Wednesday, August 12, 2020

தேசிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ஹரினி அமரசூரிய

2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி இடம்பெற்ற பொதுத்தேர்தலில் தேசியப்பட்டியல் மூலம் தேசிய மக்கள் சக்திக்கட்சிக்கு தேசியப்பட்டியல் எம்.பி பதவியொன்று கிடைத்துள்ளது.

தேசிய மக்கள் சக்திக் கட்சியின் தேசியப்பட்டியலைப் பிரதிநிதித்துவப்படுத்திய, இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர், கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கே இந்த எம்.பி பதவி வழங்கப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது.

எவ்வாறாயினும் தேசிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியலில் முன்மையிலிருந்தவர் தேசிய மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க என்பதுடன், அவருக்கு குறித்த பதவி கிடைக்காமையும் சுட்டிக்காட்டப்பட வேண்டியதொன்றாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com