Saturday, May 23, 2020

பிழையான வழியில் செல்வோரின் இறக்கைகளை அறுத்துவிடுவேன் என்கிறார் தயாசிரி!

கட்சிக்குள் நின்றுகொண்டு பிற கட்சிகளுடன் சேர்ந்து பூச்சாண்டி காட்டும் புள்ளிகள் சிலரை வெகுசீக்கிரம் கட்சியிலிருந்து நீக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிரி ஜயசேக்கர தெரிவித்தார்.

இவர்களின் ஒரே நோக்கம் கட்சியைத் துண்டாடுவதும், இல்லாதொழிப்பதுமே. அவர்கள் வேறு கட்சிகளிலிருந்து வந்து சேர்ந்துள்ள பசுத்தோல் போர்த்திய புலிகள்.

எனவே, அவர்களின் குறித்த விடயங்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவர்களைக் கட்சியிலிருந்து தள்ளிவிடவுள்ளதாகவும் தயாசிரி ஜயசேக்கர தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com