Thursday, May 28, 2020

மே 31 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஊரடங்கு... !

எதிர்வரும் ஜூன் மாதம் 06 ஆம் திகதி சனிக்கிழமை வரையும் பின்னர் நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் முறை பற்றி ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

அதற்கேற்ப, 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படும். ஜூன் மாதம் 01 ஆம் திகதி திங்கட்கிழமையிலிருந்து ஜூன் 03 ஆம் திகதி வரை அனைத்து மாவட்டங்களுக்கும் ஊரடங்குச் சட்டமானது முன்னர் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கைப் போன்று இரவு 10.00 மணிக்குப் பிறப்பிக்கப்பட்டு, அதிகாலை 4.00 மணிக்குத் தளர்த்தப்படவுள்ளது.

ஜூன் மாதம் 04 ஆம் திகதி வியாழக்கிழமை மற்றும் ஜூன் மாதம் 05 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இருநாட்களும் நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படும். ஜூன் மாதம் 06 ஆம் திகதி சனிக்கிழமையிலிருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் மீண்டும் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் முன்னரைப் போன்று, இரவு 10.00 மணியிலிருந்து அதிகாலை 4.00 வரை ஊரடங்கு அமுல்படுத்தப்படும்.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களைத் தவிர ஏனைய மாவட்டங்களுக்கு போக்குவரத்துச் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com