Sunday, July 5, 2020

நாட்டை ஒரு குலுக்குக் குலுக்கப் போகிறோம்... பாதாள உலகக் கோஷ்டி எச்சரிக்கை!

போதைப் பொருள் வியாபாரம் மற்றும் பாதாள உலகக் கோஷ்டியினரின் செயற்பாடுகள் பற்றிய விடயங்களை வௌிச்சத்திற்குக் கொண்டுவர வேண்டாம் என சிங்களச் செய்திப் பத்திரிகை நிறுவனமொன்றிற்கு அடிக்கடி தொலைபேசி அழைப்புக்கள் வந்தவண்ணமே உள்ளன எனத் தெரியவருகின்றது.

குறிப்பிட்ட தகவல்கள் வௌியிடுவதை நிறுத்தாவிட்டால், குறித்த சிங்களப் பத்திரிகைக்கு செய்திகள் வழங்கும் ஊடகவியலாளர்கள் இருவரின் வாய்களைப் பொத்த வைப்போம். அதற்கு எதிராகச் செயற்பட்டால் நாட்டையே ஒரு குலுக்கு குலுக்குக்கச் செய்யக்கூடிய செய்தியொன்றை இரு வாரங்களுக்குள் வெளியிடுவோம் எனவும் பாதாள உலகக் கோஷ்டியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பில் குறித்த பத்திரிகை நிறுவனம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com