Friday, June 19, 2020

அவர் சிறிசேன.. இவர் நந்தசேன... சேனாக்கள் இரண்டும் ஒன்றேதான்...! - ஹிருணிகா

தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இன்று செய்கின்ற அதே வேலைகளைத்தான் அன்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் செய்தார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கருத்துரைக்கும்போது,

அதிகாரிகளுக்குச் சீறிப் பாய்வதால் அரசியலில் தான் மாற்றம் கொண்டு வந்ததாக அவர் நினைக்கின்றார். ஜனாதிபதி மத்திய வங்கி அதிகாரிகள் மீது குற்றம் சுமத்துவதற்குக் காரணம் அவரது சகோதரனான பிரமர் மஹிந்த ராஜபக்ஷ மீது இருக்கின்ற கோபத்தின் வௌிப்பாடாகவும் இருக்கலாம். அவர் சிறிசேன... இவர் நந்தசேன.. சேனாக்கள் இருவரும் ஒன்றுதான்... எனவும் மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com