Wednesday, July 29, 2020

பொதுத்தேர்தலின் பொருட்டு ஒருவாரம் அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை!

இம்முறை நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள குறித்த வாரத்தில் நாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இன்று கல்வியமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, கல்வியமைச்சர் டளஸ் அழகப்பெரும இவ்வாறு தெரிவித்தார். அதற்கேற்ப எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4,5,6,7 ஆம் திகதிகளில் பாடசாலைகள் மூடப்படவுள்ளன. நாட்டின் அனைத்துப் பாடசாலைகளினதும் 11,12,13 ஆம் ஆண்டுகளுக்கான கல்வி நடவடிக்கைகள் ஜூலை 27 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதால் அந்த வகுப்புக்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com