Friday, July 10, 2020

சுகாதாரப் பரிசோதகர்கள் விடயத்தில் அரசாங்கம் அசிரத்தையாக இருந்தால் கொரோனா அலைக்கு முகங்கொடுக்க நேரிடும்.

கொவிட் 19 ஐ கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தின் மூலம் சட்டம் ஒழுங்கமைக்கப்பட்டு, அதற்கேற்றாற்போல தனிமைப்படுத்தல் தொடர்பிலான சட்டத்தை வர்த்தமானி அறிக்கை மூலம் அவசரமாக வௌிக்கொணர வேண்டும் என மக்கள் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண குறிப்பிட்டார்.

சுகாதாரப் பரிசோதகர்ளின் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக்கூறிய அவர், அவ்வாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதுவிடின் கொவி்ட் 19 இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்துவதில் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் எனவும் குறிப்பிட்டார்.

நாத்தாண்டிய - கொட்டாரமுல்ல பிரதேசத்தில் 09 வீடுகளில் 37 பேரை தனிமைப்படுத்துவதற்கு சுகாதார அதிகாரிகள் தற்போது நடவடிக்கை எடுத்துவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com