Thursday, July 9, 2020

எனது கரங்கள் கோத்தாவின் கரங்களைப் பலப்படுத்தும்! - மைத்திரி

நாட்டுக்காகப் பணிபுரியும் போது தான் எந்தவொரு கட்சியையும் கருத்திற்கொள்ளவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

லங்காபுர பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றும்போது,

நாட்டை ஆளும்போது பல்வேறு தடைக்கற்கள் வந்தபோதும் தான் அவ்வாறான தடைக்கற்களையெல்லாம் படிக்கற்களாகக் கொண்டு ஆட்சி செய்தேன். சுதந்திரக்கட்சி மற்றும் நாட்டைக் கருத்திற்கொண்டு தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு தன்னுடைய ஆதரவை நல்கவுள்ளதாகவும், அவரது கரங்களைப் பலப்படுத்தவுள்ளதாகவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com