுபிடித்தார். விக்னா வேறு யாருமல்ல, வவுனியாவிற்கான எல்.ரீ.ரீ.ஈ அரசியல் பிரிவுத் தலைவர் பீட்டர் லியோன் அலோசியஸ்.

யோகேஸ்வரனை அலோசியஸ் மனதார வரவேற்றார், ஆனால் அமிர்தலிங்கமும் சிவசிதம்பரமும் வராதது ஏமாற்றத்தை அளித்தது. எல்.ரீ.ரீ.ஈ துணைத் தலைவர் கோபால்சாமி மகேந்திரராஜா என்கிற "மகாத்யா" அமிர்தலிங்கத்தையும் சிவசிதம்பரமும் வந்தபோது சந்திக்கத் தயாராக இருந்ததாக அலோசியஸ் கூறினார். யோகேஸ்வரன் அவர்கள் வராததற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார், மேலும் ரி.யு.எல்.எஃப் தலைவர்களுடனான அடுத்தடுத்த சந்திப்புகளுக்கான ஏற்பாடுகளை இறுதி செய்ய முதலில் தனியாக வந்ததாகவும் கூறினார். அமிர்தலிங்கம் மற்றும் சிவசிதம்பரம் ஆகியோருடன் விரைவில் பாண்டிக்குளத்திற்குத் திரும்புவதாக அவர் கூறினார்.

வெனிசன் கறியுடன் சாப்பாடு
MEAL WITH VENISON CURRY


யோகேஸ்வரனை எல்.ரீ.ரீ.ஈயினர் நன்றாக நடத்தினர், மான் இறைச்சியுடன் சாப்பாடு வழங்கப்பட்டது. புலிகள் அளித்த வரவேற்பில் திருப்தியும் மகிழ்ச்சியும் அடைந்த யோகேஸ்வரன், தனது மனைவி சரோஜினியை அழைத்துக்கொண்டு கண்டி வழியாக கொழும்பு திரும்பினார். கொழும்புக்குத் திரும்பிய யோகேஸ்வரன், ஆரம்பத்தில் மலைநாட்டிற்கு மட்டுமே சென்றதாக பாசாங்கு செய்தார். ஆனாலும், அவர் தனது கூற்றில் சந்தேகங்களை ஏற்படுத்தும் சில தவறுகளைச் செய்திருந்தார். டயர்களில் மலைநாட்டு மண்ணைக் குறிக்காமல் வடக்குப் பகுதியைக் குறிக்கும் சில சிவப்பு நிற மண் அடையாளங்களைக் கண்டறிந்தவர் சாதுர்யமான ஆனந்தசங்கரிதான்.

மேலும், யோகேஸ்வரன் மலைநாட்டு காய்கறிகள் அல்லது பழங்களுக்குப் பதிலாக வடக்கு வகை பலாப்பழத்தை மீண்டும் கொண்டு வந்தார். சங்கரி தனது பயணம் குறித்து யோகேஸிடம் தொடர்ந்து விசாரித்தபோது, முன்னாள் யாழ்ப்பாண எம்.பி., ஏதோ ஒரு நிலப்பிரச்சனையைத் தீர்க்க வடக்குக்குச் சென்றதாக விளக்கினார். அந்த நேரத்தில் தனது சக ஊழியர்களிடம் எல்.ரீ.ரீ.ஈ உடனான சந்திப்பு குறித்து எதையும் அவர் வெளிப்படுத்தவில்லை.

இருப்பினும், எல்.ரீ.ரீ.ஈ உடனான சந்திப்பிற்குப் பிறகு யோகேஸ்வரன் புலிகளிடமிருந்து நிறைய அழுத்தங்களுக்கு ஆளானார். பாண்டிக்குளத்தில் உள்ள எல்.ரீ.ரீ.ஈ-யைச் சந்திக்க அமிர்தலிங்கத்தையும் சிவசிதம்பரம் அவர்களை எப்போது அழைத்து வரப் போகிறீர்கள் என்று வவுனியாவிலிருந்து அவருக்கு அடிக்கடி தொலைபேசி அழைப்புகள் வரும். கொழும்பை தளமாகக் கொண்ட 'அறிவு' என்கிற சிவகுமாரும் தொடர்ந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு அதையே கேட்பார்.

ஆனால் யோகேஸ்வரன் இது குறித்து தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் மற்றும் செயலாளரிடம் கூறத் தயங்கினார், மேலும் விஷயங்கள் இழுத்தடிக்கப்பட்டன. ஒரு கட்டத்தில், சிவசிதம்பரம் தனது மனைவி மகள் மற்றும் மருமகனுடன் சென்னைக்குச் சென்றார். யோகேஸ்வரன் இது குறித்து விடுதலைப் புலிகளிடம் கூறியபோது, அமிர்தலிங்கத்தை அழைத்து வந்து, தாமதிக்காமல் சிவசிதம்பரம் வரும்படி வவுனியாவுக்கு வருமாறு அவரிடம் கூறப்பட்டது. இறுதியாக, யோகேஸ்வரன் அமிர்தலிங்கத்திடம் நடந்ததைப் பற்றியும், விடுதலைப் புலிகள் அவரைச் சந்திக்க விரும்புவதாகவும் ரகசியமாகத் தெரிவித்தார். கோபக்காரரான அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் மீது மிகவும் கோபமடைந்து அவரைக் கடுமையாகத் திட்டினார். முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் வடக்கில் விடுதலைப் புலிகளைச் சந்திக்க வேண்டும் என்ற ஆலோசனையை உறுதியாக நிராகரித்தார்.


யோகேஸ்வரன் இப்போது சிக்கலில் மாட்டிக் கொண்டார். ஜனாதிபதி பிரேமதாசவின் அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியதால், இந்த கட்டத்தில் விஷயங்கள் வேறு திசையில் சென்றன. அரசியல் ஆலோசகர் அன்டன் ஸ்டானிஸ்லாஸ் பாலசிங்கமும், அப்போதைய விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவின் தலைவருமான நரேந்திரன் என்கிற யோகி தலைமையிலான புலிகள் குழு பேச்சுவார்த்தைக்காக கொழும்புக்கு வந்தது. பேச்சுவார்த்தையில் நேரடியாக ஈடுபடாத பல புலி உறுப்பினர்களும் அவர்களுடன் சென்றனர். அவர்களில் பீட்டர் லியோன் அலோசியஸ் அல்லது விக்னாவும் ஒருவர். பேச்சுவார்த்தைகளை ஒரு மறைப்பாகப் பயன்படுத்தி, புலிகள் கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்குள் முறையாக ஊடுருவத் தொடங்கினர்.

இரண்டாவது தொலைபேசி அழைப்பு

மாலை 4.00 மணியளவில் யோகேஸ்வரனுக்கு அலோசியஸிடமிருந்து இரண்டாவது தொலைபேசி அழைப்பு வந்தது. இந்தக் கூட்டத்தில் LTTE-யின் அரசியல் பிரிவுத் தலைவர் யோகி என்கிற நரேந்திரன் பங்கேற்க வாய்ப்புள்ளதாக அலோசியஸ் தெரிவித்தார். யோகி, அன்டன் பாலசிங்கம் மற்றும் LTTE பிரதிநிதிகள் குழுவின் பிற உறுப்பினர்கள் கலதாரி மெரிடியன் ஹோட்டலில் தங்கியிருந்தனர். முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டபடி மாலை 6.00 மணிக்கு அல்லாமல், மாலை 6.30 மணி முதல் 7.00 மணி வரை LTTE அங்கு இருக்கும் என்று அலோசியஸ் கூறினார்.

அவருக்கும் ஒரு வேண்டுகோள் இருந்தது. யோகியின் அந்தஸ்துள்ள ஒரு தலைவர் இதுபோன்ற செயல்களால் அவமானப்படுவார் என்பதால், LTTE குழு வரும்போது பாதுகாப்புப் படையினரிடம் அவர்களை சோதனை செய்யவோ வேண்டாம் என்று சொல்லுமாறு யோகேஸ்வரனிடம் கேட்கப்பட்டது. பேச்சுவார்த்தையில் யோகி பங்கேற்பார் என்ற எதிர்பார்ப்பில் யோகேஸ்வரன் உற்சாகமாக இருந்தார். மாலையில் வரவிருந்த LTTE குழுவைத் தேட வேண்டாம் என்று பாதுகாப்புத் தலைவர் சப் இன்ஸ்பெக்டர் தம்பிராஜா கந்தசாமியிடம் அவர் உடனடியாக அறிவுறுத்தினார், ஏனெனில் அவர்கள் அவமானப்படுவார்கள். "இந்த ஆட்களை நீங்கள் நம்ப முடியாது ஐயா" என்று கந்தசாமி மறுத்துவிட்டார். யோகேஸ்வரன் எதுவும் நடக்காது என்று அவருக்கு உறுதியளித்தார்.

ஒரு மூத்த விடுதலைப் புலித் தலைவர் எதிர்பார்க்கப்படுவதாகவும், அவர் அவமானப்படுத்தப்பட்டதாக உணரக்கூடாது என்றும் அவர் கூறினார். "அவர்கள் எங்கள் விருந்தினர்கள் என்பதால் நாம் அவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும். அவர்கள் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்தால் அவர்கள் எதிர்காலத்தில் வரமாட்டார்கள், எங்கள் விவாதங்கள் முறிந்துவிடும்," என்று யோகேஸ் கூறினார். கந்தசாமி சற்று தயக்கத்துடன் ஒப்புக்கொண்டு, தனது துணை அதிகாரிகளுக்கு அதற்கேற்ப அறிவுறுத்தினார்.

யோகேஸ்வரன் மற்றும் மனைவி சரோஜினி, சிவசிதம்பரம் ஆகியோர் வீட்டின் மேல் மாடியில் தங்கியிருந்த நிலையில், அமிர்தலிங்கம் குடும்பத்தினரும், சோமசுந்தரம் சேனாதிராஜா என்கிற "மாவை"யும் தரை தளத்தில் தங்கியிருந்தனர். தற்போது தமிழரசுக் கட்சியின் தலைவரும், மூத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான சேனாதிராஜா அப்போது எம்.பி. இல்லை. அமிர்தலிங்கத்தின் இளைய மகன் பகீரதன், ரவி மற்றும் அவரது மனைவி மலர்விழி ஆகியோருக்கு, இங்கிலாந்திலிருந்து வந்திருந்த தங்கள் பிறந்த மூத்த மகனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அமிர்தலிங்கம் தம்பதியினர் தங்கள் புதிய பேரனைப் பார்த்தது இதுவே முதல் முறை. அவர்கள் 12 ஆம் தேதி பிரிட்டன் திரும்பியிருந்தனர். லண்டனை அடைந்த பிறகு, அமிர்தலிங்கம் தனது மகனிடமிருந்து அழைப்பு வரும் என்று எதிர்பார்த்திருந்தார்.

மஞ்சள் நிற வண்டியில்

எல்.ரீ.ரீ.ஈ யினர் மூவரும் ஒரு மஞ்சள் நிற வண்டியில் வந்தபோது மாலை 6.40 மணி. எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, யோகி அங்கு இல்லை. மூன்று புலிகளும் ராசையா அரவிந்தராஜா என்ற விசு, பீட்டர் லியோன் அலோசியஸ் என்ற விக்னா மற்றும் சிவகுமார் என்ற அறிவு. நுழைவாயிலில் இருந்த காவல்துறை அதிகாரி சத்தியமூர்த்தி, மூவரையும் சோதனை செய்யாமல் உள்ளே நுழைய அனுமதித்தார். சத்தியமூர்த்தி கந்தசாமியிடம் தகவல் தெரிவித்தார், அவர் யோகேஸ்வரனை சந்திக்க மக்களை மேலே அனுப்பச் சொன்னார். அறிவு படிக்கட்டுகளின் அடிவாரத்தில் நின்றபோது விசுவும் அலோசியஸும் மேலே சென்றனர். யோகேஸ்வரன் தனது மனைவியுடன் மாடியில் டிவி பார்த்துக் கொண்டிருந்தார். புலிகள் வந்துவிட்டதாகச் சொல்லப்பட்டவுடன், அவர் படிக்கட்டுகளில் இறங்கி விசுவையும் அலோசியஸையும் பாதியிலேயே சந்தித்தார். யோகி வராததால் யோகேஸ்வரன் ஏமாற்றமடைந்தார், ஆனால் விசுவை அன்புடன் வரவேற்றார்.

அவர்கள் அமர்ந்து பேசிக் கொண்டனர். சரோஜினி சிற்றுண்டி தயாரிக்கச் சென்றார். யோகேஸ்வரன் வேலைக்காரப் பையன் ராஜு மூலம் அமிர்தலிங்கத்திற்கு ஒரு குறிப்பை அனுப்பினார். அவரும் அவரது மனைவி சிவசிதம்பரம் மற்றும் சேனாதிராஜாவும் கீழே உள்ள மற்றொரு அறையில் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். இந்தியத் தூதரின் இரவு விருந்தில் கலந்து கொள்ள அமிரும் சிவாவும் ஆடை அணிந்து மாடிக்குச் சென்றனர். மங்கையர்க்கரசியும் சேனாதிராஜாவும் தொடர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். லண்டனிலிருந்து தங்கள் மகன் ரவி அழைத்தால் தனக்குத் தகவல் அனுப்புமாறு அமிர்தலிங்கம் தனது மனைவியிடம் கூறினார்.

அமிர் மற்றும் சிவா உள்ளே நுழைந்ததும் விசு மற்றும் அலோசியஸ் என்ற இரண்டு புலிகள் எழுந்து நின்றனர். அமிர்தலிங்கம் ஒருவரின் தோளில் தட்டிக் கொடுத்து, அவர்களுக்கு இடையே ஒரு கரும்பு நாற்காலியில் அமர்ந்தார். சிவசிதம்பரம் சிறிது தூரம் அமர்ந்தார். யோகேஸ்வரன் எழுந்து தனது மனைவிக்கு சிற்றுண்டி கொண்டு வர உதவச் சென்றார். சரோஜினி தக்காளி சாண்ட்விச்கள் மற்றும் பிஸ்கட்களை கொண்டு வந்தார். அவர்கள் என்ன குடிக்க வேண்டும் என்று கேட்டார். இரண்டு புலிகளும் ஒரு குளிர்பானம் விரும்பினர். அமிர்தலிங்கம் தேநீர் அருந்தத் தேர்ந்தெடுத்தார். சிவா மற்றும் யோகேஸ் குடிக்க எதுவும் விரும்பவில்லை. சரோஜினி இரண்டு பாஷன் பழ பானங்கள் மற்றும் ஒரு கோப்பை தேநீர் தயாரித்த பின்னர் அவர் தனது அறைக்குச் சென்றார்.

யோகேஸ்வரன் அறிமுகப்படுத்திய பிறகு, புலிகள் ரியுஎல்எஃப் தலைவர்களைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகக் கூறினர். அமிர்தலிங்கமும் சிவசிதம்பரம் இருவரும் ஒத்த உணர்வுகளுடன் பரிமாறிக் கொண்டனர். இரண்டு ரியுஎல்எஃப் தலைவர்களும் தமிழ் போராளிகளின் அர்ப்பணிப்பு மற்றும் தியாகங்களுக்காக அவர்களைப் போற்றுவதாகவும் மதிப்பதாகவும் கூறினர். இப்போது அனைத்து தமிழ் குழுக்களும் ஒன்றிணைந்து ஒற்றுமையை உருவாக்கி ஒரு பொதுவான அணுகுமுறையை உருவாக்குவது அவசியம். இல்லையெனில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைத்த வெற்றிகள் இழக்கப்படும். எந்தவொரு அரசியல் ஏற்பாடும் புலிகளுக்கு பெருமை சேர்க்கும் என்று அமிர்தலிங்கம் புலிகளுக்கு உறுதியளித்தார்.

நடுநிலை” கொழும்பு குடியிருப்பு

புலிகள் தலைமையிடம் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்களைத் தெரிவிப்பதாக விசு கூறினார். பாண்டிக்குளத்தில் அவர்களைச் சந்தித்து இந்த விஷயங்களைப் பற்றி விவாதிக்க எல்.ரீ.ரீ.ஈ உயர்மட்டத்தினர் ஆர்வமாக இருப்பதாக அவர் கூறினார். பாண்டிகுளத்தில் ஒரு சந்திப்பு என்பது ஒரு சரியான யோசனை அல்ல, ஏனெனில் அது கவனத்தை ஈர்த்திருக்கும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ முகாம் இருக்கும் இடத்தை அம்பலப்படுத்தும் என்று அமிர்தலிங்கம் கூறினார். பின்னர் விசு, கொழும்பில் உள்ள ரி.ரீ.யூ.எல்.எஃப் உடன் சந்தித்து மேலும் விவாதிக்க மூத்த எல்.ரீ.ரீ.ஈ தலைவர்கள் தயாராக இருப்பார்கள் என்றும், ஆனால் அந்த சந்திப்பு டி.ரீ.யூ.எல்.எஃப் இல்லத்திலோ அல்லது அலுவலகத்திலோ இருக்கக்கூடாது என்றும் கூறினார். மூத்த எல்.ரீ.ரீ.ஈ தலைவர்கள் ரி.ரீ.யூ.எல்.எஃப்-ஐ வேறொரு இடத்தில் சந்திக்கலாம், மேலும் இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தைக்கு கொழும்பில் ஒரு விடுதியின் பெயரை பரிந்துரைத்தனர். அது பாதுகாப்பானது, பாதுகாப்பானது அல்லது ஒதுக்குப்புறமானது அல்ல என்று கூறி அமிர்தலிங்கம் அந்த ஆலோசனையை நிராகரித்தார். பின்னர் சிவசிதம்பரம், கொழும்பில் உள்ள “நடுநிலை” இல்லத்தில் ஒரு கூட்டத்தை அமைக்கலாம் என்றார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக கூட்டத்திற்கு முன்பு அந்த இடத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை விசு ஏற்றுக்கொண்டார். உரையாடல் மிகவும் சுமுகமாக இருந்தது. பெரும்பாலான உரையாடல்களை அமீர்-சிவா இரட்டையர்களும் விசுவும் செய்தனர், அதே நேரத்தில் யோகேஸ்வரனும் அலோசியஸும் மிகவும் அமைதியாக இருந்தனர். ஒரு கட்டத்தில், அமிர்தலிங்கம் விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு ஜனநாயகப் பாதைக்குத் திரும்ப வேண்டிய நேரம் இது என்று கனிவுடன் கூறினார். சிவசிதம்பரம் கூறினார்: “உங்களைப் போன்ற இளைஞர்களுக்கு ஜனநாயகம் பழமையானதாகத் தோன்றலாம், ஆனால் நாங்கள் வயதானவர்கள் சொல்வதையும் பொறுமையாகக் கேளுங்கள்.” அரசாங்க-விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் குறித்து கேட்டபோது, விசு நகைச்சுவையாகச் சொன்னார்: “இரு தரப்பினரும் ஒருவரையொருவர் ஏமாற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.” இது அனைவரிடமிருந்தும் உரத்த சிரிப்பை வரவழைத்தது.

மேல் தளத்தில் உரையாடல் அன்பாகத் தொடர்ந்தபோது, கீழே சிறிது உற்சாகம் நிலவியது. .. கீழே காத்திருந்த சிவகுமார் என்கிற அறிவு, மாலை 7.00 மணிக்குப் பிறகு பதற்றமடையத் தொடங்கினார். அவர் தனது கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே, மேலும் கீழும் நடந்து, பதட்டத்துடன் மேல்நோக்கிப் பார்த்தார். பணியில் இருந்த போலீஸ்காரர்களில் ஒருவர் சிவகுமாரின் நடத்தையில் சந்தேகப்பட்டார். அவரது பெயர் நிசங்க திப்போட்டுமுனுவ. Nissanka Thibbotumunuwa. அந்த போலீஸ்காரரின் சொந்த ஊர் கேகாலை மாவட்டத்தில் உள்ள ஹெட்டிமுல்லவில் உள்ள அகிரியகல. நிசங்க என்று அழைக்கப்பட்ட அவர், மகாவலி அமைச்சகத்தால் அமிர்தலிங்கத்தின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்தார்.

நிசங்க திப்போட்டுமுனுவாவும் சத்தியமூர்த்தியும் சிவகுமாரை வலுக்கட்டாயமாகத் தேடினர், அவர் மீது ஒரு கையெறி குண்டு மற்றும் துப்பாக்கிக் குண்டுகள் இருப்பதைக் கண்டனர். தம்பிராஜா கந்தசாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிவகுமாரை சத்தியமூர்த்தியின் காவலில் வைத்த பிறகு, கந்தசாமியும் நிசங்கவும் அமைதியாக மாடிக்குச் சென்றனர். கந்தசாமி படிக்கட்டுகளின் உச்சியில் இருந்தபோது, நிசங்க பால்கனிக்குச் சென்று பிரதான அறையில் வசிப்பவர்களின் பார்வையில் இருந்து விலகி நின்றார். நடந்துகொண்டிருந்த உரையாடலைத் தொந்தரவு செய்ய இருவரும் விரும்பவில்லை, ஆனால் சிவகுமாரிடம் இருந்த கையெறி குண்டு மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் விழிப்புடன் இருந்தனர். உள்ளே நல்லுறவு தொடர்ந்து நிலவியது. பின்னர் அது நடந்தது!

“நீங்கள் அனைவரும் உண்மையான அரக்கர்கள்”

இரவு சுமார் 7.20 மணி. விசு தனது பானத்தை முடித்துவிட்டு காலி கிளாஸை மேசையில் வைக்க எழுந்தார். பின்னர் அவர் திரும்பி அமிர்தலிங்கத்தைப் பார்த்து கூறினார்: “எல்லோரும் புலிகளை “அரக்கர்” என்று நினைக்கிறார்கள், ஆனால் உண்மையில் நீங்கள் அனைவரும்தான் உண்மையான அரக்கர்கள்.”

ரி.யு.எல்.எஃப் மூவரும் விசு நகைச்சுவை செய்வதாக நினைத்தனர். யோகேஸ்வரன் சிரிக்க, அமிரும் சிவாவும் சிரித்தனர். பின்னர் விசு ஒரு துப்பாக்கியை எடுத்து அமிர்தலிங்கத்தை நோக்கிச் சுடத் தொடங்கினார். யோகேஸ்வரன் கத்திக் கொண்டே தனது நாற்காலியில் இருந்து எழுந்தார். அலோசியஸ் ஒரு துப்பாக்கியை எடுத்து அவரை நோக்கிச் சுட்டார். சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த சிவசிதம்பரம் எழுந்து நின்று “வேண்டாம். வேண்டாம்” என்று தமிழில் கத்தினார். விசு அவரது வலது தோளில் சுட்டார்.

நிஸ்ஸங்க திப்போட்டுமுனுவா துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டு உள்ளே பார்த்தார். என்ன நடக்கிறது என்பதைப் பார்த்து கண்ணாடிப் பலகைகள் வழியாகச் சுடத் தொடங்கினார். அவர் சுட்டு இருவரையும் காயப்படுத்தினார். பின்னர் விசுவும் அலோசியஸும் வெளியே ஓடினர். துப்பாக்கிச் சூட்டுச் சத்தத்தைக் கேட்ட கந்தசாமி, இருவரையும் நோக்கி ஓடினார். காயமடைந்த விசுவும் அலோசியஸும் திருப்பிச் சுட்டு படிக்கட்டுகளில் இருந்து கீழே ஓட முயன்றனர், ஆனால் தன்னிடம் இரண்டாவது துப்பாக்கியை வைத்திருந்த நிஸ்ஸங்க சுற்றி வந்து தொடர்ந்து சுட்டார். அவர் இருவரையும் கொன்றார். துப்பாக்கிச் சூடுகளைக் கேட்டதும், சத்தியமூர்த்தி சிவகுமாரைப் பிடித்து, தன்னுடன் சண்டையிடத் தொடங்கினார்.

சிவகுமார் என்கிற அறிவு தப்பித்து, தன்னிடமிருந்து முன்னர் கைப்பற்றப்பட்ட கையெறி குண்டைப் பிடிக்க முயன்றார். அவர் அதை வீசுவதற்கு முன்பு, ஓடி வந்த நிஸ்ஸங்க அவரைச் சுட்டு காயப்படுத்தினார். பின்னர் சிவகுமார் ஓட முயன்றார், ஆனால் நிஸ்ஸங்க மீண்டும் சுட்டு அவரை வீழ்த்தினார். மூன்று கொலையாளிகளும் நிஸ்ஸங்கவால் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.

நிஸ்ஸங்க மரண காயங்களை ஏற்படுத்தியிருந்தாலும், மற்றவர்களும் இரத்தம் கசிந்திருந்தனர். சப் இன்ஸ்பெக்டர் கந்தசாமி, அலோசியஸை சுட்டு காயப்படுத்தினார், அதே நேரத்தில் கான்ஸ்டபிள் லக்ஷ்மன், அரவிந்தராஜா என்கிற விசு மற்றும் சிவகுமார் என்கிற அறிவு ஆகிய இருவரையும் சுட்டு காயப்படுத்தினார்.

இரு அதிகாரிகளும் தமிழர்கள் என்பதால், அவர்களின் குடும்பங்களை விடுதலைப் புலிகளின் பழிவாங்கலில் இருந்து பாதுகாக்கும் முயற்சியாக, அவர்களின் துப்பாக்கிச் சூடு பற்றிய விவரங்கள் அப்போது செய்தித்தாள்களில் வெளியிடப்படாமல் மறைக்கப்பட்டன.

புலிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் நிஸ்ஸங்க திப்போட்டுமுனுவாவிடம் இரண்டாவது துப்பாக்கி இருந்ததுதான் உதவிய முக்கிய காரணி. நிஸ்ஸங்க புலிகளை வெல்ல உதவியது, குறிப்பாக அறிவு முதலில் சுடப்பட்டபோது அவரது முஷ்டியில் ஒரு கையெறி குண்டு இருந்தது.

ஏனெனில் அமிர்தலிங்கம் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த மற்றொரு சக ஊழியர் அன்று விடுப்பில் இருந்தார். சில்வா என்ற நபர் தனது ஆயுதத்தை நிஸ்ஸங்கவிடம் ஒப்படைத்தார். துப்பாக்கிச் சூடு தொடங்கியபோது நிஸ்ஸங்கவிடம் இரண்டு துப்பாக்கிகள் இப்படித்தான் இருந்தன. நிஸ்ஸங்கவும் சில்வாவும் மகாவலி பாதுகாப்பைச் சேர்ந்தவர்கள், நம்பகமான அதிகாரிகளாக அமிர்தலிங்கத்தின் பாதுகாப்பிற்காக காமினி திசாநாயக்கவால் தனிப்பட்ட முறையில் நியமிக்கப்பட்டனர்.


மங்கையர்க்கரசி, சரோஜினி மற்றும் சேனாதிராஜா ஆகியோர் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டு, பின்னால் இருந்த இரண்டாவது படிக்கட்டு வழியாக மாடிக்கு ஓடினர். அமிர்தலிங்கம் தனது நாற்காலியில் இரத்தம் கசிந்து அசையாமல் அமர்ந்திருந்தார். கணவர் இறந்துவிட்டதை உணராத அவரது மனைவி அவரது தலைக்குப் பின்னால் ஒரு மெத்தையை வைத்து அவரைத் தூக்கிப் பிடித்தார். தரையில் இரத்த வெள்ளத்தில் கிடந்த யோகேஸ்வரன், சரோஜினி அவரது பக்கத்தில் மண்டியிட்டபோது, "பாஸ்டர்ட்ஸ், பாஸ்டர்ட்ஸ்" என்று ஆங்கிலத்தில் முணுமுணுத்தார். சிவசிதம்பரம் பேசாமல் சுவரில் சாய்ந்து மயக்கமடைந்தார். ஆம்புலன்ஸ்கள் வந்தன, பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கொழும்பு நீதித்துறை மருத்துவ அதிகாரி (JMO) டாக்டர் எம்.எஸ். எல். சல்காடோ, அமிர்தலிங்கத்தின் பிரேத பரிசோதனையை மேற்கொண்டார், தலை மற்றும் மார்பில் ஏற்பட்ட காயங்களால் மரணம் ஏற்பட்டதாக அறிவித்தார். துணை மருத்துவ அதிகாரி டாக்டர் எல்.பி.எல். டி அல்விஸ், யோகேஸ்வரனின் பிரேத பரிசோதனையை மேற்கொண்டார், இதயம் மற்றும் கல்லீரலில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டு காயங்களால் மரணம் ஏற்பட்டதாகக் கூறினார். அந்த சோகமான இரவில் உண்மையில் என்ன நடந்தது என்பதற்கு சிவசிதம்பரம் மட்டுமே நேரில் கண்ட சாட்சியாக இருந்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு 2000 ஆம் ஆண்டில் சிவா இறந்தார்.

முன்னர் கூறியது போல, அமிர்தலிங்கமும் சிவசிதம்பரமும் சுட்டுக் கொல்லப்பட்ட இரவில், தாஜ் சமுத்திராவில் இந்திய சிறப்புத் தூதர் பி.ஜி. தேஷ்முக்கைக் காண்பதற்காக இந்திய உயர் ஸ்தானிகர் லெகன் லால் மெஹ்ரோத்ரா ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்தில் கலந்து கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தனர். இந்தியத் தூதர் மெஹ்ரோத்ரா, அப்போதைய மாநில பாதுகாப்பு அமைச்சரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான ரஞ்சன் விஜேரத்ன மற்றும் பிற சிறப்பு விருந்தினர்கள் தாஜ் சமுத்திராவில் பி.ஜி. தேஷ்முக்கிற்கான விருந்தில் கலந்து கொண்டனர். கொலை பற்றிய செய்தியை முதலில் வெளியிட்டது முன்னாள் நிதிச் செயலாளர் பி. பாஸ்கரலிங்கம் தான்.

அமிர்தலிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டதாக மெஹ்ரோத்ரா மற்றும் ரஞ்சன் விஜேரத்னவிடம் பாஸ்கரலிங்கம் கூறினார். அதிர்ச்சியடைந்த மெஹ்ரோத்ரா இது எப்போது நடந்தது என்று விசாரித்தார், பதினைந்து நிமிடங்களுக்கு முன்பு அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. மூன்று கொலையாளிகளின் விசாரணை ஜூலை 21 அன்று நடைபெற்றது. மூன்று உடல்களையும் உரிமை கோர யாரும் முன்வராததால், நியாயமான காலத்திற்குப் பிறகு அரசால் அப்புறப்படுத்தப்பட்டது. புலிகள் அதிகாரப்பூர்வமாக பொறுப்பை மறுத்து, தங்கள் "மறுப்பை" தொடர்ந்து கூறி வந்தனர், ஆனால் அனந்தபுரத்தில் ஒரு போலி இறுதிச் சடங்கு நடத்தப்பட்டதாக செய்திகள் வந்தன. இருப்பினும், புலிகள்தான் உண்மையில் பொறுப்பு என்ற செய்தியுடன் தமிழ் சமூகம் பரபரப்பாக இருந்தது.

மூன்று கொலையாளிகளும் உயிருடன் தப்பித்திருந்தால், படுகொலைக்குக் குற்றம் சாட்டப்படாமல் விடுதலைப் புலிகள் தப்பித்திருக்கலாம். அதன் பிறகு, பிரேமதாச அரசாங்கமே புலிகளின் தொடர்பை மறுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கலாம். இந்தப் பழியை மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) அல்லது புது தில்லியை மையமாகக் கொண்ட ஒரு தமிழ்க் குழு மீது சுமத்தியிருக்கலாம். இந்தக் கொலையில் புலிகளை சிக்க வைத்து, அதன் மூலம் அரசு-விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தையை நாசமாக்க சதித்திட்டம் தீட்டப்பட்டதாக ஒரு வழக்கு திறம்பட நிரூபிக்கப்பட்டிருக்கலாம். இருப்பினும், மூன்று புலிகளும் சுட்டுக் கொல்லப்பட்டு அவர்களின் அடையாளங்கள் வெளிப்படுத்தப்பட்டதால், இந்தக் காட்சி எதிர்பார்த்தபடி வெளிவரவில்லை.

கதாநாயகன் நிசங்க திப்போட்டுமுனுவ
HERO NISSANKA THIBBOTUMUNUWA


இந்த துயர சம்பவத்தின் நாயகன் சிங்கள போலீஸ்காரர் நிசங்க திப்போடுமுனுவா ஆவார், அவர் மூன்று புலிக் கொலையாளிகளையும் சுட்டுக் கொன்றார். சம்பந்தப்பட்ட அனைத்து புலிக் கொலையாளிகளையும் சுட்டுக் கொன்ற முதல் மற்றும் ஒருவேளை ஒரே சந்தர்ப்பம் இதுவாகும். இருப்பினும், அமிர்தலிங்கத்தையும் யோகேஸ்வரனையும் காப்பாற்ற முடியாததற்கு நிசங்க மிகவும் வருத்தப்பட்டார். அமிர்தலிங்கத்தின் இரண்டாவது மகன் பகீரதன் ஜூலை 12 அன்று பிரிட்டனுக்குச் சென்றிருந்தார். நிசங்க அவருடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்று தந்தையைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று கூறி விடைபெற்றார், மேலும் தனது உயிரைக் கொடுத்தும் அவரைப் பாதுகாப்பதாக மகனுக்கு உறுதியளித்தார். ஜூலை 13 அன்று அமிர்தலிங்கம் கொல்லப்பட்டார். ஜூலை 15 அன்று மரணத்திற்குப் பிறகு பகீரதன் இலங்கைக்குத் திரும்பினார். விமான நிலையத்தில் இருந்த நிசங்க, அமிர்தலிங்கத்தை தான் வாக்குறுதியளித்தபடி பாதுகாக்க முடியாததற்கு மன்னிப்பு கேட்டு பகீரதன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். இதை என்னிடம் கூறியபோது பகீரதன் கண்ணீர் விட்டார்.

அமிர்தலிங்கத்தின் படுகொலைக்கு 21 ஆண்டுகளுக்குப் பிறகு, சபரகமுவ மாகாணத்தில் ஒரு உணர்ச்சிபூர்வமான சந்திப்பு நிகழ்ந்தது. 2010 ஆம் ஆண்டு திருமதி அமிர்தலிங்கமும் டாக்டர் பகீரதன் அமிர்தலிங்கமும் கேகாலையில் உள்ள நிஸ்ஸங்க திப்போட்டுமுனுவவின் வீட்டிற்குச் சென்றனர். நிஸ்ஸங்க தற்போது ஓய்வு பெற்றுள்ளார், அவரது மனைவி ஷியாமிலா பிரமிளா குமாரி தாயையும் மகனையும் வரவேற்றனர். திருமதி அமிர்தலிங்கமும் பகீரதனும் நிஸ்ஸங்கவை கட்டிப்பிடித்து அவரைப் பார்த்து அழுதனர்.

அமிர்தலிங்கம் படுகொலை பற்றிய உண்மையை பல ஆண்டுகளுக்கு முன்பே ரி.யு.எல்.எஃப் அல்லது ஐ.டி.ஏ.கே. முன்முயற்சி எடுத்திருந்தால் இன்னும் விரிவாக வெளிப்படுத்தியிருக்க முடியும்.

இந்த விஷயத்தில் உயிர் பிழைத்த ஒரே நேரில் கண்ட சாட்சி முருகேசு சிவசிதம்பரம் வெளிப்படையாக மௌனம் காத்தார். அப்போது நிலவிய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு இது புரிந்துகொள்ளத்தக்கது. இருப்பினும், சிவசிதம்பரம் என்ன நடந்தது என்பதை ஒரு சிலருக்கு மட்டுமே தனிப்பட்ட முறையில் கூறுவார்.

“சிவா ஐயா” என்று அழைக்கப்படும் அவர், தொலைபேசி உரையாடலில் சரியாக என்ன நடந்தது என்பதை என்னிடம் கூறினார். அது மிக நுணுக்கமான விவரங்கள் நிறைந்த ஒரு தெளிவான கணக்கு. அவரது நினைவாற்றலுக்காக நான் அவரைப் பாராட்டியபோது, சிவசிதம்பரம் பதிலளித்தார்: “அன்று நடந்ததை நான் எப்படி மறக்க முடியும் தம்பி?” இந்த தொலைபேசி உரையாடல் , சம்பவம் நடந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு நடந்தது. இருப்பினும், அப்போது அவர் என்னிடம் சொன்னதை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்ற உறுதிமொழியை சிவா விரும்பினார். திருமதி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் மற்றும் திருமதி சரோஜினி யோகேஸ்வரன் ஆகியோரிடமும் அவர்களின் நினைவுகள் குறித்துப் பேசியுள்ளேன். துரதிர்ஷ்டவசமாக, யாழ்ப்பாண மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி சரோஜினி யோகேஸ்வரன் 1998 இல் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார். திருமதி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் 2016 இல் அமைதியாக காலமானார்.

“எந்த சிங்களவரும் அவரைக் கொல்லவில்லை என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்”
“I AM SO GLAD THAT NO SINHALESE KILLED


முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், வெற்றிவேலு யோகேஸ்வரனுடன் சேர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட துயரக் கதை இது. லசந்தா விக்கிரமதுங்க, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சிறிமாவோ பண்டாரநாயக்கவிடம் இந்த சம்பவம் குறித்துத் தெரிவித்தபோது, அவர் அவசரமாக விசாரித்தார்: “யார் அதைச் செய்தார்கள்?” அது விடுதலைப் புலிகள் என்று கூறப்பட்டபோது, திருமதி பண்டாரநாயக்க நிம்மதிப் பெருமூச்சு விட்டார்: “எந்த சிங்களவரும் அவரைக் கொல்லவில்லை என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.” அமிர்தலிங்கத்தின் அரசியலை பல சிங்களவர்கள் வெறுத்திருக்கலாம், ஆனால் அவர்கள் அவரைக் கொல்லவில்லை. முன்பு அவரை தங்கள் ஹீரோவாகக் கருதிய தமிழ் இளைஞர்களால் அவர் கொல்லப்பட்டார்.

dbsjeyaraj@yahoo.com



Read more...

Tuesday, February 13, 2024

மாவை யின் பொறுத்துக்கொள்ளமுடியாத சுயநலம். சிறிதரனும் சுமந்திரனும் வீடுதேடிச் சென்று மூச்சில் குத்தினர். டி.பி.எஸ்.ஜெயராஜ்

கடந்த பத்து வருடங்களாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் பதவியை வகித்துவந்த மாவை சேனாதிராஜா ஜனவரி 21 திருகோணமலை நகர மண்டபத்தில் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்கள் மத்தியில் நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்ட பின்னரும் நிலைவரம் எல்லாம் ஏதோ பழைய மாதிரியே இருப்பது போன்ற நினைப்பில் இருக்கிறார். கௌரவமான முறையில் பதவியில் இருந்து இறங்காமல் அவர் தொடர்ந்தும் தொங்கிக்கொண்டிருக்கிறார்.

தமிழரசு கட்சி 2022 ஆம் ஆண்டு வரை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான அங்கத்துவக் கட்சியாக இருந்தது. வட மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் உள்ள சகல ஐந்து மாவட்டங்களிலும் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருக்கும் ஒரேயொரு தமிழ்க் கட்சியாக தமிழரசு கட்சியே விளங்குகிறது. ‘ சமத்துவமான கட்சிகளில் முதலாவது ‘ என்ற அந்தஸ்தை அனுபவித்துவந்த போதிலும், அந்த கட்சி அண்மைக்காலமாக நகைப்புக்கிடமானதாக மாறிவிட்டது. இந்த நிலைக்கு சேனாதிராஜாவின் சுயநல நடத்தை பெருமளவுக்கு பங்களிப்புச் செய்திருக்கிறது.

மாவை சேனாதிராஜா மொத்தமாக ஒரு ஐந்து வருடங்கள் பாராளுமன்றத்தில் தேசியப்பட்டியல் உறுப்பினராக அங்கம் வகித்தார். பிறகு பொதுத்தேர்தல்களில் போட்டியிட்டு தெரிவாகி 20 வருடங்களாக யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். அவர் மொத்தமாக 25 வருடங்களாக பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தார்.2014 தொடக்கம் 2024 வரை பத்து வருடங்களாக தமிழரசு கட்சியின் தலைவர் பதவியையும் அவர் வகித்தார். அதற்கு முதல் கட்சியின் பொதுச் செயலாளராகவும் செயற்பட்டார்.

தமிழரசு கட்சியின் தலைவர்கள் இரு பதவிக் காலங்களுக்கும் அதிகமாக பதவியில் தொடர்ந்து இருக்காத ஒரு பாரம்பரியம் கடைப்பிடிக்கப்படுகிறது.2010 ஆம் ஆண்டில் தலைவராக வந்த முதுபெரும் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் இரு பதவிக்காலங்களுக்கு பிறகு 2014 ஆம் ஆண்டில் பதவியில் இருந்து இறங்கினார். அவர் தலைவராக இருந்த காலத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த மாவை சேனாதிராஜா 2014 ஆம் ஆண்டு் தலைவரானார்.

இரு பதவிக்காலங்களுக்கு பிறகு 2018 ஆம் ஆண்டில் தலைவர் பதவியில் இருந்து அவர் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டபோதிலும், அவ்வாறு செய்யவில்லை. 2014 — 2024 காலப்பகுதியில் அவர் கட்சியின் தலைவர் பதவியில் தொடர்ந்தார். தமிழரசு கட்சியின் தலைவர் பதவியில் தொடர்ச்சியாக பத்து வருடங்களாக நீடித்த ஒரே அரசியல்வாதி மாவை சேனாதிராஜாவே ஆவார். கட்சியின் தாபகத் தலைவரான மதிப்புக்குரிய எஸ்.ஜே.வி. செல்வநாயகம் ( தந்தை செல்வா ) கூட அவ்வாறு பல வருடங்கள் தலைவராக இருந்ததில்லை.

தமிழரசு கட்சியின் மகாநாடு

சுமார் ஒரு தசாப்தகாலமாக ” நல்ல வழியோ, கெட்ட வழியோ எப்படியாவது ” மாவை தமிழரசு கட்சியின் தலைவராக இருந்துவிட்டார். புதிய ஒரு தலைவர் கட்சியின் பொது மகாநாட்டில் வைத்து பொதுச் சபையினாலும் மத்திய செயற்குழுவினாலும் தெரிவுசெய்யப்படுவதும் இரு வருடங்களுக்கு ஒரு முறை மகாநாடு நடத்தப்படுவதும் வழமை. ஆனால், 2014 மகாநாட்டில் மாவை சேனாதிராஜா தலைவராக தெரிவுசெய்யப்பட்ட பிறகு அடுத்த மகாநாடு 2019 ஆண்டில் மாத்திரமே நடத்தப்பட்டது. அந்த ஆண்டிலும் கட்சியின் தலைவராக மீண்டும் தெரிவான பிறகு இன்னொரு ஐந்து வருடங்களாக 2024 வரை அவரால் மகாநாட்டை ஒத்திவைக்கக்கூடியதாக இருந்தது.

2024 ஜனவரியில் மகாநாட்டை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டபோது தமிழரசு கட்சியின் தலைவர் பதவிக்கு உட்கட்சித் தேர்தல் ஒன்று நடக்கப்போகிறது என்பது தெளிவாகத் தெரிந்தது. தலைவரைத் தெரிவுசெய்வதற்கு தமிழரசு கட்சி தேர்தலைத் தவிர்த்து கருத்தொருமிப்பின் அடிப்படையிலான நடைமுறை ஒன்றே பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டுவந்த நிலையில் தலைவர் தெரிவுக்கு உட்கட்சி தேர்தல் ஒன்று நடத்தப்பட்டது இதுவே முதற்தடவை. போட்டித் தேர்தல் கட்சியைச் சிதறடித்துவிடும் என்ற அச்சம் கட்சி வட்டாரங்களில் நிலவியது. அந்த அச்சம் ஏற்றுக்கொள்ளக்கூடியதே.

இந்த அச்சத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்துவதில் நாட்டம் காட்டிய மாவை சேனாதிராஜா இடைக்காலத் தலைவராக தானே பதவியில் தொடர்ந்துகொண்டு மகாநாட்டை காலவரையறையின்றி ஒத்திவைக்கலாம் என்று யோசனையை முன்வைத்தார். அவரின் அதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு பெரும்பாலான உறுப்பினர்கள் விரும்பியதால் அவரது யோசனையை ஏற்பதற்கு எவரும் இருக்கவில்லை. அதனால் தி்ட்டமிட்டபடி ஜனவரி 21 தமிழரசு தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது. இன்னொரு யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரனை சிவஞானம் சிறிதரன் 47 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து கட்சியின் புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்டார்.

அதற்குப் பிறகு புதிய மத்திய செயற்குழுவும் கட்சியின் புதிய நிருவாக உறுப்பினர்களும் ஜனவரி 27 ஆம் திகதி தெரிவு செய்யப்படவிருந்தனர். மறுநாள் மகாநாட்டின் பொதுகூட்ட்டத்தில் பழைய தலைவர் சம்பிரதாயபூர்வமாக பதவியில் இருந்து இறங்கவும் புதிய தலைவர் பொறுப்பை ஏற்பதற்கும் ஏற்பாடாகியிருந்தது. பொதுச்செயலாளர் உட்பட புதிய நிருவாகிகளும் அன்னறயதினம் அறிமுகம் செய்யப்படவிருந்தனர்.

தமிழரசு கட்சியின் யாப்பின் பிரகாரம் மத்திய செயற்குழு புதிதாக அமைக்கப்பட்டவுடன் பழைய தலைவரின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. தலைவராக தெரிவுசெய்யப்பட்டவர் தன்னியல்பாகவே புதிய தலைவராகிவிடுவார். அடுத்த நாள் மகாநாட்டில் முறைப்படி பதவிப்பொறுப்பைக் கையளிப்பது என்பது வெறுமனே அடையாளபூர்வமான ஒரு சம்பிரதாய நிகழ்வு மாத்திரமே.

ஆனால், ஜனவரி 27 தமிழரசு கட்சிக்குள் குழப்பம் மூண்டது. ஆரம்பத்தில் சிறிதரன் சுமந்திரனுக்கு நேசக்கரம் நீட்டி இருவரும் சேர்ந்து பணியாற்றும் நிலை தோன்றியது. ஐம்பது உறுப்பினர்களைக் கொண்ட மத்திய செயற்குழு புதிதாக அமைக்கப்பட்டது. அடுத்து 2024 — 2026 காலப்பகுதிக்கான கட்சியின் புதிய நிருவாகிகள் பட்டியலும் இறுதிசெய்யப்பட்டது.

பொதுச்செயலாளர்

இந்த நிருவாகிகளில் முக்கியமான செயலாளர் பதவியும் அடங்குகிறது. 16 நிருவாக உறுப்பினர்கள் பட்டியலும் மத்திய செயற்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த பட்டியல் பொதுச்சபைக்கு ஒரு தீர்மானமாக முன்வைக்கப்பட்டது. புதிய தலைவர் சிறிதரனின் முன்மொழிவை குழு உறுப்பினரான பீட்டர் இளஞ்செழியன் வழிமொழிந்தார். அது ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அடுத்து சில கலந்தாலோசனைக்கு பிறகு பொதுச்சபையும் அதை அங்கீகரித்தது.

தலைவர்,செயலாளர் என்ற முக்கிய பதவிகளை வடக்கையும் கிழக்கையும் சேர்ந்தவர்கள் பகிர்ந்துகொள்வது தமிழரசு கட்சியில் ஒரு நடைமுறையாகப் பின்பற்றுப்பட்டு வருகிறது. வட மகாணத்தைச் சேர்ந்தவர் தலைவராக இருந்தால் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் செயலாளராக இருப்பார். கிழக்கு மாகாணத்தவர் தலைவராக இருந்தால் வட மாகாணத்தைச் சேர்ந்தவர் செயலாளராக இருப்பார். சிறிதரன் வடமாகாணத்தைச் சேர்ந்தவர் என்பதால் செயலாளர் கிழக்கு மாகாணத்தவராக இருக்கவேண்டும். சிறிதரனின் நெருங்கிய ஆதரவாளரான முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறீநேசன் செயலாளர் பதவி மீது கண்வைத்திருந்தார். ஆனால் அவருடன் சிறிதரன் பேசி திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சி தலைவரான சண்முகம் குகதாசன் செயலாளராகுவதற்கு வழிவிட இணங்கவைத்தார்.

மதிய உணவுக்கு பிறகு கூட்டம் மீண்டும் தொடங்கியபோது மனமாற்றம் ஒன்று ஏற்பட்டுவிட்டது போன்று தெரிந்தது. தானே செயலாளராக வரவேண்டும் என்று தனது நலன் விரும்பிகள் விரும்புவதால் குகதாசனை செயலாளராக ஏற்றுக்கொள்ளமுடியாது என்று சிறீநேசன் கூறினார். சுமந்திரனின் ஆதரவாளராக குகதாசன் தவறாக கருதப்பட்டதால் சிறிதரனின் பல ஆதரவாளர்களும் அவரை கண்டனம் செய்ததுடன் செயலாளராக அவரை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறினர்.

பொதுச்செயலாளர் உட்பட முழு நிருவாகிகள் பட்டியலும் ஏற்கெனவே மத்திய செயற்குழுவினாலும் பொதுச்சபையினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்ததனால் இப்போது அதை வாக்கெடுப்புக்கு விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. ‘தேர்தலை ‘ நடத்திவைக்குமாறு பதவி விலகும் தலைலர் சேனாதிராஜாவும் புதிய தலைவர் சிறிதரனும் சுமந்திரனைக் கேட்டு்க்கொண்டனர்.

பட்டியலை ஆதரிக்கிறார்களா அல்லது எதிர்க்கிறார்களா என்பதை பொதுச்சபை உறுப்பினர்கள் தங்கள் கைகளை உயர்த்தி வாக்களிப்பதன் மூலம் தெரிவிக்கலாம் என்று சுமந்திரன் கேட்டுக்கொண்டார். ‘ஆம் ‘ என்ற வாக்குகளும் ‘ இல்லை ‘ என்ற வாக்குகளும் வரிசை வரிசையாக எண்ணப்பட்டன. சுமந்திரன் கைகளை எண்ணிக்கொண்டிருந்தபோது சிறிதரனின் உறுதியான ஆதரவாளரான நாவலனும் தனியாக கணக்கெடுத்தார். இருவரதும் எண்ணிக்கைகள் ஒன்றாகவே இருந்தன.

சண்முகம் குகதாசன்

செயலாளர் சண்முகம் குகதாசன் உட்பட நிருவாகிகள் பட்டியலுக்கு ஆதரவாக 112 வாக்குகளும் எதிராக 104 வாக்குகளும் கிடைத்தன. அதன் மூலமாக தமிழரசு கட்சியின் புதிய செயலாளர் குகதாசன் என்பது உறுதிசெய்யப்பட்டது. அதையடுத்து கூட்டம் முடிவுக்கு வந்தது. தமிழரசு கட்சியின் மகாநாடு மறுநாள் நடக்கவிருந்தது. புதிய தலைவரும் செயலாளரும் நிருவாகிகளும் பொதுமக்கள் முன்னிலையில் வைபவரீதியாக பதவிகளை ஏற்றுக்கொள்ளவிருந்தனர்.

தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் கலைந்து சென்றுகொண்டிருக்கையில், பொதுச்சபை உறுப்பினர்களில் ஒரு குழுவினர் மாவை சேனாதிராஜாவை அணுகி குகதாசனை செயலாளராக தங்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறினர். புதிய தேர்தல் ஒன்று நடத்தப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்த அவர்கள் ஜனவரி 28 கட்சியின் மகாநாடு நடத்தப்படக்கூடாது என்று வலியுறுத்தினர்.

சேனாதிராஜா அப்போது “விசித்திரமான ” முறையில் நடந்துகொண்டார். புதிய தலைவர் சிறிதரனைக் கலந்தாலோசிக்காமல் முன்னாள் தலைவர் மாவை அடுத்த நாள் நடைபெறவிருந்த மகாநாடு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார். செயலாளர் பதவி தொடர்பில் தகராறு ஒன்று இருப்பதால் புதிய தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்றும் அதற்குப் பிறகு மாத்திரமே மகாநாடு நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

இன்னமும் கூட தானே கட்சியின் தலைவர் என்ற மாயையில் மாவை இருக்கிறார் போன்று தெரிந்தது. மாகாநாட்டில் மாத்திரமே சிறிதரன் உத்தியோகபூர்வமாக பதவியேற்பார் என்று மாவை நினைத்தார் போன்று தோன்றியது. அதனால் மகாநாட்டை ஒத்திவைத்ததன் மூலம் அவர் தனது தலைவர் பதவிக்காலம் மேலும் நீடிக்கப்படுவதாக நினைத்தார்.

சிறிதரனும் சுமந்திரனும் மாவையின் வீடுதேடிச் சென்று மூச்சில் குத்தினர்

சிறிதரனும் சுமந்திரனும் ஜனவரி 28 சேனாதிராஜாவை சந்தித்தனர். தமிழரசு கட்சியின் யாப்பின் பிரகாரம் உண்மை நிலைவரம் என்ன என்பதை ஜனாதிபதி சட்டத்தரணியான சுமந்திரன் அந்த சந்திப்பில் சேனாதிராஜாவுக்கு தெரியப்படுத்தினார். ஜனவரி 27 மத்திய செயற்குழு கூட்டத்துக்கு பிறகு சேனாதிராஜா தலைவர் பதவியில் இல்லாமற்போய்விட்டார் என்று சுமந்திரன் சுட்டாக்காட்டினார். மகாநாடு நடத்தப்படுமோ இல்லையோ சிறிதரன் தான் இப்போது கட்சியின் தலைவர். அதனால் சேனாதிராஜாவினால் ஒருதலைப்பட்சமாக மகாநாடு ஒத்திவைக்கப்பட்டது செல்லுபடியாகாது.

பொதுச் செயலாளராக குகதாசனின் தெரிவும் சட்டத்தில் செல்லுபடியாகும் என்றும் சுமந்திரன் வலியுறுத்திக்கூறினார். மத்திய செயற்குழு அதை ஏகமனதாக அங்கீகரித்திருந்தது. பொதுச்சபையும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டது. பிறகு வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது ஆதரவாக 112 வாக்குகளும் எதிராக 104 வாக்குகளும் கிடைத்தன. அதனால், புதிய செயலாளரைத் தெரிவுசெய்யவேண்டியிருக்கிறது என்ற சாக்குப்போக்கில் மகாநாட்டை சேனாதிராஜா ஒத்திவைத்தது சரியானதல்ல.

சுமந்திரனின் விளக்கத்தை சேனாதிராஜா ஏற்றுக்கொள்ளவில்லை. தானே இன்னமும் கட்சியின் தலைவர் என்ற நிலைப்பாட்டை அவர் எடுத்தார். தனது மகனின் திருமணத்துக்காக சிங்கப்பூர் செல்வதாகவும் பெப்ரவரி 10 ஆம் திகதியே நாடு திரும்பவிருப்பதாகவும் அவர் கூறினார். நாடு திரும்பியதும் பொதுச்சபையைக் கூட்டி பிரச்சினையைத் தீர்ப்பதாக அவர் கூறியது சிறிதரனுக்கும் ஏற்புடையதாக இருந்தது. சிறீநேசனை ஆதரிக்கும் தனது ஆதரவாளர்களின் நெருக்குதலின் கீழ் சிறிதரன் இருந்தார்.

சேனாதிராஜாவின் யோசனை தமிழரசு கட்சியின் யாப்புக்கு முரணானது என்று சுமந்திரன் அப்போது கூறினார். அதற்கு சேனாதிராஜா ” கட்சியின் யாப்பின் பிரகாரம் எல்லாவேளையிலும் நடக்கவேண்டும் என்றில்லை” என்று பதிலளித்தார். கட்சியின் யாப்பை மீறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் அதனால் சட்டரீதியான விளைவுகள் ஏற்படலாம் என்றும் சுமந்திரன் கூறிவைத்தார். வார்த்தைகளில் கூறாமல் சிறிதரன் குறிப்பால் உணர்த்திய ஆதரவுடன் மாவை சுமந்திரனின் ஆலோசனையை அலட்சியம் செய்துவிட்டு சிங்கப்பூருக்கு பறந்துவிட்டார்.

சட்டரீதியான நிலைப்பாடு

அதைத் தொடர்ந்து தமிழரசு கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் பற்றிய சட்டரீதியான நிலைப்பாட்டை விளக்கி சுமந்திரன் சிறிதரனுக்கு விரிவான கடிதம் ஒன்றை எழுதினார். சிறிதரனே தற்போது தலைவர் என்றும் சாத்தியமானளவு விரைவாக அவர் வைபவரீதியாகப் பதவியை ஏற்கவேண்டும் என்றும் சுமந்திரன் கடிதத்தில் வலியுறுத்தினார். கடிதம் ஊடகங்களுக்கும் வெளியிடப்பட்டது. தமிழன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர். சிவராஜாவுக்கு சுமந்திரன் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றையும் வழங்கினார். ‘நெற்றிக்கண்’ அலைவரிசையில் ஔிபரப்பான அந்த நேர்காணலில் அவர் தமிழரசு கட்சியின் சர்ச்சைக்குரிய விவகாரங்கள் தொடர்பில் சட்டரீதியான நிலைப்பாட்டை மிகவும் விரிவாக விளக்கினார்.

அடிப்படை தமிழ் மொழியறிவும் கொஞ்சமேனும் பொது அறிவும் இருக்கும் எவரும் சுமந்திரனின் கடிதத்தையும் வாசித்து தொலைக்காட்சி நேர்காணலையும் பார்த்தால் தமிழரசு கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் தெரிவு தொடர்பிலான நற்போதைய சட்ட அடிப்படையிலான நிலைப்பாட்டை எளிதாக விளங்கிக்கொள்ளமுடியும். ஆனால் மாவை அநாவசியமாக பிரச்சினையைத் தேடிக்கொண்டார் போன்று தெரிகிறது. செயலாளர் பதவி தொடர்பிலான தகராறு நீண்ட ஒரு காலத்துக்கு தானே தலைவர் பதவியில் தொடருவதற்கு வாய்ப்பாக அமையும் என்ற மருட்சியில் அவர் இருக்கிறார். சாத்தியமானளவு காலத்துக்கு கட்சியின் அதிகாரத்தை தன்வசம் வைத்திருப்பதில் மாவைக்கு இருக்கும் பேராசையை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது அவரது நடத்தை கண்டிக்கத்தக்கது என்றாலும் விளங்கிக் கொள்ளக்கூடியதே.

ஒருதலைப்பட்சமான தனது நடவடிக்கையின் விளைவாக ஏற்படக்கூடிய சட்டரீதியான விளைவுகளை சேனாதிராஜா புரிந்துகொள்ளவில்லை. சட்டரீதியான தலைவராக இல்லாதபோது தமிழரசு கட்சியின் தலைவரின் அதிகாரங்களையும் கடமைப் பொறுப்புக்களையும் கையகப்படுத்துவது சாதாரண விடயம் அல்ல. தமிழரசு கட்சியின் யாப்பை மீறுவதற்கு தயாராயிருப்பது போன்று பேசுவது மேலும் மோசமானதாகும்.

இந்த கட்டத்தில் பெரிதாக ஊகங்களைச் செய்யவேண்டியதில்லை, ஆனால் விவகாரம் நீதிமன்றத்துக்குப் போனால் சேனாதிராஜா பெரும்்ஆபத்தில் சிக்கிக்கொள்ளக்கூடும். மகாநாட்டை திடீரென்று ஒத்திவைத்ததன் விளைவாக ஏற்கெனவே கட்சிக்கு பெரும் பணவிரயம் ஏற்பட்டிருக்கிறது. அதிகாரம் இல்லாமல் மகாநாட்டை சட்டவிரோதமாக ஒத்திவைத்ததன் மூலம் ஏற்பட்ட இழப்புக்களை பொறுப்பேற்கவேண்டிய நிலைக்கு மாவை தள்ளப்படலாம். மேலும் தலைவர் தெரிவு உட்பட கட்சியின் தேர்தல் முழுவதுமே செல்லுபடியற்றது என்று பிரகடனம் செய்யப்படக்கூடும். அவ்வாறு நேர்ந்தால் அதற்கு மாவையே பிரதான காரணம்.

ஜனவரி 21 கட்சி தலைவர் தேர்தல் நடைபெற்றபோது சேனாதிராஜாவே தலைவராக இருந்தார். மத்திய செயற்குழுவுக்கு மேலும் 18 உறுப்பினர்களை நியமிப்பதற்கு அவர் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தார். அது கட்சியின் யாப்புக்கு எதிரானது. ஆனால் கட்சி யாப்பின் விதிமுறைகளை பின்பற்றுவதில் நம்பிக்கை இல்லாத சேனாதிராஜா அந்த நியமனங்களை தன்னெண்ணப்படி அடாத்தாகச் செய்தார்.

மகன் கலையமுதன்

மத்திய செயற்குழுவுக்கு சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டவர்களில் சேனாதிராஜாவின் மகன் கலையமுதனும் அவரது மாமியார் சசிகலா ரவிராஜும் அடங்குவர். சசிகலா கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் மனைவியாவார். அவர்களின் மகள் பிரவீனாவையே கலையமுதன் மணம் முடித்திருக்கிறார்.

இரு முன்னாள் யாழ்ப்பாண மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களின் மகனுக்கும் மகளுக்கும் இடையிலான பந்தம் குடும்பத்தாருக்கு ஆதரவும் சலுைகையும் அளிப்பதாக மாவைக்கு எதிராக குற்றச்சாட்டு கிளம்புவதற்கு வழிவகுத்திருக்கிறது. புதிய ஒரு அரசியல் வம்சத்தை உருவாக்கும் ஒரு முயற்சியாக சேனாதிராஜா தனது மகனை அரசியலில் ஊக்குவிக்கிறார் என்று அவருக்கு எதிரானவர்கள் ஏற்கெனவே குற்றஞ்சாட்டியிருக்கிறார்கள். வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் உறுப்பினராக கலையமுதன் தெரிவுசெய்யப்பட்டார். அந்த பிரதேச சபையின் தலைவராக அவரைத் தெரிவு செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியும் தமிழரசு கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவராக கலையமுதனை கொண்டுவருவதற்கான இன்னொரு முயற்சியும் முறியடிக்கப்பட்டன. சேனாதிராஜாவும் சசிகலாவும் 2020 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடனர் எனினும் வெற்றிபெறவில்லை. கலையமுதன் வலிகாமம் வடக்கில் வீதியொன்றுக்கு தனது பெயரைச் சூட்டவைத்திருக்கிறார் என்பதும் கவனிக்கத்தக்கது.

அரசியலில் சேனாதிராஜாவின் சுயநலச் செயல்களுக்கு பல சம்பவங்களைக் கூறமுடியும். 2020 பாராளுமன்ற தேர்தலில் உதயன் பத்திரிகை உரிமையாளர் சரவணபவனுடன் அணிசேர்ந்துகொண்டு தமிழரசு கட்சியின் சகபாடி வேட்பாளர்களுக்கு எதிராக வேலை செய்தது அவற்றில் ஒன்று. ஏனைய தமிழ்க்கட்சிகளுடன் சேர்ந்துகொண்டு தனது சொந்த தமிழரசு கட்சியின் நலன்களுக்கு எதிராக சேனாதிராஜா அடிக்கடி துரோகத்தனமாகச் செயற்பட்டிருக்கிறார். இன்பதுன்பம் கலந்த நீண்டகால அரசியல் வாழ்வொன்றில் சேனாதிராஜாவுக்கு நிலையான நண்பர்களோ அல்லது எதிரிகளோ இல்லை. ஆனால், ஒரு சுயநலத்துடன் கூடிய நிலையான நலன்கள் இருக்கின்றன.

மாவையின் கடந்த காலம்

தமிழரசு கட்சியில் மாவை சேனாதிராஜாவின் கடந்தகாலத்தை இரு பகுதிகளாக பிரிக்கலாம். முதலாவது பகுதி அவரின் வாழ்வின் தொடக்ககாலத்துடன் தொடர்புடையது. இளைஞனாக பல போராட்டங்களில் பங்கேற்று அரசியல் காரணங்களுக்காக சிறைசென்ற அவர் கணிசமான தியாகங்களைச் செய்திருக்கிறார். இந்தியாவில் சுய அஞ்ஞாதவாசம் செய்த காலப்பகுதி பல்வேறு வழிகளில் கடுமையான இடர்பாடுகள் நிறைந்ததாக இருந்தது. அதை நான் நேரடியாக கண்டேன்.

அவரது வாழ்வின் இரண்டாவது பகுதி வித்தியாசமானது. இந்த பகுதியில் சேனாதிராஜா பழைய காலத்து இலட்சியவாதியாக நடந்துகொள்ளவில்லை. அரசியலில் உயர்மட்டத்தில் இருப்பதற்காக எதையும் செய்யத் தயாராயிருக்கும் ஒரு சுயநல அரசியல்வாதியாக மாறினார். அமிர்தலிங்கம் கொலைசெய்யப்பட்தை அடுத்து தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தனக்கு தரவேண்டும் என்று கோரியது தொடக்கம் 2020 தேர்தல் தோல்விக்கு பிறகு தேசியப்பட்டியல் உறுப்பினராக வருவதற்கு அருவருக்கத்தக்க முறையில் மேற்கொண்ட முயற்சி வரை அரசியல் பதவியைப் பெறவதில் தனக்கு இருக்கும் சுயநல வேட்கையை சேனாதிராஜா வெளிக்காட்டினார்.

அவர் இவ்வாறு நடந்துகொள்வதற்கு கட்சியும் கட்சி உறுப்பினர்களும் ஏன் இடங்கொடுத்தார்கள் என்ற கேள்வி எழுகிறது. பொறுத்துக் கொள்ளமுடியாத சுயநலத்தை ஏன் அவர்கள் பொறுத்துக் கொண்டார்கள்? அதற்கு பதில் சேனாதிராஜாவின் கடந்த காலமே. தியாகங்கள் நிறைந்த அவரின் இளமைக்காலப் போராட்ட வாழ்வை நினைவில் வைத்திருப்பவர்கள் அவரை கண்டிக்கவோ விமர்சனம் செய்யவோ தயங்குகிறார்கள். தற்போது அவர் எவ்வாறு நடந்துகொண்டாலும் அதைப் பொருட்படுத்தாமல் கடந்த காலத்தைப் பற்றியே நினைக்கும் அவர்கள் தொடர்ந்தும் அவர் மீது அனுதாபம் காட்டுகிறார்கள். இந்த கட்டுரையாளரும் பொறுத்துக்கொள்ள முடியாத நிலை வரும்வரை ” சேனாதி அண்ணை ” மீது அன்புகொண்டிருந்தவர்களில் ஒருவரே!

Read more...

Tuesday, May 9, 2023

“மாய”க் கதையாடல் கண்ணன். கற்சுறா

உண்மையில் இந்தப் பக்கத்தினை எழுதத் தொடங்கு முன் நான் நீண்ட பெரும் மூச்சுக்களை விடவேண்டியதாக இருந்தது. இடையிடையே சிரிப்புத் தோன்றினாலும் எழுதத் தொடங்கும் வரை மண்டை கனத்தது. விறைத்தது. இதனை எழுதுவதற்காக நான் நமது யுத்தகாலத்தில் சேகரித்து வைத்த கட்டுரைகளில் சிலவற்றை வாசிக்க முனைந்தேன். அதனால் ஏற்பட்ட உடல் உள மாற்றமே இது.

கடந்த ”ஈழப் போராட்ட காலம்” என்று அடையாளம் கொண்ட காலம் முழுவதும் நம்மிடையே இருந்த ஒவ்வொரு தற்குறிகளும் தமக்குச் சார்பாகக் கதை சொல்லிக் கதை சொல்லி வந்ததில் நம் அனைவரிடமும் ஏராளம் ஏராளம் கதைகளுள்ளது. நீங்களும் அறிந்த கதைகளை எழுதுங்கள்.

இவ்வாறான தற்குறிகள் சொன்ன கதைகளையே ஒவ்வொரு யுத்தவெறியர்களும் தமது பத்திரிகைகளில் அவற்றை முதன்மைப்படுத்தி வெளியிட்டார்கள். இந்தத் தற்குறிகளும் அவர்களிடம் இருந்து கிடைக்கும் “முதன்மை”க்காகவும் பணத்திற்காகவும் எந்தப் பித்தலாட்டக் கதைகளையும் ஆய்வின் பெயரில் அறுதியிடத் தொடங்கினார்கள். அதுதான் காலாகாலமும் ஈழத்தில் நடந்தது. இன்றுவரை நடக்கிறது.

இவ்வாறு நமக்கிடையே இருந்த தற்குறி கலைஞர்களும் ஆய்வாளர்களும் சனத்தின் மீது மயக்கச் சொற்களால் வீசி எறிந்த நஞ்சினைப் பிரித்து அடையாளம் காட்டப் பெருங்காலம் தேவை. நமக்குக்கிடைத்த அலைவுக்காலம் அவற்றை முழுமையாகப் பத்திரப்படுத்தி பாதுகாத்து வைக்க விடவில்லை. கிடைத்த தரவுகளையும் பல்வேறு இடங்களில் கைவிட்டுக் கைவிட்டு போகத்தான் நேர்ந்தது.

ஒரு பொது நோக்காகவேனும் நம் வாழ்காலத்தைப் பதிவிடும் நோக்கத்தோடு யாருமே எதையும் சேகரித்து வைக்கவும் இல்லை. ஒவ்வொருவரும் தமக்கு எதிரானதைத் தெருவில் போட்டு நெருப்பிட்டுக் கொழுத்திவிடும் மனநிலை கொண்டவர்களாகவே வாழப் பழக்கப்பட்டிருந்தார்கள். நமது சமூகத்தில் கிடைத்த இடங்களிலெல்லாம் அழிக்கப்பட்ட ஆவணங்கள் அளவற்றவை. சமூகத்தில் தமது நிலை குலைந்த பொழுது தமது ஆவணங்களைத் தாமே அழித்துவிடும் தற்கொலை மனம் கொண்ட சமூகமாக நமது சமூகம் வழிநடத்தப்பட்டதும் இதற்கு ஒரு முதன்மைக் காரணம்.

ஈழத் தெருக்களில் இன்று வாழும், குழந்தைகளைப் பறிகொடுத்த தாய்களும் தந்தைகளும் மட்டுமன்றிப் அந்தப் பெற்றோரைப் பறிகொடுத்த குழந்தைகளும் ஒரு வாய்ச் சோற்றைக் கண்ணீரோடு சேர்த்து உண்ணவைத்த கொடூர நிலைக்குக் கொண்டு வந்து விட்டவர்களில் பெரும் பங்கைச் சுமக்க வேண்டியவர்கள் நமது எழுத்தாளப் பெருந்தகைகள். இவர்கள் காட்டிய அம்புக்குறிகள்தான் பலரது கண்ணீருக்குக் காரணமாகியது.


இந்தக் காரணங்களை நான் தொடர்ந்து அடையாளம் காட்டி எழுதிவருகிறேன். இங்கே எழுதுவதில், இந்தக் கட்டுரையில், நாம் கவிஞர் என்றும் ஆய்வாளர் என்றும் அதற்கும் மேலாய் அன்புடன் “நிலா” என்றும் அழைக்கும் நிலாந்தன் அவர்களது எழுத்துக்கள் குறித்தே நான் அடையாளம் காட்டுகிறேன்.

வெறுமனே குலைத்துக் கலைத்து வரும் நாயிற்கு நின்று ஒரு கல்லை எடுத்து எறிவதினூடாக நாயைக் கண்டு பயந்து ஓடிக்கொண்டிருக்கும் ஒரு கூட்டத்தைத் தடுத்து நிறுத்திவிடலாம் என்று தோன்றும் போது, எறிய வேண்டிய கல் இது. அதை எழுத வேண்டிய சொல் என்று நினைத்துத் தான் நிலாந்தன் குறித்து எழுதுகிறேன்.

“கடலம்மா… நீயே சொல்
குமுதினி ஏன் பிந்தி வந்தாள்?
எம்மவரின் அவலங்களைச்
சடலங்களாய்ச் சுமந்துகொண்டு
‘குமுதினி’ குருதி வடிய வந்தாள்.”


என்று நெடுந்தீவுக் கடலைப்பற்றி எழுதுவதினூடாக குமுதினிப் படுகொலையைப் பற்றி எழுதிய ஆரம்பகால நிலாந்தன் கடைசியில் நந்திக்கடலைப்பற்றி எழுதிக் கஞ்சிப்பாடலாய் முள்ளிவாய்க்கால் படுகொலைகளை எழுதியிருந்ததை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.

“இதையருந்துங்கள்
பாலற்றது
பசியாற்றாது
உலைகொதிக்காக்
காலமொன்றின்
பசியிது தாகமுமிது.

பாலற்ற கடற்கரையில்
பசித்திருந்தாய் நாடே
இதையருந்து.”


…. என்றெழுதி முடிவில்

“உலகமே அவர்களைக் கைவிட்டது
உதவிக்கு யாரும் வராத
ஒரு யுக முடிவில்”
பல தலைமுறைகளுக்காகச்
சிந்தப்பட்ட
கடைசித்துளி
ரத்தமிது.”


என்று சொல்லிப் போகிறார்.

இவ்வாறு உசுப்பேத்தி எல்லாம் எழுதி முடித்து அனைத்திற்கும் மொத்தமாய்ப் பாடை கட்டிவிட்டு கடைசியில் “உதவிக்கு யாரும் வராத யுகம் முடிவில் உலகமே அவர்களைக் கைவிட்டது” என்று அவர் எழுதும் கழிவிரக்கக் கவிதையில் எனக்கு எள்ளளவும் நாட்டமில்லை. யுத்த முடிவின் பின் பேசும் நிலாந்தனின் எந்தக் கருத்துக்கள் குறித்தும் எனக்குப் பெரிதும் கரிசனையில்லை. பெரிதும் கரிசனையில்லை என்று சொல்வதை விடக் கரிசனையே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அது தாம் கடந்து மிதந்து வந்த களிசடைத் தனத்தை கடலிலேயே கழுவித் தொலைக்க எடுக்கும் எத்தனங்கள். அவரவர் தாம் பட்டிருந்த பாடுகளின் படி கடக்க முனையும் வேளை, நிலாந்தனுக்கு அதுவும்கூட முடியாதிருக்கிறது. ஏனெனில் அவர் எழுதிக் கொண்டிருக்கும் இன்றைய அவலக் கதைகளுக்கும் அந்தக் கதைகளின் பின்னிருக்கும் கஞ்சிக் கதைகளுக்கும் அவரது எழுத்துக்களும் காரணமாக இருந்த கதையை நீங்கள் யாருமே கவனியாது போகலாம். நாளைய வரலாறு அதனைக் கவனியாது விட்டுப் போகவே போகாது. அவரை மன்னித்துப் போகவே போகாது. அந்தச் சனத்தின் அழுகையும் கண்ணீரும் அவர்கையினை நனைத்துச் செல்வதனை அன்றாடம் அவர் அறிந்து கொண்டுதான் இருக்கிறார். அதன் பிறகும் அவர் அறியவில்லை என்றே சொல்வாராயின் அவர் மானிடரே அல்ல.

ஜோர்ஜ் குருசேவ் அவர்கள் அடிக்கடி சொல்லும் வார்த்தை, “முட்டாள்த் தனத்திற்குப் புத்திசாலித்தனமான விளக்கம் கொடுப்பவர்கள்” என்பது. அந்த வார்த்தைக்குரிய சிறப்பான அடையாளங்களில் ஒருவர்தான் நிலாந்தன். இவரைப் போல் நம்மிடையே பலர் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி வருங்காலங்களில் கணக்கிடலாம்.

தாங்கள் பிடித்திருந்த பொய்யின் அழுங்குப்பிடித் தனத்திலிருந்து பொய்யுறை கழன்ற போது கையை அவர்களால் வெளிப்படையாகக் கைவிடவோ, பிடியிலிருந்து உதறிவிடவோ அவர்களால் முடியாதிருக்கிறது. அப்படித்தான் இருக்கும். அவர்கள் பற்றியிருந்த பிடி அப்படியானது. அவர்கள் கடந்த காலம் முழுவதும் யாருக்குக் கதை சொல்லிக் கொண்டிருந்தார்களோ அவர்களால் திடீரெனத் தாங்கள் கைவிடப்பட்டுவிடுவோம் என நிலாந்தன் போன்றவர்கள் அஞ்சுவதாலேயே இன்றுகூட உண்மையைப் பேச நினைப்பதில்லை.

நிலாந்தனுக்கு போராட்டம் என்ற பெயரில் நடைபெற்ற அனைத்து விடயங்களைப் பற்றியான முழு உண்மைகளும் எப்பொழுதும் நன்கு தெரியும். நிலாந்தனுக்கு மட்டுமல்ல நிலாந்தன் போன்றவர்களுக்கும் நன்கு தெரியும். அவற்றை அறியாதிருக்க அவர்கள் முட்டாள்களல்ல. அறிந்தும் முட்டாள்கள் போல நடிப்பவர்கள். தமது இருப்பிற்கும் வாழ்விற்குமாக அவர்கள் பொய்சொல்லத் தொடங்குகிறார்கள். இந்தப் பொய் ஒரு இனத்தின் எதிர்காலத்தைச் சூனியமாக்கிவிடும் என்ற எந்த அறிவும் அவர்களை ஒருபொழுதிலும் இடையூறு செய்வதில்லை என்பதுதான் மிக மிக ஆபத்தானது.

ஒரு முதலாளி உணவுக்குள் கல்லையும் மண்ணையும் நஞ்சையும் கலப்பதினூடாக ஒரு சமூகத்தில் ஏற்படும் அவலத்தைக் கணக்கிடாது எவ்வாறு தன்னுடைய இலாபத்தை மட்டும் கணக்கிடத் துடிக்கிறானோ அந்த முதலாளி என்பவனுக்கும் நிலாந்தன் போன்ற ஆய்வாளர்களுக்கும் செய்யும் அயோக்கியத் தனத்தில் ஒருவித வேறுபாடும் இல்லை.

ரொரண்டோவில் ஒரு நிகழ்வில் நிலாந்தன் அவர்கள் உரையாற்றிக் கொண்டிருக்கும் பொழுது சபையைப் பார்த்து “உங்கள் அனைவரிடமும் பல்வேறு கதைகள் இருக்கும். உங்கள் உறவுகள் குறித்த கதைகள் இருக்கும். அப்படியான கதைகளை நீங்கள் அனைவரும் பதிவு செய்ய வேண்டும். அப்பொழுது தான் நம் வாழ்வு முழுதாகப் பதிவு செய்யப்படும்.” என்பதாகப் பேசிக் கொண்டிருந்தார். நிகழ்வின் முடிவில், உரையாடல் நேரத்தில், அவரை நோக்கி, எல்லாம் சரி நிலாந்தன், உங்களுக்குத் தெரிந்த உண்மைகளை நீங்கள் எப்போது வெளியில் சொல்லப் போகிறீர்கள்? என்று கேட்டேன்.

அதற்கு அவர், தான் தனக்குத் தெரிந்த உண்மைகளைக் கோழி முட்டையை அடை காப்பது போல் காத்து வருகிறேன். சந்தர்ப்பம் வரும் போது அது உயிராகும் என்றார். நிலாந்தனுடைய இந்தச் சுத்துமாத்துப் பேச்சுத்தான் பலருக்கு அவரின் உண்மையான முகத்தைக் கண்டடையத் தடையாக இருப்பது. அறிவார்ந்துதானே பேசுகிறார் என்பதைப் போல் பாவனையிடும் அவரைக் கண்டு கொள்ள, சாதராண “தமிழ்த் தேசிய மனநிலை”யிலுள்ள தமிழ் வெறிகொண்டலையும் மனநோயாளர்களுக்கு எந்தச் சந்தர்ப்பங்களும் கிடைக்கப் போதில்லை.

இன்றைய சூழலில் ஒருவித உணர்ச்சி கொந்தளிக்க எழுதிவரும் அவரைப் புதிய காசியானந்தனாக நாம் உருவகப்படுத்திவிட அதிக சந்தர்ப்பங்கள் உண்டு. அவ்வாறான நிலையில் தான் அவரது இருப்பு இன்றும் தமிழ்த்தேசிய மனநோயாளிகளுக்குள் நிலைத்து நிற்கிறது. ஆனால் பல இடங்களில் அந்த எழுத்துக்கள் உணர்ச்சிக் கொந்தளிப்பை உருவாக்கும் நிலையையும் தாண்டி சமூகத்தைச் சீரழிக்கக் காரணமாய் இருந்திருக்கின்றன.

அவர் புலம்பெயர் தமிழர்களுக்காக புலம்பெயர் புலிகளது ஊடகங்களில் பதிவு செய்த சில பதிவுகளை ஊடறுத்துக் காட்டுவதினூடாக அவற்றைப் புரியவைக்க முடியும் என்றே நினைக்கிறேன்.

2003 யூன் 6ந்திகதி வெளியான ரொரண்டோ “உலகத்தமிழர்” பத்திரிகையில் “ரணில் விக்கிரமசிங்க நழுவத் தொடங்கிவிட்டாரா” என்ற கட்டுரை வெளியாகியிருந்தது. அதில்

சமாதானத் தூதுவர்களில் ஒருவரும் வன்னிக்கு வந்து சென்றவருமான கெல்ஹெசன் அவர்களிடம் “புலிகளின் நிலைப்பாட்டை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? என்று கேட்டபோது, நான் யாரையும் ஆதரிக்கவில்லை… யாரையும் எதிர்க்கவும் இல்லை. நான் இப்பொழுதும் நம்பிக்கையுடனேயே இருக்கிறேன். என்று செகஸ்லோவாக்கிய ஜனாதிபதியின் கூற்றைச் சொல்லி அடையாளம் காட்டியதை எழுதுகிறார்.

ரோக்கியோ மாநாட்டில் புலிகளை அழைக்காத ரணில் அரசினை விமர்சித்து எழுதிய கட்டுரை அது.

அதில் “கெல்ஹெசன் இப்பொழுது நம்பிக்கையோடுதான் இருக்கிறாரோ இல்லையோ தொயிவில்லை. ஆனால் புலிகள் பங்குபற்றாத ரோக்கியோ மாநாடு நம்பிக்கைகளைச் சோரச் செய்வது மட்டுமல்ல, இனி அடுத்தது யுத்தமா என்ற பயங்கலந்த ஊகங்களையும் தூண்டுவதாய் உள்ளது.” என்கிறார்.

“அத்தோடு மீண்டும் பகிரங்கமாக ஆட்சேர்ப்பில் இறங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு எதையோ கூராகவும் தெளிவாகவும் கூற விரும்புவது போலத் தெரிகறது. ஆயின் அடுத்தது என்ன?” என்று எழுதுகிறார்.

இதே காலத்தின் முன் கிடைத்த சமாதான காலமெல்லாம் புலிகள் கட்டாய ஆட்சேர்ப்புச் செய்த எந்தக் கதையையும் குறித்து அவர் மவுனமாக இருப்பதுவும், அதன்பின் தொடங்கப்பட இருக்கும் யுத்தத்திற்கு புலிகளின் பக்கமிருந்து நியாயம் தெண்டுவதைத் தவிர இந்த எழுத்தில் வேறு எதனை அறிவுபூர்வமாக நாம் பெற்றுக் கொள்ள முடியும்?

“சமாதானத்துக்காக அவர்(ரணில்) தியாகம் செய்யாது விட்டால் தொடங்கப்பட இருக்கும் யுத்தத்தில் அரசு தனது சிப்பாய்களைத் தியாகம் செய்ய வேண்டிவரும் என்கிறார்”. இந்தக் காலங்களில் எதிர்கொள்ள இருக்கும் யுத்ததிற்காக கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபடும் புலிகளுக்கான கருணை மனுவே இதுவல்லாது நிலாந்தனுக்கிருந்த எவ்வித புத்திசாலித்தனமான எழுத்துமல்ல இது. தமிழ்த்தேசிய மனநோயாளிகளை முன்நிறுத்தி ஒரு இனத்தை குழிதோண்டிப் புதைத்த தற்குறித்தன எழுத்தே அவருடையதாகத் தொடருகிறது.

“புலம்பெயர் தமிழர்களுக்கு உள்ள பொறுப்பு” என்று ஒரு கட்டுரை இதனை.26 மே 2006இல் எழுதுகிறார். அதில்

”புலம்பெயர்ந்த தமிழர்கள் அந்தந்த நாடுகளில் பலமான ஒரு நிதித்தள வலையமைப்பையும் புலனாய்வுக் கட்டமைப்பையும் கொண்டிருக்கிறார்கள். இனமான உணர்வுகள் மற்றும் தாய் நிலத்தைப் பிரிந்திருப்பதான சோகம், குற்ற உணர்ச்சி, போன்றவற்றின் மீது கட்டியெழுப்பப்பட்ட நன்கு நிறுவனமயப்பட்ட கட்டமைப்புக்களையும் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவை யாவும் புலம்பெயர்ந்த சமூகத்திற்குள்ளேயே நிகழ்ந்த வளர்ச்சிகள்தான். பதிலாக அந்த சமூகத்திற்கு வெளியே தமிழருக்கும் வெள்ளைக்காரர்கள் மற்றும் தமிழர்கள் அல்லாத சமூகங்களிற்கும் இடையிலான உறவைப் பொறுத்தவரை திருப்திப்படும் அளவிற்கு நிலைமையில்லை. அந்தந்த நாடுகளில் உள்ள அபிப்பிராயத்தை உருவாக்கவும் பரப்பவும் வல்ல சக்திமிக்க தனிநபர்கள், நிறுவனங்கள், ஊடகங்கள் போன்றவற்றுடனான ராஜ்ஜிய மற்றும் புலமைசார் தொழல்சார் உறவுகளை புலம்பெயர்ந்த தமிழர்கள் கட்டியெழுப்பத் தவறிவிட்டார்கள். அங்குபோய் குட்டி அரியாலை குட்டி யாழ்ப்பாணங்களை உருவாக்கியதில் காட்டிய அக்கறையை தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான ராஜதந்திரக் கட்டமைப்பை உருவாக்குவதில் காட்டத் தவறி விட்டார்கள்.”

என்று எழுதும் நிலாந்தன் தொடர்ந்து….

“அதே சமயம் சிறீலங்கா அரசாங்கத்தைப் பொறுத்தவரை அது மேற்சொன்ன வகையிலான ராஜ்ஜிய உறவுகளையே அதிகம் விருத்தி செய்து வைத்திருக்கிறது. மரபு ரீதியிலான அரசுக்கிடையிலான பாரம்பரிமான உறவுகளின் அடிப்படையிலும் கதிர்காமர் போன்றோரின் கடும் உழைப்பு, கெட்டித்தனம் காரணமாயும் இத்தகைய ராஜ்ய உறவுகள் மிகவும் நெருக்கமானவைகளாக க் காணப்படுகின்றன. அதாவது புலம்பெயர்ந்த தமிழர்கள் எங்கே வெற்றிடத்தை விட்டிருக்கிறார்களோ அங்கே அரசாங்கம் தன்னை நன்கு ஸ்தாபித்து வைத்திருக்கிறது. இதுதான் கனடிய மற்றும் ஐரோப்பிய யூனின் தடைகளுக்கான காரணம் என்கிறார்.

நிலாந்தன் எழுதிய இந்த எழுத்திற்குச் சில மாதங்களின் முன்னர் தான் புலிகளால் லக்ஸ்மன் கதிர்காமர் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆக, புலம்பெயர்ந்த தமிழர்களாகிய நீங்கள் கவனமற்று இருக்கும் சந்தர்ப்பங்களால் நாங்கள் கதிர்காமர் போன்றவர்களைச் சுட்டுக் கொல்ல வேண்டியிருக்கிறது என்று லக்ஸ்மன் கதிர்காமர் அவர்களது கொலைக்குப் புலிகளின் பக்கமிருந்து நியாயம் தெண்டுவதாகத்தானே இருக்கிறது இது. ஐரோப்பிய யூனியன் தடைக்கு கதிர்காமர் போன்றவர்களின் கெட்டித்தனமும் செயற்பாடுமே காரணம். ஆக அவரைக் கொல்வதே சரியானது என்ற கதையை நிலாந்தன் அறுதியிடுகிறார்.

அதிலும் கவிஞர் சேரனுடனான உரையாடலைத் தொட்டுச் செல்லும் நிலாந்தன் அவர்கள், “நாலிலொரு தமிழர் புலம்பெயர்ந்துள்ளார்கள்” என்று சேரன் சொன்னதாகச் சொல்லி

குறைந்தபட்சம் காற்பங்குத் தமிழ்ச் சனத்தொகை புலம்பெயர்ந்துள்ளது. அது ஏன் தடைகளைத் தடுத்து நிறுத்த முடியாதுள்ளது? என்று விடுதலைப் புலிகளது தடை நிகழ்ந்த விடயம் குறித்து ஆதங்கப்பட்டு எழுதுகிறார்.

“கனடாவில் ஏறக்குறைய மூன்று இலட்சம் தமிழர்கள் உண்டு. வன்னியில் ஏறக்குறைய மூன்று இலட்சத்திற்கும் குறையாத சனத்தொகை உண்டு. வன்னியில் உள்ள தமிழர்கள் உலகத்தின் மூக்குக்குள் விரலை வைத்து ஆட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதேயளவு தொகையுடைய கனேடியத் தமிழர்களால் தமது நாட்டில் புலிகள் இயக்கம் தடை செய்யப்படுவதைத் தடுக்க முடியாமற் போயிற்று.”

என்று கோபப்படுகிறார். இந்த முட்டாள் புலி ஆய்வாளனின் சிந்தனையைக் கொஞ்ச நேரம் இருந்து கூர்ந்து கவனியுங்கள். இந்த எழுத்திற்குள் அடங்கியிருக்கும் அயோக்கியத்தனம் குறித்து இன்று வரை நீங்கள் யாருமே கவனியாது செல்லும் தலைவிதி எது? வன்னியிலுள்ள முழுத் தமிழர்களையும் கனடாவிலுள்ள முழுத் தமிழர்களையும் தன்னைப்போல் புலிக்கு தொழில் செய்யத் துடித்துக் கொண்டிருப்பவர்கள் போல் அவர் கண்ணுக்குத் தொிவது ஒருவித மனநோயல்லாது வேறு என்னவாக இருக்கும்.

இன்னொரு இடத்தில் (2006 மே) “அவர்கள் விரும்பும் போரைப் புலிகள் தொடங்கப் போவதில்லை. என்பது இப்பொழுது தெளிவாகிவிட்டது. ஆனால் அதேசமயம் அவர்கள் எதிர்பார்க்க முடியாத அல்லது ஊகிக்க முடியாத யுத்தத்தைப் புலிகள் தொடங்கப் பார்கிறார்கள் என்பதையே கடந்த கிழமை நிகழ்ந்த தாக்குதல்கள் கோடிட்டுக் காட்டுகின்றன. கருணாவின் உடைவினால் வலுச்சமநிலை கொழும்புக்குச் சாதகமாக மாறியிருக்கிறதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கான ஒரு யுத்தகளம் இது. ஒரு புதிய வலுச்சமநிலையை உருவாக்கும் வரை அல்லது வலுச்சமநிலை தளம்பக் காரணமாக இருந்த சக்திகளின் வேகம் தீரும் வரை இது தொடரப் போகிறது. அல்லது குறைந்த பட்டசம் வலுச்சமநிலை என்பதைக் கண்டுபிடிக்கும் வரையாவது இது தொடரும்.”

என்று சொல்கிறார்.

இந்த நிலாந்தன் என்ற ஆய்வாளரின் சிந்தனை எதைக் குறித்து நிற்கிறது எனக் கவனியுங்கள். கருணா தலைமையில் விடுதலைப் புலிகளிலிருந்து பிரிந்து சென்ற கிழக்குப் போராளிகள் குறித்துக் கவனப்படுத்தும் வரிகள் இவை. வடக்குப் புலிகள், கருணாவின் கிழக்குப் படைபலத்தின் இழப்பினை பேரிழப்பாகக் கருதிக் கொண்டிருக்கும் காலத்தில் புலிகளுக்கு நெஞ்சுரம் கொடுக்கிறார். ஒரு யுத்தத்தைத் தொடங்கி எங்களுக்கு எந்த இழப்புமில்லை நாங்கள் வலுச்சமநிலை கொண்டவர்கள்தான் என்பதை நிரூபிப்பதற்காக கொடுமையான யுத்தத்தைத் தொடங்குவதற்கு நியாயம் கற்பிக்கிறார்.

இவரின் விருப்புக்களும் அந்த விருப்பத்தின் பின்னிருக்கும் நச்சு மனமும் மக்களின் வாழ்வு பற்றிய கரிசனையில் எழுவதல்ல. ஒரு கொடிய யுத்தம் தொடங்கப்பட்டால் மக்களது அன்றாட வாழ்வின் சீர்குலைவு, குழந்தைகளின் எதிர்காலம், என்று எதைப்பற்றியும் கவலை கொள்ளாது, தனியே புலிகளின் வலுச்சமநிலையைச் சோதிக்க அந்த யுத்தம் தொடங்கப்படவேண்டும் என்றே கணக்கிடுகிறார்.

ஆக, நிலாந்தன் என்ற கொடிய மனம் கொண்டலைந்த ஆய்வாளனைக் “கடலம்மா” என்று எழுதிய கவிதைக்காகப் பலர் கொண்டாடுகிறார்கள். அவரைக் “கவிஞன்” என்கிறார்கள். அந்த அரைக் கவிஞன் இறுதியில் கஞ்சிக் கவிதை எழுதுகிறார். “வன்னியில் உள்ளவர்கள் உலகத்தின் மூக்கிற்குள் விரலை விட்டு ஆட்டுகிறார்கள்” என்றெழுதிய சில காலத்திற்குள்ளேயே உலகமே எங்களைக் கைவிட்டுவிட்டது என்று கஞ்சிப் பாடல் எழுதுகிறார். சர்வதேசத்திற்குத் தங்கள் வலுவை எதுவென்று காட்ட சண்டை தொடங்குகிறது என்று எழுதிய இந்த நாசம் கெட்ட ஆய்வில் சனம் நாசமாய்ப் போனது பற்றி இன்று வரை எந்தக் கவலையுமில்லாது அவர்களை இன்னும் மொட்டையடித்துக் கழுவில் ஏற்றக் கதை விடுகிறார். இந்தக் கதைகளைத் தமிழ்த் தேசிய மனநோயாளிகள் இன்னும் காவியலைந்து எதிர்காலத்தை நாசம் செய்கிறார்கள்.

நிலாந்தன் என்ற “மாயக் கதையாடல் மன்னன்” அவர்கள் இந்தச் சனத்தை நாசம் செய்ய இதற்கு மேலும் என்னவெல்லாம் சொல்லியிருக்கிறார் என்று அடுத்த இதழில் பார்ப்போம். அதற்கிடையில் உங்கள் கஞ்சிப் பானையை அடுப்பில் ஏற்றி வைத்துவிட்டு அவரைக் கஞ்சிப்பாடல் பாட அழையுங்கள்.

இருக்கும் வரை உங்களை நாசம் செய்து விட்டுவிட்டுப் போக இன்னும் அவருக்குச் சில தேவைகள் இருக்கின்றன.

நன்றி
அபத்தம் மே, 2023



Read more...

Saturday, May 6, 2023

சபாலிங்கம் கொலை: உண்மையும் ஊகங்களும் புனைவுகளும். சுகன்

*"தமிழ் மாணவர் பேரவையின்" ஆரம்பகால உறுப்பினர் .
*ஈழப் போராட்டத்தின் முதற் குரலாக வெளிவந்த " காவலன் " பத்திரிகையின் ஆசிரியர்களில் ஒருவர் .
*தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் பங்கெடுத்ததன் காரணமாக சிறைக் கொடுமைகளை அனுபவித்தவர் .- அக் கொடுமைகளிலிருந்து தப்பிக்குமுகமாக சிறையின் மாடிக்கட்டிடத்திலிருந்து குதித்து முதுகெலும்பு உடைந்து தன் இறுதிவரை கூனல் முதுகோடு வாதைகளுடன் வாழ்ந்தவர்.
* பிரான்ஸிற்கு அரசியல் அகதியாக வந்து சேர்ந்த பின்னரும் சமூகப் பணிகளில் தன்னை இணைத்துக்கொண்டவர்.
* பிரான்ஸின் முதல் தமிழ் சஞ்சிகையின் தோற்றத்திற்கான முன்னோடி.
* தலைசிறந்த ஆவணச் சேகரிப்பாளர்.
* கொல்லப்படும்வரை மனித உரிமை மீறல்களுக்கெதிரான அமைப்புகளுடன் தொடர்புகளைப் பேணி மனித உரிமை மீறல்களுக்கெதிரான போராட்டத்தில் தன்னை தீவிரனாக இணைத்துக்கொண்டவர். அவற்றை மையப்படுத்தி ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் அறிக்கைகளையும் ஆவணங்களையும் வெளிக்கொணர்ந்தவர்.
* ஆசியா வெளியீட்டகம் " எனும் பதிப்பு நிறுவனத்தை ஒழுங்கமைத்து படைப்பாக்கங்களை வெகிக்கொணர்ந்தவர்.
* அக்காலத்தில் பிரான்ஸில் வெளிவந்த மாற்றுச் சஞ்சிகைகளான தேடல் , ஓசை இவற்றிற்கான நிதி ஆதாரங்களை ஒவ்வொரு இதழுக்கும் வழங்கிவந்தவர்.
இப்படியாக ஒரு சமூக முன்னோடியாக இயங்கிய அவரை காலக்கிரமம் பாராது ஒரு மேதின மதியம் 1.45 மணிக்கு அவரது வீட்டில் வரவேற்று உபகரித்த ஒருவனால் அவர் மனைவி , மனைவின் தாயார் ,மகன் மூவரும் இருக்க சாப்பிட்ட கையோடு எழுந்து அக் கொலைகாரனுக்கு கதவு திறந்துவிட்டு , மனைவியை வந்தவனுக்கு சாப்பாடு போடக் கூப்பிட்டபோது ஒரு நம்பிக்கை அங்கு கொலையுண்டுபோனது. இந்த நம்பிக்கைத் துரோகம் ஈழத்தமிழர் இறுதிக்கால ஊழி வரை தொடர்ந்து வந்திருக்கிறது.

சபாலிங்கத்தின் தாயார் கொன்றவனுக்கு ஆணையிட்ட தலைவனுக்கு அவன் தலைமறைவாக இருந்த காலங்களில் உணவழித்துப் பாதுகாத்தவர். சபாலிங்கத்திற்கு பிரபாகரன்மேல் அவன் ஆரம்ப கால நிலவரங்களை உடனிருந்து அறிந்தபடியால் ஒரு கருத்தில்லை, மதிப்பீடு இல்லை. தன்னிலும் வயது மிகக் குறைந்த தங்கள் குழாமில் இருந்துவரும் ஒரு தற்குறியாய் கணிப்பீடு இருந்தது.

பிரபாகரன் சையிக்கிள் திருட்டில் சம்பந்தப்பட்டு தேடப்பட்ட ஒரு இலங்கைப் பத்திரிகைப் பெட்டிச்செய்தியின் கட்டிங்கை சப்பாலிங்கம் அப்போது அவர் வீட்டில் வைத்து எனக்குக் காட்டியது மறக்கமுடியாதது.


சபாலிங்கத்தின் காலத்தில் பலர் அறப்போராளிகளாக ,முன்னோடிகளாக பரவலாக அறியப்பட்டிருந்தனர் . சேயோன் எனும் ஒரு அறப்போராளி சபாலிங்கத்துக்கு ஆதர்சமாயிருந்தார். தன் ஒரேயொரு மகனுக்கு "சேயோன் " என அவர் நினைவாக பேரிட்டழைத்தார்.

குட்டிமணி, தங்கத்துரை மற்றும் பல முன்னோடிகளைப் பார்த்துவந்த சபாலிங்கம் அவ்வழியில் ரெலோவின் பிரான்ஸ் முகவர்களில் ஒருவராக இருந்தார். அவர் கொல்லப்படும்போது பாரிஸில் இருந்து வெளிவந்த "ஈழநாடு " "Sarcelles எனும் இடத்தில் ரெலோ பிரமுகர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார் " என ஒரு பெட்டிச் செய்தியை போட்டு தன்னைத் தற்காத்துக்கொண்டது.

கொலையாளி தெரிந்த நாளென்பது பிரான்ஸிற்கு ஒரு விடுமுறை நாள், இடதுசாரி மற்றும் வெகுஜன மக்களுக்கு அப்பகல் தம் உரிமைக் கோரிக்கைகளை பதாகைகளாக ஏந்தி பெருந்தெருக்களில் ஊர்வலம் போகும் நாள். மற்றும் வெண் பூக்களை தம்மீது அக்கறையும் அன்பும் கொண்டோர்க்கு உவந்தளிக்கும் நாள்.

தன் அலுவல்கள் நிமித்தம் வேலை நாட்களில் வெளியே செல்லும் சபாலிங்கம் அன்று அகதிக் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டுபோக அவனை தன் வீட்டிற்கு வரச்சொல்லியிருந்தார். அகதியின் போர்வையில் கொலைஞர்களும் கொலைகளை விசுவாச மூச்சாக கொண்டு வாழ்ந்தவர்களும் வந்து நிறைந்த மணற்றி இது.

450, 300, 270, என நூற்றுக்கு மேலேயும் கீழுமாக அகதிகள் குழந்தைகள் என தம் பாதுகாப்பான வாழ்வை ஏங்கித் தஞ்சந்தேடி தீவுகள் சமுத்திரங்கள் பெரு நிலப்பரப்புகள் எங்கும் அலைந்து திரை கடல்களில் அமிழ்ந்து காணாமற்போய் செத்தும் காப்பாற்றப்பட்டும் வரும் நெடிய காலங்களொன்றில் சபாலிங்கம் படுகொலையும் நிகழ்ந்தது.

எல்லா ஏற்பாடுகளையும் கச்சிதமாகச் செய்து கொலைக்கான முன்தயாரிப்புகளோடு ஒரு தஞ்சம் கோரும் அகதி என்றே தன்னை சபாலிங்கத்திற்கு அறிமுகமாக்கினான் அவன். கேஸ் எழுத உதவியாளர்களாக ஆனந்தராஜா என்பவரும், புத்தளத்தைச் சேர்ந்த அன்பழகன் என்பவரும் சபாலிங்கத்துடன் அவ்வப்போது உடனிருப்பதுண்டு.

சபாலிங்கம் கொலை தந்த அதிர்ச்சியில் பிரான்ஸில் இருக்க விருப்பமின்றி அன்பழகன் ஹோலண்டிலும் ஆனந்தராஜா கொலும்பிலுமாக தம் வாழ்வை அமைத்துக்கொண்டார்கள். ஆக இக் கொலைகூட இருவரை அகதியாகத் துரத்தியது.

"நாடிழந்த அகதியின் முன்னால் இருக்கும் படிகள் யாவும் செங்குத்தானவை " அது செங்குத்தான சுவரில் தலைகீழாக ஏறுவதைப் போல்வது .
இங்கு ஒரு அகதியின் போர்வையில் நடந்த கொலைக்கு இந்த அகதிச் சமூகம் எவ்வித எதிர்ப்புகளையும் பொது வெளிகளில் நடாத்தவில்லை. நான் சொல்வது சாதாரண சாமான்ய மக்களைக் குறித்து.

பிரித்தானியாவில் பிரான்ஸ் தூதரகம் முன்பு சபாலிங்கம் கொலைக்கு எதிர்ப்புத்தெரிவித்து ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அது அரசியல் ரீதியாக பண்பட்ட ஜனநாயக சூழலையும் கருத்துரிமையையும் கோரிவந்தோர் நடாத்தியது. பொதுசன மட்டத்தில் இல்லை.

ஒரு கொலை என்பது மிக சர்வ சாதாரணமாக கடந்துபோகப்படும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒரு இயல்பான நிகழ்வு என அன்று ஒரு மதிப்பீடு இருந்தது. அதையே ஈழநாடு பத்திரிகையின் பெட்டித் துணுக்குச் செய்தியும் சுட்டியது. அத்தகைய இயல்பு பேணப்பட்டதால் பின் புலிகள் அமைப்பில் பிரான்ஸில் நான்கு உட்கொலைகள் வரை நிகழ்ந்தும் அதுவும் கடந்துபோம் ! என மக்கள் கடந்துபோனார்கள். பகீரத எத்தனத்தில் இலங்கை அரசைக் குற்றஞ்சாட்டி ஒரு பரப்புரையை செய்து தம்மைத்தாமே ஆறுதல் படுத்திக்கொள்ள முடிந்தது .

சபாலிங்கத்திற்கான இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் 500 இற்கு மேற்பட்டோர் கலந்துகொண்டது அக்கால விசித்திரம் என்றே சொல்வேன். ஐரோப்பிய நாடுகள் தழுவி சபாலிங்கத்தை அறிந்தோர் , அரசியல் பிரமுகர்கள் , ஜனநாயக சிந்தனைகளை வலியுறுத்துவோர் ,பத்திரிகையாளர்கள் ,எழுத்தாளர்கள் என எல்லா மட்டங்களிலிருந்தும் கலந்துகொண்டார்கள். முன்பின் பார்த்தறியா நிறைய புதுமுகங்கள். ஒரு வன்மையான எதிர்ப்பினதும் கண்டனத்தினதும் உருத்திரண்ட பிரசன்னம்.

மாற்று ஜனநாயக தளத்தில் வெளிவந்த ஓரிரு பத்திரிகைகள், சஞ்சிகைகள் அனைத்தும் சபாலிங்கம் படத்தோடு கொலையைக் கண்டித்து பதிவுகளைச் செய்திருந்தன. "பிரபாகரன் காலத்திலிருந்த ஒருவர் பேனையைத் தூக்கியதென்றால் அது சபாலிங்கம் ஒருவர்தான் " என தராக்கி சிவராம் தாயகம் பத்திரிகையில் தன் இக் கொலைதொடர்பான ஆய்வில் குறிப்பிட்டிருந்தார்.

சபாலிங்கம் கொலை விசாரணையை வேர்செய் பொலிஸ் பிரிவு மேற்கொண்டது. பலதரப்பட்ட கோணங்களிலும் போலிஸ் விசாரணை செய்தது. சபாலிங்கத்தின் நெருங்கிய நண்பரான புஸ்பராசா அப்படி இறுதிச் சடங்கிற்கு வந்த சர்வதேச முகங்களை கூட்டி புலிகள் தான் இக் கொலையைச் செய்திருக்கவேண்டுமென தாங்கள் நம்புவதாக ஒரு வாக்குமூலம் கொடுக்க அதற்குரிய ஒரு விசாரணைப் பிரிவிற்குக் கூட்டிச்சென்றார்.

வாக்குமூலம் கொடுத்து முடியும்போது அப் பொலீஸ் விசாரணையாளர் "ஏன் இக் கொலையை இங்கு வந்திருப்பவர்கள் செய்திருக்கமுடியாது ? " என்ற ஒரு பொலிஸ் கேள்வியை வந்தவர்கள் நோக்கிக் கேட்டார். எதுவும் பேசமுடியாமல் எழுந்து வந்ததோடு முடிந்தது அன்றைய விசாரணை .

சபாலிங்கத்தின் ஆவணப்படுத்தல் நூல் வடிவில் வெளிவருவதை தடுப்பதற்காக இக் கொலை நடைபெற்றிருக்கலாம் என்பது ஒரு கோணம் . அவ் ஆவணங்கள் மற்றும் அகதி மனுக்கள் தொடர்பான அனைத்தையும் பொலிஸ் சில காலங்கள் தம் பரிசீலனையில் வைத்திருந்தது. அதற்கும் முடிவில்லை. லண்டனில் இருந்து வெளிவந்த "ஒரு பேப்பர் " பத்திரிகையில் சாத்திரி என்பவன் மிகக் கீழ்தரமாக சபாலிங்கம் தன்னிடம் அகதி மனு எழுத வந்த ஒரு பெண்பிள்ளையோடு பாலியல் ரீதியிலும் காதல் முகப்பிலும் அவருக்கு தொடர் தொந்தரவுகள் கொடுத்தத்தால் அப்பெண்ணின் சகோதரன் அதைப் பொறுக்கமுடியாது சுட்டுவிட்டதாகவும் எழுதியிருந்தான்.

பின் 2009 மே முடிவில் பலருக்கும் கிடைத்த மெஞ்ஞானம் போல சாத்திரியும் ஒருநாள் ஞானோதயம் பெற்று " தனக்கு மேலிடத்திலிருந்து அப்படி எழுத்தச்சொல்லி வந்த கட்டளையின் நிமித்தம் எழுதியதாக" ஒரு தன்னிலை விளக்கமும் குற்ற ஒப்புதல் வாக்குமூலமும் கொடுத்தான்.

சபாலிங்கம் கொலைக்காலத்தில் புலிகளின் பிரமுகர்கள் ,பொறுப்பாளர்களாயிருந்த வேலும்மயிலும் மனோகரன் ,சுவிஸ் முரளி, நோர்வே சர்வே போன்றவர்கள் 2009 இறுதிக் காலத்திலிருந்து புலிகளின் அதிகாரபூர்வ பிரச்சாரங்களால் துரோகிகளாக்கப்பட்டுவிட்டனர்.

லோரன்ஸ் திலகர் என்னவானார் என இன்றுவரை தெரியவில்லை, சபாலிங்கம் கொலையை ஒட்டி திலகர் தமக்கும் இக்கொலைக்கும் சம்மந்தமில்லை என தமிழர் புணர்வாழ்வுக் கழகம் ஊடாக மறுப்பறிகை விட்டிருந்தார். ஆனால் ஒரு மறுப்பறிக்கை விடவும் ஆளற்ற இப்போதய நிலை உண்மையில் அவலமானது. இப்படியான குடையும் குஞ்சரமுமாய் ஊர்ந்த பின்னணியில் ஆரைத்தேட ,எவரைச் சுகம் கேட்க ,ஏவம் கேட்க !

கனடா சிறையில் இருந்து ஒரு தமிழ் இளைஞன் தான்தான் சபாலிங்கம் கொலையைச் செய்ததென அவனது குற்றச் செயலோடு விசாரணை செய்த கனேடிய அதிகாரிக்கு சொன்னதாக அக் கனேடிய அதிகாரி சொன்ன தகவல் பின் எவ்வித கவனிப்புமின்றிப் போயிற்று.

ஐரோப்பாவில் ஒரு வெளிநாட்டவர் கொலை நடந்தால் அது ஒரு விடயமே இல்லை , இன்றுவரை தொடரும் குர்திஸ் துருக்கி பின்னணியில் பாரிஸில் நடந்தேறும் படுகொலைகள் அதற்கு சான்று. இவை ஒரு இயல்பான நிகழ்வுதான் என ஐரோப்பியர்கள், மற்றும் அரசுகள் அதில் கவனம் எடுப்பதில்லை. வன்முறையான வெளிநாட்டவர்கள் பற்றிய அவர்களுக்கு உகந்த மனப்பதிவுக்கு இவை பத்தோடு பதினொன்று.

சோபாசத்தியின் முதல் நாவலான "கொரில்லா " சபாலிங்கம் கொலையை முன்வைத்து எழுத்தப்பட்ட முதல் முதல் புனைவிலக்கியம் . "அவசர அவசரமாக நினைவு கூர்ந்து பின் அவசர அவசரமாக மறக்கத்தொடங்கினர் " என்ற ஒரு கவிதைக்கேற்ப சபாலிங்கம் கொலையும் காலவோட்டத்தில் மறந்துபோகும் ஒன்றாயிற்று.

மகனுக்கு 14 வயதிருக்கும்போது சுடப்படும்போது சபாலிங்கத்திற்கு 42 வயது. இப்போது சபாலிங்கம் மகன் சேயோனுக்கு 40 வயதாகிறது. ஆனால் கொலையோடு பரிதவித்துப்போன சபாலிங்கம் குடும்பம் எப்படி அந்தக் கொடூர நிகழ்விலிருந்து மீளமுடியும் ?

நன்றி : தாயகம் - அபத்தம்

Read more...

Sunday, November 27, 2022

600 பொலிஸாரும் ரணில் ன் ஹன்சார்ட்டும். அவர் கொலையாளி என்றால், அவர்கள் யார்? சுமத்திரனின் இரட்டை வேடம். ஜெகன்

2023 ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தின்போது மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற முரண்பட்டு நிற்கும் இருவேறு கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கிய ராகுல் ராஜபுத்திரன் ராசமாணிக்கமும் பிள்ளையான் எனப்படுகின்ற சிவநேசதுரை சந்திரகாந்தனும் ஒருவர் மேல் ஒருவராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். அரச வளங்களை அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி சூறையாடியுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள இக்குற்றச்சாட்டுக்கள் எவையும் வெறுமனே அரசியல் காழ்ப்புணர்சியில் கூறப்படுகின்ற விடயங்கள் என்று என்னால் கடந்து செல்லமுடியாது. அவை தொடர்பான ஒரு விரிவான உரையாடலுக்கு இருதரப்பினரையும் அழைத்துள்ளதுடன் , இரு தரப்பாலும் உலாவ விடப்பட்டிருக்கின்ற ஆவணங்களின் உண்மைத்தன்மை தொடர்பில் போதிய ஆய்வின் பின்னர் பேசுவது பொருத்தமாகும் என எண்ணுகின்றேன்.

மேற்படி இருவருக்குமிடையேயான குற்றச்சாட்டுக்களின்போது பாராளுமன்ற உறுப்பினர் சுமத்திரன் தனது கட்சியின் உறுப்பினரின் பெயர் „சாணக்கிய ராகுல் ராஜபுத்திரன் ராசமாணிக்கம்" திரிவுபடுத்தப்படுகின்றது என சிறப்புரிமைக் கேள்வியை எழுப்பியதுடன், சிவநேசதுரை சந்திரகாந்தன் ஒரு கொலையாளி என்றும் அதனை ரணில் விக்கிரமசிங்கவே தனது 06.05.2022 திகதிய உரையில் கூறியுள்ளமை ஹன்சார்ட் ல் பதிவாகியுள்ளதாகவும் ஆத்திரமும் ஆவேஷமும் அடைந்தது தொடர்பில் நிறைய புதிய சந்தேகங்கள் எழுந்துள்ளதுடன், இதுவரை இருந்துவந்த சந்தேகங்கள் பலவற்றுக்கும் விடையையும் தந்துள்ளது.

இலங்கை சோசலிஸ சனநாயக குடியரசின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள கடவுச்சீட்டில் குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் பெயர் ஆங்கிலத்தில் „Shanakiya Rahul Rajaputhiran Rasamanickam „ என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் தேர்தல் திணைக்களத்திற்கு வழங்கியுள்ள தகவலின் பிரகாரம் இலங்கைப் பாராளுமன்ற இணையத்தளத்தில் அவரது பெயர் ஆங்கிலத்தில் „Shanakiyan Rajaputhiran Rasamanickam" என பதிவிடப்பட்டுள்ளது. இந்த இரட்டை பெயர் தொடர்பில் சாதாரணமான சந்தேகங்கள் காணப்படும்போது, அப்பெயர்கள் வெளிப்படுவது தொடர்பில் சுமந்திரன் ஆத்திரமடைந்தவிதம் பலத்த சந்தேகங்களை கொடுக்கின்றது.



பிறப்பத்தாட்சிப் பத்திரத்தின் பிரகாரம் வழங்கப்படும் கடவுச்சீட்டில் காணப்படும் „சாணக்கிய" „சாணக்கியன்" ஆகியமையும் அங்கே காணப்பட்டும் „ராகுல்" நீக்கப்பட்டுள்ளமையும் தமிழ் மக்களிடம் வாக்குகளை வசூலிக்கும்போது, அவர் பிறப்பால் யார் என்ற கேள்வி எழுவதை தவிர்ப்பதற்காகவும் தமிழ் மக்களை வழமைபோல் ஏமாற்றுவதற்காகவும் மேற்கொள்ளப்பட்ட திருகுதாளமாக இருக்க முடியும் என இத்தனை காலமும் யாவரும் கடந்து சென்றபோதும், இன்று இரட்டை பிரஜாவுரிமை கொண்டுள்ளவர்கள் இலங்கை பாராளுமன்றில் அங்கத்தவர்களாக இருக்க முடியாது என்ற சட்டம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவடைந்துவரும் நிலையில் சுமந்திரனின் தடுமாற்றம், இங்கே ஆள்மாறாட்டம் இடம்பெற்றுள்ளதா? அவ்வாறு இடம்பெற்றிருந்தால் கட்சியின் தலைமையும் அதற்கு பொறுப்புக்கூறவேண்டுமாகையால், சுமந்திரன் பதறுகின்றாரா? என்ற கேள்விகளுடன் சுமந்திரனின் இரட்டை வேடத்திற்கு செல்வோம்.

600 பொலிஸாரைக் கொன்ற கொலையாளியே பிள்ளையான் என்றும் இவ்விடயத்தை பாராளுமன்றிலே இன்றைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 06.05.2022 தெரிவித்துள்ளமை ஹன்சார்ட்டில் பதிவாகியுள்ளதாகவும் சுமந்திரன் கூறுகின்றார். 1990 ம் ஆண்டு கிழக்குப் பகுதியில் சரணடைந்த சுமார் 600 பொலிஸார் அம்பாறை மாவட்டம் திருக்கோயில் பகுதியில் வைத்து கோழைத்தனமாக புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டமை யாவரும் அறிந்த விடயம். ஆனால் 1990ம் ஆண்டு ஆனி மாதம் 11 அல்லது 12 ம் திகதி இப்படுகொலை இடம்பெற்றபோது, பிள்ளையான் அவ்வியக்க உறுப்பினராக இருக்கவில்லை என்பது வெளிப்படையான உண்மை.

குறித்த கொலை இடம்பெற்றபோது அவ்வியக்க உறுப்பினராக இருந்திராதபோதும், பிள்ளையானை அக்கொலைகளின் கொலையாளியாக எடுத்துக்கொள்ளலாமா என்பதுதான் விடயம். சரணடைந்து நிராயுதபாணிகளாகவிருந்த மேற்குறித்த 600 பொலிஸாரையும் உலக யுத்த நியதிகளை மீறி கொலை செய்து அது ஒரு பயங்கரவாத இயக்கம்தான் என புலிகளியக்கம் மீண்டும் தன்னை நிரூபித்து நின்றபோது, அவ்வியக்கத்தின் கொள்கையை ஏற்று 1991 ம் ஆண்டு புலிகளியக்கத்தில் பிள்ளையான் இணைந்து அவ்வியக்கத்தை பலப்படுத்தியிருக்கின்றார் என்றால் அவ்வியக்கத்தின் சகல குற்றங்களுக்கும் கூட்டாக பொறுப்புக்கூறவேண்டியவர்தான் என்ற தர்க்கத்தை சுமந்திரன் முன்வைப்பாரானால், அத்தர்க்கத்தை நான் ஏற்றுக்கொள்வதுடன் பிள்ளையான் 600 பொலிஸாரைக் கொன்ற கொலையாளிதான் என்பதையும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

அவ்வாறாயின், 600 பொலிஸார் கொல்லப்பட்ட விடயத்தில் பிள்ளையான் கொலையாளிகள் பட்டியலில் இணைக்கப்பட்டால் அங்கு தவிர்கமுடியா அடுத்த கேள்வியாதெனில், அவ்வியக்கத்தின் அங்கத்தினர் அனைவரும் 600 பொலிஸாரையும் கொன்ற கொலையாளிகள் என்றுதானே எடுத்துக்கொள்ளவேண்டும். எனவே மாவீரர்கள் , முன்னாள் போராளிகள் என்பவர்கள் யார்? அவர்களும் கொலைக்குற்றவாளிகளாகத்தானே இருக்கவேண்டும். கொலையாளிகளை மாவீரர்கள் எனப்போற்றுவது நகைப்புக்குரியதல்லவா?

ஆகவே கொலைக்குற்றவாளிகளை மாவீரர்கள் மற்றும் போராளிகள் என்று போற்றுவது எந்த விதத்தில் நியாயம் என சுமந்திரனைக் கேட்கின்றேன். அதாவது தங்களது அரசியல் பித்தலாட்டங்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி நிற்போரை முன்னாள் போராளிகள் என்பார்கள், தங்களது வாக்குவங்கியை நிரப்புவதற்காக கொலையாளிகளை மாவீரர்கள் என விளக்கேற்றி அர்ச்சிப்பார்கள், தங்கள் அரசியல் பாதைக்கு குறுக்கே செல்வோரை கொலையாளிகள் என்பார்கள். இது அயோக்கியத்தனமான இரட்டை வேடம் இல்லையா?

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com