Sunday, May 3, 2020

ஸஹ்ரானுக்கும் இப்ராஹீம் புதல்வர்களுக்கும் ஆதரவு நல்கியவர் கைது!

சென்ற வருடம் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட ஸஹ்ரான் ஹாஷிம் மற்றும் மொஹமட் இப்ராஹீம் என்பவரின் புதல்வர்கள் இருவரும் பிரச்சாரங்கள் மேற்கொள்வதற்காக சகல பங்களிப்புக்களையும் நல்கிவந்தவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரை கற்பிட்டி பிரதேச குற்றப்புலனாய்வுத் திணைக்கள உறுப்பினர்கள் கைது செய்துள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன இதுதொடர்பில் கருத்துரைக்கும்போது, மதுரங்குளி பொலிஸ் பிரிவில் உள்ள அஸார் நகரில் நடாத்திச் செல்லப்பட்ட அமைப்புப் பற்றி தேடுதல் வேட்டையையும் குற்றப்புலனாய்வுப் பிரிவு மேற்கொண்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com