வெளிநாடுகளில் 59000 இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் சிறைப்பட்டுள்ளனர்!
உலகில் இன்று ஆதிக்கம் செலுத்திவருகின்ற ெகாவிட் 19 ெதாற்றுநோய் காரணமாக பல்வேறு நாடுகளிலும் 59000 இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் சிறைப்பட்டுள்ளனர் எனத் தெரியவருகின்றது. தற்போது அவர்கள் வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் தங்களைப் பதிவுசெய்துள்ளனர் என அமைச்சு தெரிவிக்கின்றது.
தற்போதைக்கு 59419 பேர் தங்களைப் பதிவுசெய்து கொண்டுள்ளதுடன், அவர்களில் 21575 பேர் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிவோராவார்.
தற்போது வெளிநாடுகளில் சிறைப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு உதவுவதற்காக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு சென்ற மாதம் மேற்கொண்ட திட்டத்திலேயே அவர்கள் பற்றிய விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
0 comments :
Post a Comment