Monday, May 4, 2020

பாடசாலைகளைத் திறப்பது தொடர்பில் கல்வியமைச்சர் என்னதான் சொல்கிறார்?

கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பில் கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும மாத்தறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தார்.

சுகாதாரப் பிரிவினர் மற்றும் கொரோனா ஒழிப்புப் பிரிவினரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன என அவர் அங்கு தெரிவித்தார்.

இம்மாதம் 11 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படும் என முன்னர் தெரிவித்திருந்தபோதும், தற்போதைய சூழ்நிலையில் அதுதொடர்பில் உறுதியாக எதுவும் கூற முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

பாடசாலைகள் திறப்பு தொடர்பில் அரசியல்வாதிகள் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு தான் ஒருபோதும் தீர்மானங்களை எடுக்கப்போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com