Thursday, January 21, 2021

யாழ்ப்பாண காமக்குற்றவாளி இளங்குமரன். By நட்சத்திரன் செவ்விந்தியன்

இலங்கைப் பல்கலைக்கழகங்களில் நீண்டகாலமாக அதிகளவில் பல்கலைக்கழக மாணவிகளை தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகத்துக்கோ பாலியல் வல்லுறவுக்கோ உட்படுத்தியவர் செல்லையா இளங்குமரன். 1985ம் ஆண்டிலிருந்து இன்றுவரை யாழ் பல்கலைக்கழகபுள்ளிவிபரவியல் விரிவுரையாளராக இருந்த இவர் இன்று அதே பல்கலைக்கழகத்தில் புள்ளிவிபரவியல் பேராசிரியராக இருக்கிறார்.

இளங்குமரன் பாலியல் பலாத்காரங்களை தன் மாணவிகள்மீது செய்யத்தொடங்கிய எண்பதுகளின் நடுப்பகுதி சிவில் நிர்வாகம் சீரழிந்திருந்த போர்க்காலம். கிழக்கு மாகாண காரை தீவைச்சேர்ந்த இளங்குமரன் 1980ல் யாழ் பல்கலைக்கழக மாணவராக யாழ்ப்பாணத்துக்கு வருகிறார். 1985ல் அதே பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளரானதிலிருந்து 40 வருடங்களுக்கு மேலாக அவர் வசிப்பது யாழில்தான். (1999 இலிருந்து 2002 வரை நியூசிலாந்து Massey university ல் Ph.d செய்த காலம் தவிர). பாதிக்கப்பட்ட மாணவிகள் வஞ்சினத்தில் இளங்குமரனுக்கு வழங்கிய பட்டப்பெயர் "கரும்புடையன்"

"கரும்புடையன்" இளங்குமரன் 

எண்பதுகளின் இறுதியில் யாழ் பல்கலைக்கழகத்தில் Non Academic Staff(Clerk) ஆன நுணாவிலைச்சேர்ந்த வசந்தி என்பவரை உடலுறவுகொண்டு காதலிப்பதாக ஏமாற்றினார். பிரச்சனை அப்போதைய துணைவேந்தர் துரைராஜாவிடமும் புலிகளிடமும் சென்றதால் கட்டாயத்தினால் அப்பெண்ணேயே மணமுடித்தார். குடும்பத்தோடு அவர் இப்போது வசிப்பது 19A மாரியம்மன் லேன், திருநெல்வேலி தெற்கு, யாழ்ப்பாணம்.

இருந்தும் இவரது குற்றங்கள் கணிசமாக அதிகரிக்க பாதிக்கப்பட்ட மாணவர்கள் 1994 ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் அப்போது புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்ததால் புலிகளிடம் முறையிட்டார்கள். 1994 ல் புலிகளின் காவல்துறை இளங்குமரனை கைது செய்து விசாரித்தது. மாணவிகளை தனது அறைக்கு அழைத்து தன்னோடு உடலுறவு கொள்ளுமாறு வற்புறுத்துவது. இணங்குகிற மாணவிகளுக்கு அதிக புள்ளி வழங்குவது. இணங்காதவர்களின் விடைத்தாள் பக்கங்கள் சிலதை கிழித்து அகற்றி அவர்களை தேர்ச்சியடையவைக்காமல் Fail ஆக்குவது என்பதே இளங்குமரனின் நடைமுறை. புலிகளின் காவல்துறை சிறையிலிருந்த இளங்குமரனை பல்கலைக்கழகத்துக்கு கொணர்ந்து மாணவிகளின் விடைத்தாள்களையும் பரிசீலித்தது. அப்போது விடைத்தாள்கள் சில கிழிக்கப்பட்டதற்கான ஆதாரத்தை கண்டது.

குணபாலன் செல்வரத்தினம் (இப்போது முது விரிவுரையாளர், தென்கிழக்கு பல்கலைக்கழகம்)

இளங்குமரன் தான் தப்பிவருவதற்காக கிழக்கு மாகாண புலிகளை பயன்படுத்தினார். இதற்கு அவர் தேர்ந்தெடுத்தது தனது யாழ் பல்கலைக்கழக மாணவரான தம்பிலுவிலைச் சேர்ந்த குணபாலன் செல்வரத்தினம் என்பவரை. இவருடைய சகோதரியையே மாவீரரான மேஜர் டயஸ் கந்தசாமி மணமுடித்திருந்தார். யாழ்ப்பாணம் ஈச்சமோட்டையைச் சேர்ந்த மேஜர் 1989ல் யாழில் இறக்கமுன் நீண்டகாலம் கிழக்கு மாகாணத்தில் கேணல் கருணாவின் கீழ் புலிகளில் இயங்கியவர். அப்போதே அவர் தம்பிலுவில் குணபாலன் சகோதரியை காதலித்து மணமுடித்திருந்தார். இந்த தொடர்பை பாவித்து குணபாலன் கருணாவை அணுகினார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் வேறு பல யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த விரிவுரையாளர்களும் பேராசிரியர்களும் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும்போது ஏன் கிழக்கு மாகாண இளங்குமரன் மட்டும் தண்டிக்கப்படவேண்டும் என்கிற பிரதேசவாதம் பயன்படுத்தப்பட்டடது. ( பல யாழ் விரிவுரையாளர்களும் பாலியல் பலாத்காரங்கள் செய்வது அப்பட்டமானாலும் அதிகளவில் நீண்டகாலம் பாலியல் பலாத்காரம் செய்தது இளங்குமரனே) கருணா இவ்விடயம் சம்பந்தமாக பிரபாகரனிடம் அழுத்தம் கொடுத்ததை பாதிக்கப்பட்ட மாணவர்கள் அறிந்திருக்கிறார்கள். இளங்குமரன் புலிகளின் காவலிலிருந்தபோது பாதிக்கப்பட்ட மாணவர்கள் ஒரு கூட்டத்தை யாழ் பல்கலைக்கழகத்தில் கூட்டினார்கள். அக்கூட்டத்தில் சக மாணவரான செல்வரத்தினம் குணபாலன் மேடையிலேறி வெளிப்படையாகவே இது ஒரு பிதேசவாத சதி என்று குற்றஞ்சாட்டினார். இளங்குமரன் பாலியல் குற்றங்கள் செய்வதை மறுக்காத குணபாலன் பாலியல் குற்றங்கள் செய்கிற டல யாழ் விரிவுரையாளர்களை விட்டு மட்டக்களப்பானான இளங்குமரன் மட்டும் ஏன் தண்டிக்கப்படவேண்டும் என்பதை தனது வாதமாக்கினார். மேஜர் டயஸ் கந்தசாமியின் மச்சானான குணபாலன் பகிரங்கமாக மேடையேறுகிறார் என்றால் இது புலிகளின் தயவில்லாமல் நடக்காது என்பதை மாணவர்கள் நன்குணர்ந்து தம் நடவடிக்கையை கைவிட்டார்கள்.

கருணா கொடுத்த அழுத்தத்தால் புலிகள் பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகளுக்காக தாம் நீதி வழங்குவதை கைவிட்டு இளங்குமரனை விடுதலை செய்தார்கள். யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் இலங்கை சட்டப்படி அவர்மீது நடவடிக்கை எடுக்கலாம் என்ற மறைமுக செய்தி விடுக்கப்பட்டது.

இலங்கை சிவில் நிர்வாகம் இயங்கமுடியாத 1994 யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகத்துக்கு நெருக்கடி. அக்கால யாழ் பல்கலைக்கழகம் பாலியல் பலாத்காரங்கள் நிறைந்த சாக்கடை. இருந்தும் மாணவர் சமூகம் முழுவதும் இளங்குமரனின் பெருமளவு பாலியல் குற்றங்களை அறிந்ததால் பல்கலைக்கழக நிர்வாகம் வேறு வழியின்றி இளங்குமரன் பல்கலைக்கழக சுற்று வட்டாரத்துக்கு வரக்கூடாது என்ற Out of Bounds உத்தரவு வழங்கியது.

1995ன் பின் இலங்கை அரசாங்க கட்டுப்பாட்டுக்குள் வந்த யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஒன்றுமே நடக்காதவாறு இளங்குமரன் தன் விரிவுரையாளர் பதவியை தொடர்ந்தார். பல்கலைக்கழகம் யாழ்ப்பாணத்தில் இயங்கலாமா என்ற சிக்கல் வேறு இருந்தது. புலிகள் யாழ் பல்கலைக்கழகத்தை இயங்க அனுமதித்து அதனை தமது இரகசிய நடவடிக்கைகளின் கூடாரமாக்கியது இளங்குமரனுக்கு வாய்ப்பாகிற்று. இக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் அரச சிவில் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருந்த EPDP கட்சியுடன் இளங்குமரன் நெருக்கமாக இருந்தார். யாழ் பல்கலைக்கழகத்தை இக்காலத்தில் புலிகள் தமது தமது ராணுவ புலனாய்வு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தினர். இளங்குமரனும் இவ்வாறே புலிகளால் சமநேரத்தில் பயன்படுத்தப்பட்டார். தனது இரண்டாங்கால பாலியல் குற்றங்களை இக்காலநிலையை பயன்படுத்தி இளங்குமரன் (ஒரு டபுள் ஏஜண்டாக) தொடர்ந்தார்.

"பொன்" பாலசுந்தரம்பிள்ளை

யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர்களாக இக்காலத்தில் வந்தவர்களுக்கு அறம் கிடையாது. பக்கா சந்தர்ப்பவாதிகள். முக்கியமாக பொன் பாலசுந்தரம்பிள்ளை , மோகனதாஸ் போன்றவர்கள். 2007 இலிருந்து 2011 வரை துணைவேந்தராக இருந்த என்.சண்முகலிங்கனே ஒரு பாலியல் குற்றவாளி. சண்முகலிங்கன் பல்கலைக்கழக மொட்டைமாடியில் மாணவியொருவரை இணக்கி பாலுறவு கொண்டிருந்தபோது கையும் களவுமாக பிடிபட்டவர். இருந்தும் அப்போதைய துணைவேந்தர் மோகனதாஸ் இதனை மூடி மறைத்தார்.

"சடையன்" சண்முகலிங்கன் 

ஆக இக்காலம் காமுகன் இளங்குயரனின் பொற்காலம். 1985 இலிருந்து 2015 வரை 30 ஆண்டுகளாக தொடர்ச்சியாக மாணவிகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய புள்ளிவிபரவியல் பேராசிரியரின் பாலியல் புள்ளிவிபரங்களை இப்போது பார்ப்போம். மிகக்குறைந்த Conservative மதிப்பீடுகளையே நாம் எடுத்தாலும் ஒரு ஆண்டுக்கு 10 மாணவிகளை இவர் வல்லுறவுக்குட்படுத்தியதாக எடுத்தாலும் குறைந்தபட்சம் 300 பாலியல் வல்லுறவுகளின் குற்றவாளி. சந்தேகமில்லை இது கத்தோலிக்க பாதிரிகளின் கின்னஸ் சாதனைகளையே உடைக்கிற மகா பாதக "கின்னஸ் சாதனை". யுத்தத்தின் முதல் சாவு உண்மை - Truth is the first casualty of the war. சரி யுத்தம் 2009 ல் முடிந்தபின் நிலமை சீரானதா? இல்லவே இல்லை. ஆனால் 2010 ல் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கிளர்ச்சி செய்தார்கள். பகிரங்கமாக யாழ் பல்கலைக்கழகத்தில் பாலியல் வல்லுறவு செய்யும் பேராசிரியர்/ விரிவுரையாளர் பெயர்களைப்போட்டு வீதிகளில் நோட்டீஸ் ஒட்டினார்கள்.

2010ல் மாணவர்கள் வெளியிட்ட துண்டுப்பிரசுரம்

இதில் குறிப்பிடப்பட்டிர்ப்பவர்கள் 1. இளங்குமரன் 2. விசாகரூபன்(தமிழ்) 3. நவரத்தினம்(ராமநாதன் அக்கடமி) 4. அருந்தாகரன்

பேராசிரியர் விசாகருபன் 

அருந்தாகரன்(தமிழ் துறை)

இக்காலம் சமூக வலைத்தள காலம் வேறு. பாலியல் குற்றங்கள் யாழ் பல்கலைக்கழகத்தில் சிறிது குறைந்தாலும் இளங்குமரன் அதே பழைய புள்ளிவிபரத்தை தொடர்ந்தார். விளைவுகள் 2016/7 ல் சிக்கலானது. இளங்குமரன் பல்கலைக்கழக நிர்வாகத்தால் வேறு வழியின்றி இடைநிறுத்தப்பட்டார். இளங்குமரனுக்கு யாழ் பழமைவாத சமூகத்தைப்பற்றி நன்கு தெரியும். பகிரங்கமாக பாதிக்கப்பட்ட எந்த பெண்ணுமே தனக்கெதிராக சாட்சி சொல்ல வரமாட்டார்கள் என்று. (புலிகளின் காவல் துறை விசாரித்தபோது பாதிக்கப்பட்ட பெண்கள் சாட்சியாகியிருந்தார்கள். வெளிப்படைத்தன்மை- Transparency புலிகளின் விசாரணையில் இல்லை என்பதை நன்கறிந்து) யுத்த காலத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் இப்போது வெளிநாட்டில். இளங்குமரன் இலங்கை நீதிமன்றில் தனது மனித உரிமை மீறப்பட்டதாக முறையீடு செய்து வென்றிருக்கிறார். கையாலாகாத நிலையில் யாழ் பல்கலைக்கழகம். இளங்குமரனை பேராசிரியராக்கி முழுச்சம்பளத்தையும் வழங்கிக்கொண்டிருக்கிறது. இளங்குமரனை எந்த கற்பித்தல் நடவடிக்கையையும் இன்னமும் அனுமதிக்கவில்லை.

ஏகபத்தினி/ ஏக பத்தினம்/ கற்பு என்பவற்றை இன்னமும் அனுசரிப்பதாக பீற்றுகிற யாழ்ப்பாண சமூகம் குறைந்தது 300 பெண்களை அதிகார துர்ப்பிரயோகம் செய்து( முதல் குற்றம்) பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய( இரண்டாம் குற்றம்) செல்லையா இளங்குமரனை பேராசிரியராக்கி யாழ்ப்பாணத்தில் வைத்து முழுச்சம்பளமும் வழங்குகிறது. தனது சம்பளத்தோடு " வீட்டோடு மாப்பிளையாக" இளங்குமரன் இருக்கிறார்.

இதைவிட கேவலமானது இந்த Serial காமக்குற்றவாளி யாழ் பல்கலைக்கழகத்தினதும் கிழக்கு பல்கலைக்கழகத்தினதும் துணைவேந்தர் பதவிகளுக்கு விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப் பட்டமையானது தமிழ் சமூகத்தின் அற வங்குரோத்தை அம்பலப்படுத்துகிறது.

யாழ் பல்கலைக்கழகத்தில் பல விரிவுரையாளர் பேராசிரியர்கள் தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவுகள் செய்து வருவதால் பல்கலைக்கழ நிர்வாகம் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க தயங்கி வருகிறது. நன்கு அறியப்பட்ட யாழ் பல்கலைக்கழ குற்றவாளிகளான என்.சண்முகலிங்கன்(முன்னாள் துணைவேந்தர்), கிருஷ்ணபிள்ளை விசாகரூபன்(தமிழ் பேராசிரியர்), சிறி தர்சனன் ( இசைத்துறை தலைவர்)

துணைவேந்தர் வசந்தி அரசரட்ணத்தின் நெருங்கிய உறவினர் சிறி தர்சனன்

புவியியல்துறை பேராசிரியர் கருணாகரன் சுதாகர் 

இவர்கள் எல்லோரையும்விட கேவலமானவன் தற்போதைய அரசியல்துறை பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் 2005 ம் ஆண்டு தன் வீட்டில் 13 வயதான புதுக்குடியிருப்பைச் சேர்ந்த முத்தையா யோகேஸ்வரி என்ற தன் வீட்டில் சட்டவிரோதமாக வேலைக்காரியாக வைத்திருந்த சிறுமியை 40 தடவைகளுக்குமேல் வன்புணர்ந்து சட்டத்தில் மாட்டினான். கணேசலிங்கம் கைது செய்யப்பட்டு யாழில் வழக்கு நடந்தது. நீதி ஈழத்தில் நீண்டதல்வவா! அப்போது பாதிக்கப்பட்ட சிறுமி புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த ஊருக்கு( புதுக்குடியிருப்பு) சென்றபோது புலிகளின் இறுதியுத்தத்தில் கட்டாய ஆட்சேரப்பில் பலியாகினாளா/ இப்போதும் உயிரோடு சாட்சியம் கொடுக்க பயத்தோடு இருக்கிறாளா என்பது யாருக்கும் தெரியாது. அவள் சாட்சியாக யாழ் நீதி மன்றுக்கு மீளவில்லை. ஆகவே கணேசலிங்கம் வன்புணர்வு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அவன் இப்போது பேராசிரியனாகிவிட்டான்.

மலையக சிறுமியை 40 தடவை வன்புணர்ந்த யாழ் அரசியல் பேராசிரியர்

இளங்குமரன் இப்போதும் இளங்குமரனாக யாழ் பல்கலைக்கழகத்திலிருக்கிறான்.

பகுதி 02 தொடரும்....

நன்றி Jaffnafashion.com By நட்சத்திரன்செவ்விந்தியன் (புலனாய்வு பத்திரிகையாளர், கவிஞர், எழுத்தாளர், இலக்கிய அரசியல் விமர்சகர்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com