Monday, April 6, 2020

தளர்த்தப்பட்ட ஊரடங்கின் மீள் அமுலுக்கு வந்துள்ள நேரங்கள்!

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இன்று பிற்பகல் 2.00 மணிக்கு அனைத்து மாவட்டங்களிலும் அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டமானது எதிர்வரும் 09 ஆம் திகதி காலை 6 மணிக்குத் தளர்த்தப்பட்டு மீண்டும் அன்றைய தினம் பிற்பகல் 4 மணிக்கு ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு வரும் என ஊடக அறிக்கையில்தௌிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளைத் தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com