Sunday, July 12, 2020

கொவிட் தாக்கத்திற்குள்ளான மேலும் 19 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்!

கொவிட் -19 தொற்றாளர்கள் இன்னும் 19 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞான அலகு தெரிவித்துள்ளது.

கந்தக்காடு சிகிச்சையளித்தல் மற்றும் புனர்வாழ்வு நிலையத்திலிருந்து சேனபுர புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட 76 பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய 14 பேர் அவர்களுடன் தொடர்புற்றவர்கள் எனவும் சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

இலங்கையில் தற்போதைக்கு 2605 பேர் கொவிட் - 19 பாதிப்புக்குள்ளாகியுள்ளார்கள். வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை – 613. இதனிடையே ஒருவர் பூரண குணமடைந்துவீட்டுக்குச் சென்றுள்ளார். இதறகேற்ப 1981 பேர் இதுவரை பூரண குமைடைந்து சென்றுள்ளனர்.

இலங்கையில் தற்போதைக்கு கொவிட் 19 பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2515 ஆக இருப்பதுடன், அவர்களின் 523 பேர் வைத்தியசாலைகளில் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com