Sunday, April 5, 2020

தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து வீடு சென்றவருக்கு கொரோனா தொற்று!

கொரியாவில் தொழில்புரிந்துவிட்டு இலங்கை வந்தடைந்தவர்களில் சிலர் கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் சிலர் தனிமைப்படுத்தல் காலம் முடிவடைந்து சென்ற 24 ஆம் திகி தத்தமது வீடுகளுக்குச் சென்றனர். அவர்களுள் களுத்துறைப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்குக் கொரோனா வைரசுத் தொற்றுள்ளதாக பின்னர் தெரியவந்தது. அதன்பின்னர் அந்த நபருடன் பேருந்து வண்டியில் காலிக்கு வருகைதந்த ஆறுபேர் நேற்றைய தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர் பணிமனை தெரிவித்தது.

இந்த ஆறுபேரில் ஒருவர் மாத்தறை கொட்டவில - லெபீம வைத்தியசாலையிலும் ஏனைய ஐந்து பேரும் கராப்பிட்டி போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தென் மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர் பணிமனை அலுவலர் ஒருவர் இதுதொடர்பில் குறிப்பிடும்போது, இவர்கள் ஆறு பேருக்கும் கொரோனா தொற்றுள்ளதா எனப் பரிசோதனை செய்வதற்காக பீ.சீ.ஆர். பரிசோதனைக்காகவே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com