Monday, November 14, 2022

ராஜீவ் காந்தி கொலையில் புலிகளின் தொடர்பு : முடிச்சி எவ்வாறு அவிழ்ந்தது? தொடர் 03 - பிறேம்குமார்

ராஜிவ் குண்டு வெடித்து தான் சாக போகிறார் என தெரிந்த ஹரிபாபு எப்படி அந்த குண்டு வெடிப்பில் சிக்கினான்? இதற்கு விடைக்கான 7/5/1991 க்கு போவோம் அந்த தேதியில் முன்னாள் பிரதமர் வி.பி சிங் தேர்தல் பிரச்சாரத்தில் சென்னையில் கலந்து கொண்டார். முன்னாள் பிரதமருக்கு எந்த அளவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது என சோதிக்க விரும்பிய சிவராசன் தனுவிடம் ஒரு டம்மி குண்டை கட்டி வி.பி சிங்கிடம் தனு மாலையிட்டு காலில் விழுந்து பட்டனை அழுத்தி ஒத்திகை பார்ப்பதாக முடிவு செய்தனர்.

விடுதலை புலிகள் தங்களின் முக்கிய தாக்குதல் எல்லாவற்றையும் புகைப்படம் எடுத்து ஆவனப்படுத்தும் வழக்கம் வைத்து இருந்தனர் அதன்படி நம்பிக்கையான நபராக ஹரிபாபுவையும் தங்கள் குழுவில் இனைத்து கொண்டனர்.

வி.பி சிங்க் காலில் கெடுபிடியை மீறி தனு விழுந்து டம்மி குண்டு பட்டனையும் சரியாக அழுத்தினார் அப்பொழுது ஏற்பட்ட தடுமாற்றதால் ஹரிபாபுவால் புகைப்படம் எடுக்க இயலவில்லை. இதனால் ஹரிபாபுவை சிவராசன் கடுமையாக கடிந்து கொண்டான்.

ராஜிவ் படுகொலையில் அது போல தவறு நடந்துவிட கூடாது என்ற உந்துததாலும். வெடிகுண்டின் வலிமை தெரியாமலும் கொஞ்சம் நெருங்கி சென்றதே ஹரிபாபு உயிரை பறித்தது.

இரண்டாம் கடித்ததில் பாக்கியநாதன் , தாஸ் ( முருகன் ) , அறிவு ( பேரறிவாளன் ) என புதிய பெயர்கள் கிடைத்தது இவர்கள் யார் ? எப்படி ஒருங்கினைந்தனர் ? என்ற கேள்வி தோன்றியது.
இதற்கு பதில் தேடிய பொழுது அதீத எச்சரிக்கை உனர்வின் காரனமாக வந்து சிக்கி பதில் தந்தார் ஒருவர், அவர் ஹரிபாபுவின் முதலாளி சுபா சுந்திரம் !!

இதற்கிடையே ஹரிபாபு அப்பா தன் மகன் ஹரிபாபுவுக்கும் விடுதலை புலிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், சிறப்பு புலனாய்வு குழு திட்டமிட்டு இதில் தன் மகனை சிக்க வைக்க பார்ப்பதாகவும் பிரஸ் மீட் ஏற்பாடு செய்து தெரிவித்தார்.

இதன் பிறகு அவரை சந்தித்து சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் பேசியபொழுது தான் அப்படி பிரஸ் மீட் கொடுக்க விரும்ப வில்லை என்றும், ஹரிபாபுவின் முதலாளி சுபா சுந்தரம் தான் அப்படி பிரஸ் மீட் கொடுக்க சொல்லி நெருக்குதல் தந்ததாக சொன்னார்.

மேலும் தன் மகன் இறந்த பிறகு வீட்டில் கட்டுகாடாய் இருந்த விடுதலை புலிகள் நோட்டீஸ் புத்தம் எல்லாவற்றையும் வேறு எங்காவது கொண்டு போயி வைக்கும் படி அவர் சொன்னதாலேயே பின்னாடி வீட்டில் கொண்டு போயி வைத்தாகவும் சொன்னார்.

சுபா சுந்தரம் பிரபலமான போட்டோ சாப் முதலாளி பல்வேறு அரசியல் தலைவர்களுடன் தொடர்பில் உள்ளவர்.
இதனிடையே ராஜிவ் கொலை செய்யப்பட்ட பொழுது வந்த பத்திரிக்கையாளர் அனைவரையும் தனி தனியாக விசாரித்தனர்.
அப்போழுது ஒரு நிருபர் தான் ஹரிபாபுவை பார்த்து பேசி கொண்டு இருந்ததாகவும் அப்பொழுது உடன் நின்ற குர்தா கண்ணாடி அனிந்த நபர் ( சிவராசன் ) யார் என்று கேட்ட பொழுது, சுபா ஸ்டுடியோ பார்ட்னர் என ஹரிபாபு சொன்னதாகவும், ஆனால் அந்த நபர் எதுவும் பேச வில்லை என்று குறிப்பிட்டார்.

ஹரிபாபு இறந்த பொழுது அவர் பையை போலீஸ் துளாவிய பொழுது அதில் போட்டோகிராப்பர் ஐ.டி கார்டும் , சுபா ஸ்டுடியோ விசிட்டிங் கார்டும் இருந்துள்ளது. அதை பார்த்துவிட்டு சுந்தரத்துக்கு போன் செய்து ஹரிபாபு இறப்பு பற்றி பேசிய பொழுது, அப்படி யாரையும் தனக்கு தெரியாது என்று சொல்லி உள்ளார். இதை அந்த போலீஸ்காரரும் குறிப்பிட்டு உள்ளார்.

தேள்கடி ராம மூர்த்தி என்ற பத்திரிக்கையாளர் ஒரு அதிர்ச்சிகரமான தகவல் சொன்னார்.
அதில் ஹரிபாபு சுபா சுந்தரத்திடம் வேலை பார்க்கும் நபர் என்று தனக்கு தெரியும் என்றும் அன்று தனும் ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்து சென்றதகவும் ஹரிபாபு இறந்தவுடன் சுபா சுந்தரத்துக்கு போன் செய்ததாகவும், அப்பொழுது அவன் செத்தால் சாகட்டும் அந்த கேமிராவை எடுத்து வந்தால் எத்தனை கோடி வேண்டுமானாலும் தருவதாக சொன்னார் என்றும், ஆனால் தான் மறுத்து விட்டதாகவும் போலிஸ் ஸ்டேசனில் வந்து சொல்லி உள்ளார்.


அவர் இதை சொன்ன கொஞ்சம் நேரத்திலேயே தனக்கு இருந்த போலீஸ் நட்பு மூலம் தெரிந்து கொண்ட சுபா சுந்தரம் தேள்கடி ராமமூர்த்திக்கு கொலை மிரட்டல் விடுத்து உள்ளார். பயந்துபோன அவர் சிறப்பு விசாரணை அதிகாரிகளை சந்தித்து உண்மையை சொன்னார். இதனை அடுத்து சுபா சுந்தரம் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரனையில் புலிகள் பங்கு மேலும் தெரிந்தது.

சுபா சுந்தரத்திடம் நடத்திய விசாரனையில் தனக்கு எதுவும் தெரியாது என்றவர், ஒரு கட்டத்தில் ஹரிபாபு வீட்டில் கைப்பற்றபட்ட பிரசுரம் அச்சடிக்கப்பட்ட இடம் மட்டும் தெரியும் என்றார். அந்த அச்சகம் bbl alrounder என்ற பெயரில் செயல்பட்டது. அதன் உரிமையாளர் பாக்கியநாதன் (நளியின் தம்பி). ஹரிபாபு வீட்டில் கிடைத்த கடித்ததில் பாக்கியநாதன் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது இவரை விசாரனை அதிகாரி நேரில் வீட்டுக்கு சென்று விசாரித்தனர். ஹரிபாபுவை தெரியும் என்பதை தாண்டி எந்த விபரமும் பாக்கியநாதனிடம் இருந்து பெற இயலவில்லை.

மேலும் குடும்பத்தை பற்றி விசாரித்த பொழுது தனக்கு ஒரு தங்கை கல்யானி, தாய் பத்மா மட்டுமே இருப்பதாகவும் அப்பா இறந்து விட்டதாக குறிப்பிட்டு இருந்தார். (அக்கா நளினியை மறைத்து உள்ளார் ) மேலும் நோட்டிஸ் அச்சடித்து கொடுத்தது அவ்வளவு பெரிய குற்றம் இல்லை என்பதால் அதிகாரி திரும்பி வந்தார்.

இதற்கிடையே தஞ்சையில் சந்தேகத்துக்கு இடமாக சுற்றிய ஒரு இலங்கை தமிழரை கைது செய்தனர். அவன் பெயர் சங்கர் என்னும் விக்னேஸ்வரன் என்னும் ரூசோ. அவனிடம் சோதனை செய்ததில் துண்டுச் சீட்டில் இரண்டு டெலிபோன் நம்பர்கள் இருந்தன.

‘நளினி தாஸ் – 2419493’ என்று ஓர் எண். இன்னொன்று, ‘சிவராசா – 2343402.’ அதன் அடிப்படையில் அந்த இரு எண்களுக்கும் போன் செய்து விசாரித்ததில் முதல் எண், அடையாறில் இருந்த அனபான் சிலிக்கான்ஸ் என்னும் நிறுவனத்தின் டெலிபோன் நம்பர் என்று தெரிந்தது. இரண்டாம் நம்பர் போரூரில் உள்ள மளிகை கடை எண் என தெரிந்தது.

இதற்கிடையே விசாரணையின்போது ரூசோ, தன்னை விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என்பதை ஒப்புக் கொண்டார். அவர் தஞ்சாவூர் பக்கத்தில் நடமாடிய காரணத்தால், அந்தப் பகுதியில் வேறு யாருக்காவது விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் அவரை விசாரித்தார்கள். அந்த விசாரணையில் ரூசோ, மற்றொருவரைக் காட்டிக் கொடுத்தார்.

இந்த நபர், தஞ்சாவூரில் இருந்து அதிக தொலைவில் இல்லாத கடலோர கிராமமான திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்தவர். தொழில் ரீதியாக கடத்தல்காரர். விடுதலைப் புலிகளுக்கு தேவையான பொருட்களை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைப்பதில் இவர் உதவுவதாக ரூசோ தெரிவித்தார். தமிழக போலீஸார் இந்த திருத்துறைப்பூண்டி கடத்தல்காரரைக் கைது செய்தனர். அவரை விசாரித்தபோது, புலிகளுக்கு தேவையான பொருட்களை யாழ்ப்பாணம் அனுப்பி வைப்பதற்கு உதவி செய்வதை அவர் ஒப்புக் கொண்டார். அதில் புலனாய்வுக்குழு அதிகம் அக்கறை காட்டவில்லை. காரணம் அந்தக் காலப் பகுதியில், தமிழகத்தின் கடலோரப் பகுதியில் வசித்த பலரது முழுநேர தொழிலே, புலிகளுக்கு பொருட்கள் அனுப்புவதுதான். மத்திய, மாநில அரசுகள் அதை கண்டும் காணாமலுமாக இருந்து வந்தன.

இதனால், புலிகளுக்காக பொருட்கள் கடத்துவதை பெரிய தண்டனைக்குரிய குற்றமாக கருதி அவரை விசாரிக்கவில்லை புலனாய்வுக்குழு. அவர்களது விசாரணை முழுவதும் ராஜிவ் கொலையை மையமாக வைத்தே இருந்தது. ராஜிவ் கொலையுடன் புலிகளுக்கு ஏதாவது தொடர்புகள் இருந்தனவா என்ற விபரங்களை அறியும் விதத்திலேயே கேள்விகள் கேட்கப்பட்டன.

இந்த திருத்துறைப்பூண்டி கடத்தல்காரருக்கு விடுதலைப்புலிகளுடன் நல்ல பரிச்சயம் இருந்தது. ஆனால், புலிகள் ஸ்ரீலங்காவில் இருந்து இந்தியாவுக்கு வரும்போது மட்டுமே இவரைக் கடந்து செல்வார்கள். கடற்கரையில் இருந்து தமிழகத்துக்குள் சென்று சென்றுவிட்டால், அவர்கள் என்ன நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்பது இவருக்கு தெரியாது. தமிழகத்தின் எந்த நகரத்துக்கு செல்கிறார்கள் என்றுகூட இவருக்கு தெரியாது.

இதனால் இந்தக் கடத்தல்காரரிடம் இருந்து உபயோகமான தகவல் ஏதும் புலனாய்வுக் குழுவுக்கு கிடைக்கவில்லை. விசாரணையை முடித்துக்கொண்டு அவரை அனுப்பிவிடலாம் என இவர்கள் முடிவு செய்த நேரத்தில், என்ன தோன்றியதோ, புலனாய்வு அதிகாரி ஒருவர் தமது ஜீப்புக்குச் சென்று அதன் கிளவ் கம்பார்ட்மென்ட்டில் வைக்கப்பட்டிருந்த கவர் ஒன்றை எடுத்து வந்தார். அதனுள் சில போட்டோக்கள் இருந்தன. ராஜிவ் காந்தி கொல்லப்படுவதற்கு முன், ஹரிபாபுவால் எடுக்கப்பட்ட போட்டோக்கள் அவை. அந்த போட்டோக்களை கடத்தல்காரரிடம் காட்டிய புலனாய்வு அதிகாரி, “இந்த போட்டோவில் இருப்பவர்களில் யாரையாவது உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்டார்.

போட்டோக்களைப் பார்த்துவிட்டு கடத்தல்காரர், “இதோ இவரைத் தெரியும்” என்று காட்டிய நபரைக் கண்டதும் அதிகாரிகளுக்கு தூக்கிவாரிப் போட்டது. காரணம் இவர்கள் ‘அடையாளம் தெரியாத மர்ம நபர்’ என ‘எக்ஸ்’ போட்டு வைத்திருந்த நபர் அவர். போட்டோவில் குர்தா-பைஜாமா அணிந்து கொண்டிருந்த அந்த நபர் யார் என்று அறிவதற்குதான் இவர்கள் பத்திரிகை விளம்பரம் எல்லாம் கொடுத்து தலைகீழாக முயற்சி செய்து கொண்டிருந்தார்கள்!

“சரியாகப் பார்த்துச் சொல்லுங்கள். போட்டோவில் உள்ள இந்த நபரையா தெரியும் என்கிறீர்கள்?”
“ஆம். இவரேதான். இவர் கடல் வழியாக தமிழகத்துக்கு வரும்போது சில தடவைகள் சந்தித்திருக்கிறேன். இவரும் விடுதலைப்புலிதான்”
“இவருடைய பெயர் தெரியுமா?”
“சிவராசன் என்று அழைப்பார்கள். இவருக்கு ஒரு கண் மட்டும்தான் உண்டு. மற்றைய கண் ராணுவத்துடன் யுத்தம் புரிந்தபோது பறிபோனதாக சொன்னார்”
இந்தக் கட்டத்தில்தான், ராஜிவ் கொலையின் மாஸ்டர்மைன்ட் நபரின் பெயர் சிவராசன் என்பது புலனாய்வுக் குழுவுக்கு முதல் தடவையாக தெரியவந்தது.

தஞ்சையில் ரூசோவிடம் இருந்த நளினியின் கம்பேனி போன் நம்பர் ராஜிவ் கொலையில் பங்கேற்றவர்கள் தொடர்பானது என போலிஸ் நினைக்கவில்லை. எனவே அந்த நம்பருக்கு போன் செய்து நளினியை கேட்டதும் அவர் வேலைக்கு வரவில்லை என்ற பதில் கிடைத்ததும் சரி என்று விட்டு விட்டனர்.
இதற்கிடையே ராஜிவ் கொலையில் ஹரிபாபு எடுத்த போட்டாவை மேசையில் வைத்து அதிகாரிகள் பேசி கொண்டு இருந்த பொழுது அதில் சுபா, நளினி இருக்கும் புகைப்படத்தை வைத்து இது யாராக இருக்கும் என்று பேசி கொண்டு இருந்து உள்ளனர் . அப்பொழுது பாக்கியநாதன் வீட்டுக்கு விசாரனைக்கு சென்று வந்த அதிகாரி நான் இந்த பெண்னை பார்த்து இருக்கேன்.
எங்கே ?
பாக்கியநாதன் வீட்டு பேமிலி போட்டாவில்..

உடனடியா அனைவரும் பாக்கியநாதன் வீட்டுக்கு சென்றனர். இவர்களை பார்த்த பாக்கியநாதன் தப்பிக்க முயற்சி செய்தான். விடாமல் பிடித்து பாக்கியநாதன், அவன் அம்மா பத்மா இருவரையும் கைது செய்தனர். நளினி எங்கே என விசாரித்த பொழுது அவர் காதலன் தாஸ் என்னும் முருகனோடு தலைமறைவாகி விட்டதாக தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டோரிடம் நடத்திய விசாரனையில் சில உண்மைகள் புலப்பட்டது
பேபி சுப்ரமனியம் : விடுதலை புலியின் முக்கிய தலைவர்களிள் ஒருவன். 83 க்கு பிறகு தமிழ்நாட்டில் தங்கிய பேபி சுப்ரமனியம் 89 வரை தமிழ்நாட்டில் விடுதலை புலிகளுக்கான தளத்தை உருவாக்கும் வேலை பார்த்தார் பின் 89 க்கு பிறகு இலங்கை சென்ற பேபி 2009 இறுதி போரில் மே மாதம் உயிர் இழந்தார்.

இவரை பற்றி எதுக்கு இப்ப சம்பந்தம் இல்லாமல் என்று எண்ண வேண்டாம், பேபி சுப்ரமனியம் தமிழ்நாட்டில் தங்கிய காலத்தில் பல அரசியல் தலைவர்களுடன் நெருக்கம் பேணினான் , இயக்கத்துக்காக பல இளைஞர்களை தயார் செய்யும் பணியிலும் இருந்தான். அப்படி தான் சுபா சுந்தரத்துடன் நெருக்கமாகி உள்ளான். சுபா சுந்தரத்திடம் வேலைக்கு சேர்ந்த ஹரிபாபு, பாக்கியநாதன் , பேரறிவாளனும் பேபி சுப்ரனியத்துடன் நெருக்கமாகி உள்ளனர்.

இதில் இன்னொரு பெயரும் முக்கியம் அது முத்துராஜா.
முத்துராஜா இந்தியராக இருந்தபோதிலும், ஈழ விடுதலை லட்சியத்துக்காகத் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்டவர். முத்துராஜாவின் தாயும், தங்கையும் சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தனர். அந்த வீட்டை விடுதலைப்புலிகள்தான் வாடகைக்கு எடுத்திருந்தனர். அதில் ஓர் அறை மட்டும் பேபி சுப்பிரமணியத்துக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.

ஒரு கட்டத்தில் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவினர் முத்துராஜா இல்லாமல் தமிழகத்தில் எதுவும் செய்வதில்லை என்ற நிலைமை இருந்துள்ளது.
இந்திய அமைதிப் படையுடன் புலிகள் யுத்தம் புரிந்தபின், தமிழகத்தில் இருந்து விடுதலைப்புலிகள் அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக வாபஸ் வாங்கிக் கொண்டிருந்த காலப்பகுதி அது. யாழ்ப்பாணத்திற்குச் செல்வதற்கு முன் புலிகளின் பிரசுரங்களை அச்சிடுவதற்கு பேபி சுப்பிரமணியத்தால் பயன்படுத்தப்பட்டு வந்த விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குச் சொந்தமான அச்சகம், மிகச் சொற்ப விலைக்கு பாக்கியநாதனுக்குத் தரப்பட்டது. அப்படி தான் bbl alrounder அச்சகம் பாக்கியநாதனுக்கு சொந்தமானது அந்த அச்சகத்தை அவரது தொழிலுக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றபோதிலும், போராளிகள் தொடர்பான அச்சுப்பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பாக்கியநாதனிடம் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, இந்தியாவில் பாக்கியநாதனின் அக்கா நளினி, அவரது தாயாருடன் சண்டையிட்டுக் கொண்டு வேறு இடத்தில் தனியாகத் தங்கப் போய்விட்டார். அவருக்கு விருப்பமென்றால், சில நாட்களுக்கு விடுதலைப்புலிகள் வாடகைக்கு எடுத்த வீட்டில் தனது தாயார் மற்றும் சகோதரியுடன் தங்கியிருக்குமாறு நளினியை முத்துராஜா கேட்டுக் கொண்டார்.

சில நாட்கள் முத்துராஜா வீட்டில் தங்கியபின், நளினி அங்கிருந்து வெளியேறி மகளிர் விடுதி ஒன்றில் சேர்ந்தார். அதையடுத்து, வில்லிவாக்கம் ஹைகோர்ட் காலனியில் ஒரு வீட்டைப் பிடித்து வாடகைக்குக் குடியேறினார் நளினி.

இந்த வீட்டில்தான் ராஜிவ் கொலைக்கான பூர்வாங்க வேலைகள் தொடங்கின என்கிறார்கள்!

தொடரும்… முந்திய பகுதிகள் தொடர் கட்டுரைப் பகுதியில்..

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com