Wednesday, May 27, 2020

ஜனாதிபதி இதுவரை என்னதான் கிழித்தார்....? வினா தொடுக்கிறார் சம்பிக்க

'பணிபுரிவதற்காகவே நான் வருகின்றேன்' என்று அதிகாரத்திற்கு வந்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்கள் ஆறு மாதங்களில் ஒரு செங்கல்தானும் வைக்கவில்லை என, முன்னாள் அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தன் ஆட்சிக் காலத்தில் வரிக்கு மேல் வரி அறிவிடும் பணியைத்தான் செய்துள்ளார்.

ராஜித்த சேனாரத்னவை கைது செய்திருப்பதற்கான காரணம் சட்டவிரோத செயலுக்காக அல்ல எனக் குறிப்பிட்ட அவர், எந்தவொரு எதிர்ப்பு வந்தாலும் தான் முன்வைத்த காலை பின்னோக்கி வைக்கப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com