இளம் சந்ததியினரை போதைப்பொருளுக்கு அடிமைப்- படுத்துபவர்குளுக்கு எதிராக கடுஞ்சட்டம் - கமல் குணரத்ன
இலங்கையின் இளம் சந்ததியினரை போதைப் பொருளுக்கு அடிமைப்படுத்துகின்ற தனிநபர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாகப் பிரயோகிக்க வேண்டும் என பாதுகாப்புச் செயலாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான கமல் குணரத்ன தெரிவிக்கின்றார்.
சீதுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பாதுகாப்புச் செயலாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாட்டில் இன்று பெரும்பாலான இளம் சந்ததியினர் போதைப் பொருளுக்கு அடிமையாகி வருகின்றனர். அவர்களைக் காப்பாற்ற வேண்டியது தலையாய கடமையாகும். எனவே, இது தொடர்பில் அரசாங்கம் அதிகம் கவனம் செலுத்தி, போதைப் பொருளிலிருந்து இளம் சந்ததியினரைக் காப்பற்ற ஆவன செய்ய வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
சீதுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பாதுகாப்புச் செயலாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாட்டில் இன்று பெரும்பாலான இளம் சந்ததியினர் போதைப் பொருளுக்கு அடிமையாகி வருகின்றனர். அவர்களைக் காப்பாற்ற வேண்டியது தலையாய கடமையாகும். எனவே, இது தொடர்பில் அரசாங்கம் அதிகம் கவனம் செலுத்தி, போதைப் பொருளிலிருந்து இளம் சந்ததியினரைக் காப்பற்ற ஆவன செய்ய வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment