Sunday, June 21, 2020

சிறைக்கைதிகளுக்கு கைத்தொலைபேசி வழங்கிய சிறைக்காவலர்களுக்கு ஆப்பு!

சிறைவாசம் அனுபவித்து வருகின்ற போதைப்பொருள் விற்பானையாளர்களுக்கு கைத்தொலைபேசிகளை வழங்கியமை தொடர்பில் சிறைக்காவலர்கள் இருவரின் தொழில்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய இதுதொடர்பில் குறிப்பிடுகையில், மாத்தறை சிறைக்காவலர் ஒருவரும் மஹர சிறைக்காவலர் ஒருவருமே இவ்வாறு தொழில் நீக்கம் செய்யப்பட்டவர்களாவர் எனக் குறிப்பிட்டார். போதைப்பொருள் விநியோகித்தமை தொடர்பில் சிறைப்படுத்தப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு தொலைபேசிகள் 03 இனை வழங்கியமை தொடர்பிலலேயே இந்த சிறைக்காவலர்கள் இருவரும் சிறைச்சாலை அதிகாரிகளினால் கைது செய்ய்ப்பட்டுள்ளனர்.

தொழில் நீக்கம் செய்யப்பட்டுள்ள சிறைக்காவலர், மாத்தறைச் சிறையில் போதைப் பொருள் விநியோகித்ததன் பேரில் சிறைப்படுத்தப்பட்டுள்ள குற்றவாளிக்கு தொலைபேசியொன்றை கையளிக்க முற்பட்டபோதே இவ்வாறு கைது செய்ய்ப்பட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com