Saturday, April 11, 2020

கோரோனா விடயத்தில் அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகளைப் பாராட்டியுள்ளார் கரு!

கொவிட் -19 வைரசு பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் மேற்கொண்டுவரும் செயற்பாடுகளைப் பாராட்டி, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

பொதுமக்கள் நெருக்கமாக ஒன்றுகூடுவதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொண்டுள்ள திட்டங்கள், கோவிட் - 19 பரவுவதைத் தடுப்பதற்கு ஆவன செய்துள்ளது என, முன்னாள் சபாநாயகர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியத் தேவைகளை வழங்கும்போது, சுகாதார சேவையினரும் பொலிஸாரும் மிகவும் சிறப்பாகத் தங்களது கடப்பாடுகளை நிறைவேற்றி வருகின்றனர் எனவும் முன்னாள் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப, செயற்படுவதற்கு முடியாது போனால் அதன்மூலம் நாட்டில் பொதுச் சுகாதாரம் மற்றும் பொருளாதாரம் சரிவை அடையும் என்பதை யாராலும் தடுக்க முடியாது போகும் எனவும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com