குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு : மக்கள் மகிழ்ச்சியில்
பூநகரி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிகளில் உள்ள மக்கள் எதிர்கொண்டிருந்த குடி நீர் பிரச்சினைக்கு கிளிநொச்சி மாவட்ட செயலகம் பாதுகாப்பு அமைச்சினுடாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலையின் காரணமாக பூநகரி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுகளில் வாழ்ந்து வரும் குடும்பங்கள் தமக்கான குடிநீரினை பெற்றுக்கொள்வதில் பெரிதும் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.
இரண்டு பிரதேச செயலர் பிரிவையும் உள்ளடக்கிய வகையில் 2052 குடும்பங்களைச் சேர்ந்த 6876 பேர் குடி நீர் பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்வதாக கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு சுட்டிக்காட்டியிருந்தது.
இதன் காரணமாக கிளிநொச்சி மாவட்ட செயலகம் பாதுகாப்பு அமைச்சினுடாக மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் பிரிவின் உதவியுடன் குடிநீரினை வழங்குவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
இன்றைய தினம் பூநகரி பிரதேச செயலர் பிரிவில் இதற்கான முதற்கட்ட திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. மக்கள் குடிநீரினை பெற்றுக் கொண்டதோடு தமது மகிழ்ச்சினையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
0 comments :
Post a Comment