Sunday, July 26, 2020

ரணிலுக்குப் பிறகு ஜனாதிபதி நானே... கட்டியம் கூறுகின்றார் நவீன்

ரணில் விக்கிரமசிங்கவின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவியை தான் விரும்புவதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான நவின் திசாநாயக்க குறிப்பிட்டார்.

அதற்கு ரணில் விக்கிரமசிங்கவின் உதவி தனக்குத் தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். தான் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராவதற்கு மக்கள் தனக்கு ஆதரவு நல்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நுவரெலியாவில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டமொன்றில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அந்நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரசிங்கவும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com