Sunday, April 26, 2020

சட்டமா அதிபர் திணைக்கள நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பம்

சட்டமா அதிபர் திணைக்களத்தின் கடமைகளை நாளை முதல் ஆரம்பிக்கவுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திணைக்களத்தின் நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கு சுகாதார சேவைகள் ஆணையாளர் நாயகத்தின் அனுமதி கிடைத்துள்ளதை தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கடமைகளை முன்னெடுப்பதற்கான ஆலோசனைகளுக்கு அமைய சட்டமா அதிபர் திணைக்களத்தின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com