Friday, July 17, 2020

கொரோன செயற்பாடுகளிலிருந்து முழுமையாக விலகுவதற்கு சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தீர்மானம்!

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற அனைத்துச் செயற்பாடுகளிலிருந்தும் விலகிக் கொள்வதற்காக இலங்கை மக்கள் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இன்று பகல் 12.30 மணியளவில் அதற்கான அனைத்துச் செயற்பாடுகளிலிருந்தும் நீங்குவதாக அச்சங்கத்தின் தலைவர் எம்.ஜி.யூ. ரோஹண குறிப்பிட்டார்.

சுகாதார அமைச்சின் செயலாளருக்கு குறித்த விடயம் தொடர்பில் எழுத்து மூலம் அறிவிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், சட்ட ரீதியான பாதுகாப்பின்றி, இந்த விடயத்தில் தலையிட முடியாது எனவும் அவர் தெளிவுறுத்தினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com