Monday, June 29, 2020

பேராயர் தொடர்பில் தான் இன்னும் அதேநிலையில்தான்.. என்றாலும் இனி எதுவும் பேசமாட்டேன்! ஹரின்

பேராயர் மால்கம் ரஞ்சித் தொடர்பாக தான் இன்னும் அதே நிலையில் இருப்பதாக முன்னாள பாராளுமன்ற உறுப்பினரும் ஜன பலவேகய கட்சியின் வேட்பாளருமான ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இருப்பினும், பேராயர் குறித்து இனி கருத்து தெரிவிக்க மாட்டேன் என்றும் அவர் கூறினார்.

சஜித் பிரேமதாச மற்றும் பேராயரின் சந்திப்புக் குறித்து அவரிடம் விசாரித்தபோது அவர் இதனை கூறினார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பேராயர் மல்கம் ரஞ்சித் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக அரசியலில் ஈடுபட்டதாக ஹரின் பெர்னாண்டோ வெளியிட்ட அறிக்கை பல்வேறு கட்சிகளினாலும் விமர்சிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com