Saturday, June 13, 2020

குழந்தையைப் பிரசவித்து தேயிலைத்தோட்டத்திற்குள் புதைத்த தாய் கைது! நோர்வூட்டில் சம்பவம்

தனக்குப் புதிதாகப் பிறந்த குழந்தையை தாயொருத்தி தேயிலைத் தோட்டத்தில் புதைத்த சம்பவம் குறித்து நோர்வுட் பொலிஸார் விசாரணை நடாத்தி வருகின்றனர்.

நோர்வூட் குடியிருப்பில் வசிக்கும் 26 வயதுடைய தாயே இவ்வாறு குழந்தையொன்றைப் பிரசவித்துள்ளதாகவும், அந்தக் குழந்தையை அருகே உள்ள தேயிலைத் தோட்டத்தில் அடக்கம் செய்ததாகவும் தகவல் கிடைத்த தகவலின்படி, குறித்த தாயை சந்தேகத்தின் பேரில் நோர்வூட் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பெண் திருமணமாகாத பெண் என்றும், அவருக்கு ஏற்கனவே ஒரு மகன் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அந்தப் பெண்ணின் தாய் வெளிநாடு சென்றுள்ளதாகவும், தனது தந்தையுடன் நோர்வூட் குடியிருப்பில் வசித்துவருவதாகவிம் குறித்த பெண் தெரிவித்தாக பொலிஸார் தெரிவித்தனர்.

புதிதாகப் பிறந்த குழந்தை அடக்கம் செய்யப்பட்ட இடத்தை நோர்வூட் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர், முதற்கட்ட விசாரணையின் பின்னர், ஹட்டன் மாவட்ட நீதவான் குழந்தையின் உடலை பரிசோதித்து மீட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com