Sunday, July 19, 2020

மேல்மாகாணத்தில் பொலிஸார் சுற்றி வளைப்பு 1563 பேர் கைது!

நேற்றுப் முற்பகல் 6 மணியிலிருந்து பிற்பல் 6 மணிவரை மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதலின்போது, பிடியாணைக்குரிய 771 பேரும் வெவ்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில் 1563 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் ஆலோசனையின் பேரில் இந்த்த் தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹெரோயின், ஐஸ் உட்பட ஏனைய போதைப்பொருட்களைத் தம்வசம் வைத்திருந்தோர் 792 பேரும் நேற்றுக் கைது செய்யப்பட்டிருந்தனர். மேலும் முகமூடி அணியாமை மற்றும் சமூக இடைவெளியைப் பேணாமை தொடர்பில் 3,061 பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com